வெள்ளி, அக்டோபர் 30, 2009

காலை வணக்கம் ..

நேற்றைய நமது சந்தைகள் சற்று உலக சந்தைகள் போக்கினை சற்று பிரதி பலித்தன . உலக சந்தைகள் சரிவினை காட்டிலும் சற்று சரிவுகள் நமது சந்தைகளில் அதிகமாகவே இருந்தன . நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் எதிர் பார்த்து போல 70 புள்ளிகள் சரிவில் துவங்கின பின்னர் சந்தைகள் சற்று மீள முயற்சித்தது . ஆனால் உலக சந்தைகள் போக்கினால் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல சரிவுகள் தொடர்வதால் நமது சந்தைகள் பலவீனமடைந்து சரிவுகளே எஞ்சின .........

நேற்றைய நமது சந்தைகள் வர்த்தக இடைவேளையின் பொழுது ஆசியா சந்தைகள் முடிவுக்கு வரும் பொழுதும் பெரிதாக சந்தைகள் இழப்பினை மீட்டெடுக்கும் என நம்பும்படியாக சந்தைகள் இல்லை ... நமது சந்தைகள் முடிவில் 75.60 புள்ளிகளை இழந்து 4750.50 என்ற நிலைகளில் முடிந்தன ..

ஆனால் நேற்றைய ஐரோப்பிய சந்தைகளில் சற்று பெரிய அளவில் சரிவுகள் இல்லை காரணம் நேற்று முன்தினம் ஐரோப்பிய சந்தைகள் சற்று பெரிய அளவிலான சரிவினை கண்டன . ஆதலால் சந்தைகள் சற்று சரிவுகள் அன்றி பிளாட் நிலைகளில் துவங்கி பின்னர் உயர்வுகளை நோக்கி செல்ல ஆரம்பித்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே உயர்வுகளில் வர்த்தகம் ஆயின . சந்தைகள் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக உயர்வுகளில் வர்த்தகம் நிலை பெற தொடங்கின . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 200 புள்ளிகள் அதிகரித்து சற்று அதிக பட்ச உயர்விலேயே வர்த்தகம் முடிந்தன ..

இன்றைய ஆசியா சந்தைகள் அமெரிக்கா சந்தைகளின் உயர்வுக்கு இணையாக சற்று அதிக பட்ச உயர்வுகளாக 2% - 3% வரை உயர்வுகளில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதே போக்கினை கடைபிடித்தே தீர வேண்டும் மேலும் இன்றைய தினம் பியுச்சர் வர்த்தகத்தின் முதல் தியதி ஆகவே சந்தைகளில் சற்று அதிக அளவிலலான பிரெஷ் லாங் பொசிசன் சந்தைகளில் அனைத்து துறை பங்குகள் மற்றும் இன்டெக்ஸ் ஆகிய அணிதிலும் உருவாகலாம் என கருதுகிறேன் ..

இன்றைய சந்தைகளில் வங்கித்துறை பங்குகள் , கட்டுமான துறை பங்குகளில் லாங் செல்லலாம் . நிப்டி ஐ பொறுத்த வரை ஓவர் செல்லிங் என வார வர்த்தக
நுட்பங்களில் தெரிய வருகிறது ஆதலால் செல்லிங் உள்ளது நல்லதல்ல ..

முடிந்தவரை இன்றைய தினம் லாங் நிலைகள் எடுக்கலாம் . ஷாட் பொசிசன் க்ளோஸ் செய்வது நலம் .

நிப்டி நிலைகள் :- ----

ஆதரவு ----- 4720 , 4700 , 4682 ....

எதிர்ப்பு ---- 4780 , 4820 , 4850 ....


நாளை சந்திக்கலாம் ....................

வியாழன், அக்டோபர் 29, 2009

அனைவருக்கும் காலை வணக்கம் ....

நேற்றைய உலக சந்தைகள் பலவும் கடுமையான சரிவினை கண்டன . நமது சந்தைகள் மற்றும் ஆசியா சந்தைகள் அனைத்தும் சற்று சரிவுகலிலே வர்த்தகத்தினை தொடங்கின . நமது சந்தைகள் துவக்கம் சற்று GAP DOWN இல் துவங்கிய போதிலும் சந்தைகள் சற்று சரிவில் இருந்து மீண்டு வந்தது . மீண்டு சந்தைகள் + ஆனது குறிப்பிடத்தக்கது .

நமது சந்தைகள் கடந்த இரு தினங்களாக முக்கிய நிலைகள் உடைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . மேலும் உலக சந்தைகள் அனைத்திலும் சற்று செல்லிங் அதிகரித்து வந்தே உள்ளன . அது நமது சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன .. என்பதினை மறுக்க முடியாது ...

நேற்றைய ஆசியா சந்தைகள் முழுவதும் சற்று அதிக சரிவினை கண்டன அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சற்று சரிவுகளிலேயே துவங்கியது நமது சந்தைகள் சற்று அதே போக்கினை கடைபிடிக்காதது சற்று ஆச்சர்யமே அல்லது நமது சந்தைகள் அதற்கு முந்தய வர்த்தக தினங்களில் சற்று அளவுக்கு அதிகமாக சரிந்தது கூட காரணமாக இருக்கலாம் ..

நமது சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் 20.50 புள்ளிகள் சரிந்து 4826 புள்ளிகளில் நிலை பெற்றன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று சரிவுகளில் இருந்தன அதன் பின்னர் சந்தைகளில்மீட்சி என்பது சற்று மருந்துக்கு கூட அல்லாமல் மீளும் மீளும் சரிவும் கண்டது . முடிவில் அமெரிக்கா சந்தையான டவ் ஜோன்ஸ் 1% வரையில் சரிவில் முடிந்தன ...

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று துவக்கத்திலேயே சற்று அதிக புள்ளிகளை இழந்து துவங்கியுள்ளது குறிப்பிட தக்கது . மேலும் உலக சந்தைகள் பலவும் லோவ் பரீஸ் ஆகியுள்ளது குறிப்பிட தக்கது . ஆசியா சந்தைகள் 2 % - 3% வரையிலும் சரிவடைந்து துவங்கி உள்ளன .

நமது சந்தைகள் அதே போல சரிவுகளில் ஆசியா சந்தைகளின் போக்கினை கொண்டே தொடரும் மேலும் இன்று பியுச்சர் வர்த்தகம் கடைசி தினம் மற்றும் இன்பிலேசன் அறிவிப்புகள் என முக்கிய நாளாக இருப்பதால் சந்தைகள் நகர்வுகள் சற்று அதிகமாக இருக்கலாம் .. நமது சந்தைகள் துவக்கம் 70 - 80 புள்ளிகள் சரிவில் துவங்கலாம் ..

கவனமாக இருங்கள் ...

நிப்டி நிலைகள் :------

ஆதரவு : ---- 4805 , 4770 , 4750 ....

எதிர்ப்பு : ---- 4850 , 4880 , 4920 ...

நன்றி !!!

