வெள்ளி, நவம்பர் 06, 2009

வணக்கம் நண்பர்களே ,
நேற்றைய சந்தைகள் வழக்கம் போலவே ஒரு பெரிய ஆச்சர்யதினை நமக்கு தந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் நேற்றைய சந்தைகள் துவக்கம் சற்று உலக சந்தைகளின் போக்கினை ஒட்டி சற்று சரிவுகள் அதிகமாகவே துவங்கின பின்னர் ஆசியா சந்தைகளில் ஏற்ப்பட்ட மீட்சி நமது சந்தைகளில் மீட்சியினை கொண்டு வந்தன ..

மேலும் நேற்றைய உள் துறை அமைச்சர் மற்றும் நிதி மந்திரி இருவரும் கூறிய நேரடி வரி வசூல் முறை மாற்றம் மற்றும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க உள்ள முறையில் 10 % பங்குகள் மக்களிடம் என்று ஒரு செய்தி வந்தது . இது சந்தைகளுக்கு சற்று ஒரு பெரிய உயர்வினையும் மற்றும் ஒரு எதிர் பாரத ஷார்ட் கவரிங் ஐயும் கொண்டு வந்தது .

நமது சந்தைகள் உலக சந்தைகள் ஏற்றத்தில் பங்கு கொண்டு சரிவில் விலகி நிர்ப்பது சற்று ஒரு பெரிய சிக்கலாகும் . மேலும் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் எந்த ஒரு நுட்ப காரணிகளையும் சரிவர செயல்படவிடாமல் எல்லா நிலைகளையும் உடைத்து தாண்டி சென்றும் தங்கள் காரியங்களை சாதித்து வருவதாக கருதுகிறேன் ..

நேற்றைய நமது சந்தைகள் முடிவில் 54 .75 புள்ளிகள் உயந்து 4765.55 நிலைகளில் முடிந்தன ..

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே உயர்வினை தொடர்ந்து தாண்டி சென்றே வர்த்தகம் நடை பெற்றன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 2 % உயர்வில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் மற்றும் நமது சந்தைகள் பற்றி குறிப்பிட முடியாத சூழ்நிலை நாளைய பதிவில் ஒரு காரசாரமான விவாதத்துடன் சந்திக்கலாம்


சநதையின் போக்கில் செல்லுங்கள்

நன்றி