புதன், அக்டோபர் 28, 2009

வணக்கம் நண்பர்களே >

நேற்றைய சந்தைகள் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் சரிவு சரிவு என சரிந்து விட்டது . நேற்றைய உலக சந்தைகள் பெரிய அளவில் சரிவுகள் கண்டன ஆதலால் நமது சந்தைகள் சரிந்தது . எப்போது நான் கூறி வருவது போல உலக சந்தைகள் சிறிய சரிவின் பொழுது நமது சந்தைகள் நன்றாக சரிந்துள்ளன .

( மேலும் நமது சந்தைகளில்எதிர் பார்க்கப்பட்ட ரிசர்வ் வங்கி பாலிசி அறிவிப்பு சந்தைகளுக்கு பாதகம் அல்லாத போதிலும் கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகைகளில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் என்ற செய்தி சந்தைகள் சரியா காரணம் ஆகும் . இதனுடன் வங்கித்துறை பங்குகளும் சற்று அதிகமாகவே சரிந்தன ... )

நேற்றைய சந்தைகள் துவக்கம் சற்று உயர்வில் இருந்தது பின்னர் சிறிது சிறிதாக சந்தைகள் சரிந்த வண்ணம் இருந்தன . ஆசியா சந்தைகள் முடிவில் 2 % வரை சரிந்துள்ளன . பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று நமது சந்தைகளுக்கு ஆதரவாக துவக்கம் சற்று பிளாட் நிலைகளில் இருந்தன . ஆனால் நமது சந்தைகளில் வந்த அதிக செல்லிங் காரணமாக சந்தைகள் சரிவில் இருந்து மீள முடியவில்லை .

மேலும் முக்கிய ஆதரவு நிலைகளான 4880 , 4850 .. ஆகிய இரு நிலைகளும் நேற்று உடைக்கப்பட்டு இருப்பது சந்தைகளின் பலவீனத்தினை காட்டுகிறது . ஆனாலும் நேற்று வந்த சரிவுகள் சற்று அதிகம் தான் என கருதுகிறேன் . மேலும் சந்தைகளில் இது போன்ற சரிவுகளின் பொழுது மக்கள் சற்று பதட்டம் அடைந்து விற்ப்பது தற்சமயம் அதிர்கரித்து வருவது குறிப்பிட தக்கது ....

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே தடுமாட்டதுடன் வர்த்தகம் நடை பெற்றது . மேலும் அமெரிக்கா சந்தைகள் 10000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகத்தினை தொடர முடியாத சூழ்நிலை அங்கு ஏற்ப்பட்டுள்ளதாக கருதுகிறேன் ... வர்த்தக முடிவில் அமெரிக்கா சந்தைகள் பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன .

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று காரணமின்றி சரிவுகளில் துவக்கம் ஆகி வர்த்தகம் நடை பெற்று வருகிறது . ஜப்பானிய சந்தைகள் சற்று சிறிய அளவிலான சரிவுகளில் வர்த்தகம் .. ஆனால் ஆசியா சந்தைகள் 1.5 % சரிவில் வர்த்தகம் நடந்து வருகிறது ...

இன்றைய நமது சந்தைகள் ஆசியா சந்தைகளின் போக்கினை பின்பற்றலாம் . மேலும் நாளை மறுதினம் பியுச்சர் சந்தைகள் முடிவுக்கு வருவதால் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்களை காண முடியாது . மேலும் சந்தைகள் முக்கிய குருசியல் ஆதரவு நிலையான 4770 நிலைகள் மட்டுமே தற்பொழுது மிக முக்கியமானதாக இருக்கிறது என நான் கருதுகிறேன் ...

இன்றைய சந்தைகள் துவக்கம் சற்று ஆசியா சந்தைகளின் நகர்வுகளை ஒட்டியபடி இருக்கலாம் . ஆகவே GAP WOWN வரலாம் .. கவனமாக இருங்கள் நேற்றைய சரிவில் இருந்து சந்தைகள் கட்டாயம் மீளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன ..

முடிந்த வரை சந்தைகளின் போக்கில் செல்லுங்கள் ......

நிப்டி நிலைகள் : -----

ஆதரவு : ---- 4805 , 4770 , 4750 ....

எதிர்ப்பு : ---- 4850 , 4880 , 4920 ....

நன்றி !!!!

செவ்வாய், அக்டோபர் 27, 2009

வணக்கம் நண்பர்களே ,

நேற்றைய சரிவுகளை பார்த்து ஆச்சர்யமா ! ???

இன்றைய சந்தைகள் போக்கி அதை விட சற்று சரிவுகள் அதிகம் ஆகலாம் . அதை பற்றி பின்பு .....

நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் சற்று உயர்வுகளில் துவங்கின . பின்னர் சந்தைகள் சற்று ஆசியா சந்தைகளின் போக்கினை பின்பற்றி சற்று சரிவுகள் தவிர்க்க இயலாது போனது போலும் .....

நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவின் பொழுதும் ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்தின் பொழுதும் நமது சந்தைகள் பெரிதாக ஒன்றும் சரிவில் இருந்து மீள வில்லை . உலக சந்தைகள் அனைத்தும் உயர்வுகளில் தடுமாட்டம் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது நினைவு இருக்கலாம் ......

நேற்றைய நமது சந்தைகள் முடிவில் 26 புள்ளிகளை இழந்து 4970.90 புள்ளிகளில் முடிந்தது . நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவில் சிறிய அளவிலான உயர்வுகளில் முடிந்தன . ஐரோப்பிய சந்தைகள் துவக்கம் முதலே சற்று ஒரே நிலைகளுக்குள் வர்த்தகம் நடந்தது . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 1 % வரை சரிவில் முடிந்தன .

அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று சரிவில் இருந்தது அமெரிக்கா சந்தைகள் கச்சா என்னை விலைகள் கடந்த சில நாட்களாக ஒரு பெரிய ஏற்ற இறக்கங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது . மேலும் சந்தைகளும் சற்று சிறிய அளவிலான சரிவுகளை கண்டு வருகிறது . அமெரிக்கா சந்தைகள் நேற்றைய வர்த்தக முடிவில் 1 % வரை சரிவடைந்து முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் பிரதிபலிப்பானாக 1% வரை சரிவில் துவங்கி உள்ளன . வர்த்தக நேரத்தில் சந்தைகள் சற்று குறிப்பிட்ட புள்ளிகளுக்கு இடையே வர்த்தகம் நடந்து வருகிறது .

நமது சந்தைகள் ஆசியா மற்றும் அமெரிக்கா சந்தைகளின் போக்குகளை அப்படியே பிரதி பலிக்கலாம் .ஆனால் சந்தைக்ள துவக்கத்தில் உடன் லாங் செல்லலாம் . ஷார்ட் செல்ல வேண்டாம் . சந்தைகள் உடன் இழப்புகளில் இருந்து மீண்டு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன . கவனம் தேவை ....

வரும் நாட்களில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு சில கடன் மற்றும் வட்டி சம்பந்தமான் பாலிசி வெளிவரும் என எதிர் பார்க்கப்படுகிறது . ஆதலால் வங்கித்துறை பங்குகளில் லாபத்தினை உறுதி செய்யுங்கள் . புதியதாக முதலீட்டாளர்கள் லாங் மற்றும் முதக்லீடுகள் செல்ல வேண்டாம் .

தினசரி வர்த்தகர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உபயோகிங்கள் ...

சந்தையின் போக்கில் வர்த்தகம் செய்யுங்கள் , குழப்பமான சூழ்நிலைகளில் சந்தையில் இருக்க வேண்டாம் ....

நிப்டி நிலைகள் : ---

ஆதரவு ---- 4950 , 4920 ,4880 ....

எதிர்ப்பு ---- 4980 , 5020 , 5050 ....

நன்றி !!!

திங்கள், அக்டோபர் 26, 2009

வணக்கம் நண்பர்களே

வெள்ளியன்று நமது சந்தைகள் அதிக உயர்வில் துவங்கின உலக சந்தைகளின் போக்கினை ஒட்டி ஆனால் சந்தைகளில் வந்த தொடர் செல்லிங் காரணமாக சந்தைகள் சரிந்தன . பின்னர் முக்கிய ஆதரவு நிலையான 5020 .4980 புள்ளிகளையும் சந்தைகள் இழந்து முடிவில் 4997.50 புள்ளிகளில் முடிவடைந்தன ..

உலக சந்தைகளின் போக்கும் வெள்ளியன்று சற்று சுணக்கம் கண்டது . ஐரோப்பிய சந்தைகள் சற்று பிளாட் நிலைகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன . அதன் பின்னர் அமெரிக்கா சந்தைகளின் போக்கிலும் சற்று சரிவுகளே தொடர்ந்தன .அமெரிக்கா சந்தைகள் முடிவில் சற்று அதிக சரிவாக dow 109 புள்ளிகளை இழந்து வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன .

இன்றைய ஆசியா சந்தைகளில் hang seng விடுமுறை ஆதலால் ஆசியா சந்தைகளின் போக்கில் ஒரு உறுதியான நிலைகள் காணப்படவில்லை . மேலும் உலக சந்தைகள் பியுச்சர் துவக்கம் சற்று குறைவான புள்ளிகளில் பாசிடிவ் நிலைகளில் வர்த்தகம் நடந்து வருகிறது ..

இன்றைய நமது சந்தைகள் சற்று கேப் அபில் துவங்கும் வாய்ப்புகள் உள்ளன , அதிக பட்சம் 20 - 25 புள்ளிகளில் துவங்கலாம் . சந்தைகளில் இன்றைய நகர்வுகள் சற்று குறைவாகவே இருக்க வாய்ப்புகள் உள்ளன . மதியம் ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்தினை வைத்து தான் சந்தைகள் போக்கு சற்று பிடிபடும் ....

நிப்டி நிலைகள் : -

ஆதரவு : -- 4980,4950,4920 ...

எதிர்ப்பு : -- 5020 , 5050 ,5088 ...

வெள்ளி, அக்டோபர் 23, 2009

வணக்கம் நண்பர்களே .

நேற்றைய நமது சந்தைகளில் முக்கிய எதிர் பரப்பான மராட்டிய மாநில தேர்தல் அறிவிப்புகள் மற்றும் இன்பிலேசன் அறிவிப்புகள் ஆகியன சந்தைகளில் ஒரு முக்கிய விஷயம் ஆகும் .. ஆனால் சந்தைகள் சற்று துவக்கம் முதலே சற்று சரிவுகளில் வர்த்தகம் ஆனது ..

பின்னர் வந்த அறிவிப்பில் தேர்தல் முடிவுகள் மற்றும் இன்பிலேசன் அறிவிப்புகள் சற்று சந்தைகளுக்கு சாதகமாக இருந்தும் சந்தைகள் சற்று சரிவினை காண ஆரம்பித்தது ..

ஆசியா சந்தைகளின் முடிவும் மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் துவக்கமும் நமது சந்தைகளுக்கு பெரிதாக ஒரு நகர்வுகளை தரவில்லை . ஒரே நிலைகள் மையமாக கொண்டு வர்த்தகம் ஆகின . பின்னர் சந்தைகள் முக்கிய ஆதரவு நிலையான 4980 நிலைகளை இழந்து சரிவுகள் சற்று குறைந்து பின்னர் முடிவில் சந்தைகள் 5000 புள்ளிகளுக்கு அருகில் முடிவுற்றது ..

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே சற்று உயர்வில் துவங்கி வர்த்தகம் நடந்தது . பின்னர் சந்தைகளில் சரிவுகள் எதுவுமின்றி உயர்வுகலிலே முடிந்தன ..

இன்றைய ஆசியா சந்தைகள் துவக்க அமெரிக்கா சந்தைகளின் உயர்வினை ஒட்டியபடி 1% உயர்வில் துவங்கின , நமது சந்தைகளும் அதே போல துவங்கலாம் . ஆனால் சந்தைகளில் 5020 , நிலைகள் இன்றும் உடை பட்டாள் சந்தைகளின் பலவீனம் மற்றும் வார இறுதி வர்த்தகம் ஆகியன ஒன்று சேர்த்து சந்தைகளில் பெரிய சரிவினை உண்டாகலாம் என கருதுகிறேன் .

நிப்டி நிலைகள்

அதரவு --- 5020 , 4980 , 4950 ...

எதிர்ப்பு --- 5050 , 5088 , 5120 ...

நன்றி !!!!

வியாழன், அக்டோபர் 22, 2009

வணக்கம் நண்பர்களே ,

நேற்றைய சந்தைகள் சற்று சரிவடைந்தது ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் அல்ல . உலக சந்தைகள் சற்று உயர்வின் பொழுதும் அல்லது பிளாட் நிலைகளை கொண்டு வர்த்தகம் ஆகும் பொழுது நமது சந்தைகள் சற்று சரிவினை காண்பது ஒன்றும் புதிதல்ல ..

நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் முதலே சரியான இழுபறியாக வர்த்தகம் ஆகின . முக்கிய ஆதரவு நிலையான 5120 நிலையினை சந்தைகள் துவக்கத்தில் எட்டி பிடித்தாலும் பின்னர் தொடர்ச்சியான செல்லிங் காரணமாக சந்தைகள் சற்று சரிந்து அடுத்த ஆதரவு நிலையான 5080 புள்ளிகளை நீண்ட வர்த்தகத்திற்கு இடையில் உடைத்து கீழிறங்கியது .

இதன் மூலம் சந்தையின் பலவீனம் சற்று உறுதி செய்யபட்டுள்ளதாக கருதுகிறேன் . மேலும் சந்தைகளின் போக்கிலும் உலக சந்தைகளின் போக்கிலும் ஒரு சரியான நகர்வுகள் இல்லாவிடின் அடுத்த கட்ட நகர்வினை கணிக்க இயலாது என முன்னர் கூறியது நினைவு உள்ளதா ??

அதன் பின்னர் ஆசியா சந்தைகள் முடிவில் சிறிய அளவிலான சரிவில் முடிந்தன . ஆசியா சந்தைகள் நமது சந்தைகளில் நேற்று ஒன்றும் பெரிய தாக்கதினையோ அல்லது நகர்வினையோ உண்டாக்கவில்லை . மேலும் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று வேகமாக சரிந்தன . அதன் பின்னர் நமது சந்தைகள் முக்கிய கட்டுபாட்டு புள்ளியான 5080 புள்ளிகளை இழந்தன .

முடிவில் நமது சந்தைகள் 50.85 புள்ளிகளை இழந்து 5063.60 புள்ளிகளில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று மதியம் முதலே சற்று சரிவுகள் அதிகமாக இருந்தன . பின்னர் சந்தைகள் துவக்கத்தின் பொழுது சந்தை இழப்பினை மீட்டு உயர்வுக்கு வரத்துவங்கின . மேலும் நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல கம்மாடிட்டி சந்தையில் சற்று நகர்வுகள் மற்றும் அடுத்த இலக்குகள் சற்று தெளிவடைய ஆரம்பித்தன .

பின்னர் அமெரிக்கா சந்தைகள் மீண்டும் சரிவடைந்தன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 1% வரை சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் துவக்கம் 1 % வரை சரிவடைந்து துவங்கி உள்ளன . இந்த இழப்புகள் அமெரிக்கா சந்தைகளின் முடிவினை வைத்து மேலும் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல அமெரிக்கா சந்தைகள் முந்தய இரு தினங்கள் 10000 புள்ளிகளுக்கு மேல் முடிந்தன . ஆனால் நேற்றைய சந்தைகள் சற்று 10000 புள்ளிகளை இழந்து முடிந்துள்ளன .

நமது சந்தைகளில் இன்று முக்கிய எதிர் பார்ப்பான மும்பை தேர்தல் முடிவுகள் வருள்ளன . மேலும் இன்று பணவீக்கம் பற்றிய அறிவுப்புகள் என முக்கிய இரண்டு அறிவிப்புகள் மேலும் உலக சந்தைகள் போக்கு (குறிப்பாக அமெரிக்கா பியுச்சர் சந்தை ) ஆகியவற்றினை வைத்து நமது சந்தைகளில் நகர்வுகள் இருக்கும் ..

தினசரி வர்த்தகர்களுக்கு : ---

சந்தை துவக்கத்திற்கு பின்னர் நிப்டி லாங் செல்லாம் ஸ்டாப் லாஸ் ஆக 5020 புள்ளிகளை வைத்துக் கொள்ளலாம் . அல்லது சந்தைகள் சரிவில் அல்லது மேற்குறிப்பிட்ட புள்ளிகளுக்கு அருகில் வரும் பொழுது ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உடன் லாங் செல்லலாம் .

நிபிட்டி நிலைகள் :---

ஆதரவு ----- 5050 , 5020 , 4980 .....

எதிர்ப்பு ---- 5090 , 5120 , 5150 .....

நன்றி !!!

நண்பர்களுக்கு
ஒரு அன்பான வேண்டுகோள்

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அன்பர்களுக்கு தங்கள் வர்த்தக லாபத்தில் வாரம் ஒரு அன்னதானம் மாதம் ஒரு நலிவடைந்த குடும்பத்திற்கு சில உதவிகள் வருடம் ஒருவருக்கு கல்வி உத்வி செய்யுங்கள் ....

நீங்களும் மேன்மை அடைந்து நமது சமுதாய மற்றும் சமுதாய மக்களையும் மேன்மை அடைய செய்யுங்கள் ....

நன்றி
அன்புடன்

ரமேஷ்

புதன், அக்டோபர் 21, 2009

வணக்கம் நண்பர்களே ...

நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று முடிவில் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல அமெரிக்கா சந்தைகளின் தெளிவடையாத போக்கினை வைத்து பிளாட் நிலைகளில் நேற்றைய வர்த்தகம் முடிவுக்கு வந்தது .

நமது சந்தைகள் ஆசியா சந்தைகளின் முடிவின பின்னர் சரியா ஒரு நகர்வுகள் இன்றி சந்தைகள் சற்று சரிவினை கண்டன , மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சரியான ஒரு நகர்வுகள் இன்றி சற்று சுணக்கம் கண்டன . நமது சந்தைகள் முடிவில் 27 புள்ளிகளை இழந்து 5114 .45 என்ற புள்ளிகளில் முடிவடைந்தன .

அதன் பின்னர் ஐரோப்பிய சந்தைகள் பெரிய அளவில் ஒரு நகர்வுகள் இன்றி சரிவிலேயே வர்த்தகம் ஆனது . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 0.5 % வரை சரிவடைந்து முடிந்தன . மேலும் நேற்று அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் பெரிய அளவில் ஒரு நிலையில் வர்த்தகம் ஆகவில்லை என்பது குறிப்பிட தக்கது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் சற்று அதிக சரிவில் வர்த்தகம் துவங்கியது . பின்னர் சந்தைகள் ஓரளவு ஒரே நிலைகளில் வர்த்தகம் ஆயின பின்னர் அமெரிக்கா சந்தைகள் முடிவில் ஓரளவிற்கு உயர்வடைந்து சற்று இழப்பினை மீட்டு 0.5 % சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் வழக்கம் போல அமெரிக்கா சந்தைகளின் முடிவினை ஒட்டி துவங்கி உள்ளன . 0.5 % வரை சரிவில் துவங்கி உள்ளன . இன்றைய உலக சந்தைகள் அனைத்தும் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல அமெரிக்கா சந்தைகளில் ஒரு நகர்வுகள் நடந்தால் தான் நமது சந்தைகள் அடுத்த கட்ட நகர்வுகள் தெரியும் ..

இன்றைய சந்தைகள் நகர்வுகள் சற்று குறைவாகத்தான் இருக்க வாய்ப்புகள் உள்ளன .மேலும் அதிகரித்து வரும் கச்சா என்னை விலை , வீக்கமடைந்து வரும் டாலர் மதிப்பு . உலக சந்தைகள் உயர்வுகள் மற்றும் அதிக விலையிலும் தட்டுப்பாடுகள் வரும் அளவில் வர்த்தகம் ஆகும் உலோக பொருட்கள் மற்றும் தங்கம் வெள்ளி விலை உயர்வுகள் மற்றும் இவை அனைத்தின் அடுத்த கட்ட நகர்வுகளுக்காக அனைத்து சந்தைகளும் சற்று நிலுவையில் உள்ளன ..( வேகமின்றி )

நிபிட்டி நிலைகள் :----

ஆதரவு --- - 5120 , 5080, 5050 ....

எதிர்ப்பு ---- 5150 , 5185 , 5250 ...

செவ்வாய், அக்டோபர் 20, 2009

வணக்கம் நணபர்களே !!

இனிய தீபாவளி திரு நாளை கொண்டாடி மகிழ்ந்தீர்களா ....

நான் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல சரியாக தீபாவளி அன்று சந்தைகளை சற்று இறக்கி பார்த்து சந்தோஷமடைந்துள்ளனர் . இருந்தாலும் இது ஒன்றும் பெரிய சரிவு அல்ல .. பியுச்சர் சந்தைகள் மட்டும் சரிந்து பிரிமியமில் இருந்து டிஸ்கவுன்ட் க்கு வந்துள்ளது அதுவும் 15 புள்ளிகள் வரை .......

வெள்ளியன்று அமெரிக்கா மற்றும்ஆசியா சந்தைகள் பெரிதாக ஒன்றும் நகர்வுகள் இல்லை .. அனைத்து உலக சந்தைகளும் 0.5 % வரை சரிவடைந்து முடிந்தன . திங்களன்று நமது சந்தைகள் விடுமுறை ...

நேற்றைய ஆசியா சந்தைகள் துவக்கம் முதலே நமது சந்தைகள் இல்லாததாலோ என்னவோ ஒரே வர்த்தக புள்ளிகளை வைத்து முடித்துக்கொண்டன . வர்த்தக முடிவில் ஆசியா சந்தைகள் 0.5 % வரை உயர்ந்து முடிந்தன . ஜப்பானிய சந்தைகளும் அதே போல சற்று உயர்வில் முடிந்தன .

நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் சற்று துவக்கம் முதலே நல்லதொரு உயர்வில் வர்த்தகத்தினை தொடங்கி வர்த்தகம் ஆயின பின்னர் சந்தைகள் அந்த உயர்வுகளை தாண்டி சென்று புதிய உயர்வுகளை எட்ட தொடங்கின அதற்க்கு ஏற்றார் போல் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று 0.5 % வரை உயர்வில் வர்த்தகம் ஆனது . அதனை தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகள் சற்று உயர் அளவிலே வர்த்தகம் ஆகி பின்னர் 1.5 % - 2 % வரை உயர்வில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் மீண்டும் தான் இழந்த 10000 புள்ளிகளை மீட்டது . சந்தைகள் துவக்கம் முதலே உயர்வுகளில் வர்த்தகம் ஆகின . பினர் அமெரிக்கா சந்தைகள் 1 % உயர்வில் முடிந்தன ..

இன்றைய ஆசியா மற்றும்ஜப்பானிய சந்தைகள் அமெரிக்கா சந்தைகளின் போக்கினை தொடர்ந்து ஒரு நல்ல உயர்வில் துவங்கி உள்ளன . ஆனால் சந்தைகளில் அடுத்த கட்ட நகர்வுகள் இனி சற்று குழப்பமாகவே இருக்கலாம் . ஆசியா சந்தைகளில் முடிவுகள் கூட இன்று சற்று குழப்பமாகவே முடியும் என கருத்து கிறேன் .

இன்றைய நமது சந்தைகள் சற்று சிறிய அளவிலான உயர்வுகளில் துவங்கலாம் . மேலும் நமது சந்தைகள் கடின இலக்கான 5250 நிலைகளை எட்டுவது சற்று கடினம் என்றே நினைக்கிறேன் . மேலும் அமெரிக்கா சந்தைகளின் அடுத்த கட்ட நகர்வுகள் தான் உலக சந்தைகளில் பெரிதும் எதிர் பார்க்கப்படலாம் .

நமது சந்தைகளில் இன்று ரிலியான்ஸ் நிறுவனத்தின் கோர்ட் சம்பந்தமான அறிவிப்புகள் உள்ளன .. கவனம் தேவை ....

இன்றைய நமது சந்தைகள் சற்று ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை பின் பற்றலாம் ...

நிபிட்டி நிலைகள் ----

ஆதரவு ---- 5120 , 5080 , 5050 ....

எதிர்ப்பு --- 5150 , 5185 , 5210 ... ....

நன்றி !!!

ரமேஷ்

எதிரியிடமும் அன்பு செலுத்துங்கள் .. அது எதிரியை கூட நல் வழிப்படுத்தும் நம்மையும் நல் வழிப்படுத்தும் ....

வெள்ளி, அக்டோபர் 16, 2009

தீபாவளி சிறப்பு விழிப்புணர்வு பதிவு

வணக்கம் !!

என்னடா இது புதுமையா காலையில் தானே பதிவினை படித்தோம் உடன் திரும்பவுமா !!!!


ஆம் நண்பர்களே @@@@@@@@@

இது ஒரு விழிப்புணர்வு பதிவு இந்த பதிவினை எழுத நேற்று முன்தினமே தயாராகி விட்டேன் .இருந்தாலும் இன்றைக்கு எழுதினால் தான் சரிவரும் என முடிவெடுத்து இன்று எழுதுகிறேன் . இது சற்று சந்தைகளின் பலவீனமான போக்கை காட்டலாம் ,

மன்னிக்கவும் ...

கடந்த சில வாரங்களாக சந்தைகள் சற்று ஆண்டு உயர்வுகளில் வர்தகமாகி வருவது தாங்கள் அறிந்ததே . இருந்த போதிலும் சந்தைகளின் தற்காலிக வளர்ச்சி சற்று அதிகப்படியானது என்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .

உலக சந்தைகளும் சற்று அதே நிலைகளில் வர்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது ..இப்பொழுது நான் பேச விரும்பும் விஷயம் என்னவென்றால் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல கடந்தவார வர்த்தக தினங்களில் இருந்தே நான் சந்தையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் .

ஒரு நாளில் முடிவடைந்த புள்ளிகளில் இருந்து அடுத்த நாள் அதிகரித்து முடிந்துள்ளன . அதே போல சந்தைகளில் முதலீட்டாளர்களின் மன போக்கினையும் சற்று மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது .அதாவது அனைவரின் கவனத்தினையும் வாங்குவதன் பக்கமாக திருப்ப முயற்சிக்கப்படுவதாக கருதுகிறேன் .

உதாரணம் : ----
நமது சந்தைகள் கடந்த சில தினங்களாக உயர்நிலைகளில் முடிக்கப்படுவதும் அந்த உயர் நிலைகளை அடுத்த நாள் தாண்டி செல்லவும் செய்கின்றனர் . அவ்வாறு செய்யப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஏற்கனவே நமது சந்தைகள் கடந்து வந்த உயர்வின் அளவிற்கு பங்குகளின் விலைகள் உயரவில்லை என்ற ஆதங்கம் உள்ளது .

இந்நிலையில் சந்தைகள் மேலும் மேலும் உயர்வினை அடைவது சற்று எனக்கு சந்தேகத்தினை வலுக்கிறது . காரணம் இவ்வாறு ஏற்ப்படும் உயர்வுகள் சமயத்தில் சந்தைகளில் பெரிய தாக்கத்தினை ( சரிவினை ) உண்டாக்கலாம் . சந்தையின் உயர்வினை உறுதி செய்வது போல் மேலும் மேலும் மீடியாக்களின் மூலமாக நுட்ப வரை படங்களின் படி சந்தைகளின் இலக்குகள் சற்று அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிட தக்கது ..

மேலும் எனது கணிப்பின் படி சந்தைகள் தொடர்ச்சியாக உயர்வுகளில் அதிகரித்து செல்லப்படுவது சற்று ஆச்சர்யத்தை அளிக்கிறது .ஏன் என்றால்சந்தைகளில் கடந்த வார மற்றும் இம்மாத நுட்ப காரணி வரை படங்களை வைத்து பார்த்தால் சந்தைகள் சற்று மிகப் பெரிய ஆபத்தினை எதிர் நோக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன ..

நிப்டி கேப் உயர்வு ---

நமது சந்தைகள் கடந்த வாரம் முதல் இந்த மாதம் முழுவதும் சற்று கேப் அப் வர்த்தகத்தினை மூன்று நாட்கள் நடத்தி உள்ளன .

அவையாவன

1. 5049.22 to 5085.27

2. 4917.04 to 4925.04

3. 4551.41 to 4570.29

இவ்வாறு மூன்று கேப் அப் இந்த மாதத்தில உருவாக்கி

உள்ளது .. மேலும் மக்கள் அனைவரும் இவ்வாண்டு தீபாவளி அன்று சந்தைகள் கட்டாயம் உயர்த்தப்படும் என எதிர் பார்ப்பில் உள்ளனர் , மேலும் நான் முன்பு கூறியது போல சந்தைகள் ஒரு நாள் உயர்வுகள் ஒரு நாள் தாண்டி செல்வது சந்தைகளின் போக்கினை சற்று உயர்வு என்று கூற வைக்கும் படி உள்ளது .

அவ்வாறு 4980 . 5020 , 5040 , 5100 ஆகிய உயரிய புள்ளிகளை கடந்து சந்தைகள் சில நாட்களாக முடிக்கப்பட்டுள்ளன . இன்றைய சந்தைகள் சற்று அதையும் மீறி 5150 புள்ளிகளுக்கு மேல் முடிந்தாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை .

இன்றைய நிலவரப்படி முதலீட்டாளர்கள் நாளை அதிக அளவில் உள்ளே புதிய முதலீட்டாளர்கள் , நமது பழைய முதலீட்டாளர்கள் சந்தையில் வர்த்தகம் செய்ய ஆவலுடன் உள்ளதாக அறிகிறேன் ..

எதற்கும் நாளைய தினம் கவனமாக இருங்கள் .

சந்தைகளின் போக்கில் சென்று உடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் ..

நன்றி !!

ரமேஷ் ..

( இந்த பதிவு முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே )

தீபாவளி வாழ்த்துக்கள் !!!



என் இனிய நண்பர்கள் மற்றும் வலைதள வாசகர்கள் ,அருமை வலைதள நிர்வாகிகள், நண்பர்கள் அனைவர் & அவர் குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!

நன்றி

ரமேஷ்
வணக்கம் நண்பர்களே ,

என்ன நேற்றைய சந்தைகள் எதிர் பார்த்ததை போல குழப்பமான வர்த்தகம் ஆனதா . ஆம் நண்பர்களே எனது கணிப்பின் படி உலக சந்தைகள் ஆண்டு உயர்வுகளில் சற்று திணறுவதாக கருதுகிறேன் ..


நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் முதலே சற்று சிறிய அளவிலான GAP UP இல் துவங்கி பின்னர் சற்று உயராமல் சரியதுவங்கின . பின்னர் ஆசியா சந்தைகளும் சற்று உயர்வில் இருந்து சரியதுவங்கியதும் நமது சந்தைகள் ஐரோப்பிய சந்தைகளை எதிர் நோக்கி காத்திருந்தன . ஆனால் ஐரோப்பிய சந்தைகளும் பெரிதாக உயர்வுகள் இன்றி சற்று சரிவிலேயே வர்த்தகத்தினை தொடங்கின ..

அதன் பின்னர் நமது சந்தைகள் சரிவினை காண ஆரம்பித்தன . பின்னர் நமது சந்தைகள் முடிவில் பிளாட் ( 5109 ) நிலைகளில் முடிந்தன .

ஐரோப்பிய சந்தைகள் நேற்றைய சந்தையில் சற்று பலமிலந்ததாக கருதுகிறேன் அதற்க்கு முந்தின உயர்வுகள் காரணமாக இருக்கலாம் .நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 0.5 % அளவிற்கு சரிவில் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே முக்கிய எதிர் நிலையான 10000 புள்ளிகளை கடக்க மிகுந்த சிரமம் ஏற்ப்பட்டது . ஆனால் இடையில் சந்தைகள் அந்த புள்ளிகளை கடந்து உயர்நிலைகளில் வர்த்தகம் நடந்தன ஆனால் தொடர்ச்சியான செல்லிங் காரணமாக சந்தைகள் சற்று உயர்வுகள் தடை பட்டன .. முடிவில் அமெரிக்கா சந்தைகள் 47 புள்ளிகள் மட்டும் அதிகரித்து முடிந்தன ..

இன்றைய ஆசியா சந்தைகள் நேற்று முன்தினம் போலவே சற்று உலக சந்தைகளின் போக்கினை எதிர் நோக்கி காத்துள்ளன . ஆக நமது சந்தைகளும் பிளாட் நிலைகளில் துவங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . இருந்தாலும் நாளைய தீபாவளி சிறப்பு வர்த்தகம் முதலீட்டாளர்களிடையே ஒரு ஈர்ப்பினை உருவாக்கி உள்ளது .

ஆக இன்றைய சந்தைகள் சற்று அதிக ஏற்ற இறக்கங்களை காண இயலாது என்றே கருதுகிறேன் . ஆனால் திங்களன்று சந்தைகள் விடுமுறை ஆதலால் அதிக ஷார்ர்ட் சந்தைகளில் வர வாய்ப்புகள் உள்ளன . அதே சமயம் தீபாவளி வர்த்தகம் அன்று சந்தைகள் ஒரு அதீத உயர்வினை காண போகின்றன என்று ஒரு சாரரும் அல்லது போன வருடத்திற்கு முந்தய வருடம்போல ஒரு பெரிய சரிவும் உள்ளது என்று சாராரும் எதிர் பார்த்துள்ளனர் ..

கவனம் தேவை ...

நன்றி !!!

நிப்டி நிலைகள் --

ஆதரவு ---- 5085, 5050 , 4980 ..

எதிர்ப்பு ---- 5120 , 5150 ,5185

வியாழன், அக்டோபர் 15, 2009

ஹாய் நண்பர்களே !!!

நேற்றைய நமதுசந்தைகள் எதிர் பார்த்ததை போல ஒரு திடீர் உயர்வினை அடைந்ததா @@@ இன்னும் பாக்கி உள்ளது . இன்றும் உயர்வு தான் . நேற்றைய நமது சந்தைகள் முக்கிய எதிர் நிலையினை கடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் நமது சந்தைகளில் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல அதிக ஷார்ட் கவரிங் காரணமாக சந்தைகள் தொடர்து உயர்ந்து வருகிறது .

நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று அதிகப்படியா உயர்வினில் முடிந்துள்ளன . அதிகபட்சமாக் 2 % வரையில் உயர்வினில் முடிந்தன . அதனை தொடர்ந்து துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் துவக்கமே GAP UP ஆக இருந்தன .

ஐரோப்பிய சந்தைகள் 1 % வரை உயர்வில் துவங்கி வர்த்தகம் ஆனது . அதன் பின்னர் அமெரிக்கா பியுச்சர் சந்தைகளின் போக்கினை பின் தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகளும் 2 % - 2.5% வரை உயர்வில் முடிந்தன .

டவ் எட்டியது 10000 ------------------------------------

நேற்றைய அமெரிக்கா சந்தையான டவ் ஜோன்ஸ் 10000 புள்ளிகளை கடந்து புதிய இவ்வாண்டு உயர்வினை கடந்தது
குறிப்பிட தக்கது . மேலும் நேற்றைய அமெரிக்கா சந்தைகளில் முக்கிய எதிர் நிலைகள் உடைபடுமா என்ற இரு வார சந்தேகங்கள் நேற்று முடிவுக்கு வந்தன ..

நேற்று வந்த ஹச் டி எப் சி காலாண்டு அறிக்கைகள் சற்று நன்றாக வந்துள்ள நிலையில் சந்தைகளில் அதன் தாக்கத்தினை இன்று எதிர் பார்க்கலாம் . மேலும் இன்று இன்பிலேசன் அறிவிப்புகள் உள்ளன . குறைந்து வரும் இன்பிலேசன் ஆதலால் அதை பற்றி குறிப்பிட எதுவும் இல்லை .

நமது சந்தைகள் நேற்றைய சந்தைகளில் 5100 புள்ளிகளை கடந்த 17 மாதங்களுக்கு பிறகு கடந்து புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது . கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் .................

உலக சந்தைகள் கூட அதே போல தான் ஒவ்வொரு சந்தைகளும் அதிக பட்ச உயர்வுகளில் வர்தகமாகி வருகின்றன என்பது குறி ---------- பிட தக்ககது .. ..
புரிகிறதா ...............

இன்றையஆசியா சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் உயர்வினைபிரதிபளிப்பதாக துவக்கம் உள்ளது . ஆசிய சந்தைகள் 1.5 % - 2.5 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதனை பின் தொடர்ந்து உயர்வில் துவங்கலாம் .. நமது சந்தைகளின் இன்றைய போக்கு சற்று குழப்பமாகவே இருக்கும் ...

நிபிட்டி நிலைகள்

ஆதரவு -- 5120 , 5085 , 5050 ...

எதிர்ப்பு -- 5120 , 5150 , 5185 ...

புதன், அக்டோபர் 14, 2009

வணக்கம் நண்பர்களே .

ஒரு வர்த்தக தின விடுமுறைக்கு பின் துவங்கப்போகும் சந்தைகளுக்காக மிகுந்த எதிர் பார்ப்புடன் இருப்பீர்கள் என நினைக்கிறேன் . ஒன்றும் கவலை வேண்டாம் சந்தைகள் சற்று உயரத்தான் போகிறது அதை பற்றி பின்பு ..

செவ்வாய் யன்று ஐரோப்பிய சந்தைகள் நமது சந்தைகள் முடிந்ததும் சற்று அதிகமாக உயர்ந்து முடிந்தன . அமெரிக்கா சந்தைகள் சற்று பிளாட் நிலைகளில் வர்த்தகம் ஆகி பின்னர் முடிவிலும் பிளாட் நிலைகளிலே முடிந்தன .

நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வினை கண்டன ஆசியா சந்தைகள் 1 % - 2% வரை உயர்வினில் வர்தகமாகி முடிந்தன . நமது சந்தைகள் நேற்று வர்த்தக விடுமுறை ..

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வினை துவக்கமாக வைத்து துவங்கி உள்ளன . அனைத்தும் 1 % - 2 % வரை உயர்வில் வர்தகமாகி வருகிறது .. மேலும் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று அதிக உயர்வினை கொண்டு துவங்கி உள்ளன . அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் தற்சமயம் 61 புள்ளிகள் உயர்வில் வர்தகமாகி வருவது குறிப்பிட தக்கது ..

நமது சந்தைகள் துவக்கம் கிட்டத்தட்ட 30 - 45 புள்ளிகள் வரை உயர்வில் துவங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . அவ்வாறு துவங்குமானால் சந்தைகள் GAP UP ஐ பில் செய்ய முயற்சித்தால் சந்தைகளில் பிரெஷ் லாங் செல்லலாம் . ஆனால் ஷார்ட் வேண்டாம் . நமது சந்தைகளில் இன்றைய வர்த்தகம் முழுவதும் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை தொடர்ந்தே இருக்கும் . மேலும் திங்களன்று வந்த ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தைகளுக்கு சாதகமாகவே வந்துள்ளன .

அதனை தொடர்ந்தே அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது ஷாட் பொசிசனை கவரிங் செய்துள்ளார்கள் . அதனால் திங்களன்று சந்தைகள் ஒரு திடீர் உயர்வினை கண்டுள்ளன . இன்றைய சந்தைகளும் வரும் நாட்களிலும் ஒரு திடீர் உயர்வுகள் வரலாம் .

மேலும் திங்களன்று அந்நிய முதலீட்டாளர்களும் மற்றும் நமது உள்நாட்டு பரஸ்பர நிதியகங்களும் புதிய வாங்குதல் படலத்தில் இறங்கி உள்ளன . ஆகவே நிபிட்டி புதிதாக வர்த்தகம் செய்பவர்களுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் இது ஏற்ற தருணம் அல்ல . தயவு செய்து சந்தையில் இருந்து விலகி இருங்கள் ..

இன்றைய நமது சந்தைகளில் வர்த்தகத்தினை மேற்க்கொள்ளும் முன் மேற்சொன்ன அனைத்து காரணங்களையும் மனதில் வைத்து வர்த்தகம் செய்ய்யுங்கள் . ( நிபிட்டி இன் ஆண்டு உயர்வு , relainace சமரசம் , அற்புதமான் ஐ ஐ பி அறிவிப்பு , குறைந்து வரும் இன்பிலேசன் , அந்நிய முதலீட்டாளர்களின் தொடர் வாங்கும் படலம் )

நிபிட்டி நிலைகள்;

அதரவு --- 5012 , 4980 , 4950 ---- 4880 .

எதிர்ப்பு ---- 5040 , 5088 , 5120 ---- 5150 .

நன்றி @

ரமேஷ்

திங்கள், அக்டோபர் 12, 2009

என் அன்பு முதலீட்டாளர்களே

நமது சந்தைகள் பற்றிய வழக்கம் போல ஒரு காரமான பதிவு பல முக்கிய செய்தியினை பேசலாம் என முடிவெடுத்துள்ளேன் . உங்கள் கருத்துக்களை கூறுங்கள் ...

நமது சந்தைகள் பொறுத்தவரை நல்லவர்களுக்கு காலமில்லை , ஆமாம் நண்பர்களே நானும் கடந்த சில ஆண்டுகால வர்த்தகத்திலும் சில பண்டமண்டல் ஆய்வுகளிலும் பல விசயங்கள் யோசித்து பார்த்துள்ளேன் ,

நமது சந்தைகள் என்ன தான் செபியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சந்தைகளில் பல சமயங்கள் ஆப்ரட்டிங் செயல்கள் சிறப்பாக நடக்கின்றன . அதுவும் முதலீட்டாளர்களை பங்குகளை அதிகவிலைக்கு பங்குகளை வாங்க வைத்து முடிப்பது அவர்கள் விற்கவே முடியாது ...

தினசரி முதலீட்டளர்களுக்கு அந்த தொல்லை இல்லை அதிக பட்சம் ஒரு சில வாரங்கள் தான் அதற்குள் சந்தையினை விட்டே அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் . அந்நிய முதலீட்டாளர்களை வைத்து சந்தையினை தொடர்ச்சியாக நடத்த முயற்சிக்கிறதா இந்த அரசு ??

ஒரு பதிவு போட தெரிந்த எனக்கு மற்றும் மக்களுக்கு தெரிந்த இந்த ஆபரேட்டிங் விசயங்கள் அரசுக்கும் மற்றும் செபிக்கு தெரியாதா அல்லது தெரியாதது போல செபி நடந்து கொள்கிறதா ..........

இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் அந்நிய முதலீட்டளர்களுக்கு செபி மற்றும் அரசும் அடிபணிந்து விட்டதா ? நான் கேட்கிறேன் அந்நிய முதலீட்டாளர்களை உள்ளங்கையில் வைத்து பார்க்கும் நீங்கள் ஒரு நிமிடம் மக்கள் நமது மக்கள் ஏமாளி முதலீட்டாளர்களையும் பாருங்கள் அவ்வாறு பார்க்கும் வாய்ப்புகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .

அவர்கள் நமது மக்களை சந்தைகளை விட்டே ஒழிக்கும் முன்னாவது மக்களின் நியாயமான கேள்விகளை ஏற்று பதிலளிக்கும் நிதி அமைச்சகம் ? ...

நமது சந்தைகள் ஒரேஅடியாக சரிந்த பொழுது நமது நிதியமைச்சர் கூறியது இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளது பயம் வேண்டாம் என்றார் . அதன் பின்னர் தான் சந்தைகள் அதிகமாக சரிந்து உயரதுவங்கின . சரி அப்படி தான் சரிந்தாலும் என்ன பங்குகள் விலைகள் 80 % - 90 % வரை சரிவடையுமா ?

மக்கள் சந்தைக்குள் வர பயப்படும் 2008 இல் வெளியான பி நோட்ஸ் விவகாரத்தில் அரசு இன்றும் பல விசயங்களை பகிரங்கப்படுத்த மறுப்பது ஏன் ?

மக்களுக்கு தெரிய தா ? சந்தைகளில் நடப்பது ? ஏன் வெளியிடவில்லை ? இல்லை வெளியிட முடியாத வாறு செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அந்நிய முதலீட்டளர்களுக்கு வழங்க்கப்பட்டுவிட்டதா ?

மேலும் நான் பார்த்தவரை இந்த " buy back " அறிவிப்புகள் சந்தைகள் மிக குறைந்த புள்ளிகளில் அறிவிப்புகள் வெளியிடப்படும் . அதுவும் போனால் போகட்டும் என்பது போல நிறுவனங்கள் செபியிடம் அனுமதி கேட்டுள்ளதாக் செய்திகள் வரும் ஏன் உயர்வில் அந்த வேலையினை செய்யவேண்டியது தானே ?

அதுவும் அப்பொழுது தான் நிறுவனம் காலாண்டு முடிவுகள் போட்டு முதலீட்டாளர்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியும் . அப்பொழுது தான் நிறுவன ப்ரமொட்டர்கள் தங்களிடம் உள்ள பங்குகளின் எண்ணிகையை அதிகரிப்பார்கள் இதை கவனித்ததா அரசு ? திருப்பி யாரேனும் கேட்டால் அந்த பங்கு 0 கே சென்று விடும் என்பது போல செபி அறிவிப்பு வெளியிடும் ....

இதே போல அதிக பட்ச புள்ளிகளில் தான் போனஸ் மற்றும் நிறுவனங்களை இணைத்தல் போன்ற செயல்களுக்கு நிறுவனங்கள் ஈடு படும் . செபியும் அனுமதி அளிக்கும் ஏன் செபி இதை தடுக்க கூடாதா ? அல்லது செபிக்கு இதிலும் சம்பந்தம் உள்ளதா ? ( எனக்கு விளங்கவில்லை )

சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் செல்லிங் அதிகரித்து விட்டது அதனால் அண்ட் நிறுவனம் buy back செய்கிறது என்று பதில் வரும் ஏன் தெரியாதா அரசுக்கு அந்நிய முதலீட்டளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் பங்குகள் வாங்கி விற்க அனுமதி உண்டு என்று ........

மேலும் அவ்வாறு அந்நிய முதலீட்டளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது மேலும் சில பல விசயங்களில் அதிகரித்துக் கொண்டே வருவது ஏன் ?

இப்பொழுது உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட அந்நிய முதலீட்டலர்களுடன் கை கோர்க்கிறது ... ஏன் இந்த அநாகரீகமற்ற செயல்கள் உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனதினர்களே ??

மேலும் சந்தைகளின் வர்த்தக நேரத்தில் செபி பங்குகளின் தாறுமாறாக உயர்வது கண்டும் அதனுக்குரிய உடனடி நடவடிக்கை எடுக்காமல் பங்குகளின் வர்த்தகத்தில் ------------------------------------------

மாற்றங்களை உடனடியா செய்தி வெளியிட்டு லோ பரீஸ் ஆகி விடும் மக்கள் அந்த பங்கினை விற்க படாதபாடு பட வேண்டும் . உதாரணம் பிரமிட் , ஆஸ்த்ரால் கோக் சத்யம் எக்ஸ்ல் டேலேகோம் நிசான் காப்பர் , -- இந்த மாதிரியான பிரச்சனைகளையும் உடன் வெளியிடாமல் மக்களுக்கு சாதகமாக நல்லதொரு முடிவினை நிறுவனத்திடம் பேசி முடிவு கண்டவுடன் தவறான செய்திகளை வெளியிட வேண்டும் .

அவ்வாறு செய்வதில்லை உடன் தவறான செய்திகளை பரப்பி எல்லாம் ....................

ஒரு நிறுவனம் புதிதாக பங்கு வெளிஎட்டில் இறங்கும் பொழுது செபி தானே அவர்களது ஆவங்களை பார்த்து அனுமதி வழங்குகிறது . அவர்களுக்கு தெரியாத மேற்சொன்ன பிரச்சனைகள் ..............

இவ்வளவும் இருக்க நமது மக்களை இன்னும் சூடேற்ற நலல் செய்திகளை பரப்பும் மீடியாக்கள் ( அவனுகளை உயிரோட கொளுத்தனும் மன்னித்து விடுங்கள் கோபத்தினை கட்டுப்படுத்த முடியவில்லை , பரதேசிகள் என்னமோ சந்தைகள் அவங்கப்பன் சொத்து மாதிரி தான் எல்லா பரபரப்பையும் வெளியிட்டு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் ..... என் மக்கள் காப்பற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கதிலே சற்று கோபம் .........

மீடிய நிறுவனங்கள் பல இதே போல தான் செய்திகளை தவறாக வெளியிடுவது மற்றும் மேற்சொன்ன பரபரப்புகளை வெளியிட்டு சந்தைகளில் சில குளறுபடிகளை உண்டாக்குகிறார்கள் . அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் மறுக்கிறதா அல்லது புகார்கள் எதுவும் இல்லையா ?

மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் தாங்கள் அறிந்ததே அனைவரும் சேர்ந்து இதை அரசுக்கு புகார் இட வேண்டும் அப்பொழுது தான் நான் எதிர் பார்த்து மாதிரி நம் மண்ணின் மணிகள் காப்பாற்ற படுவார்கள் ....

செய்வீர்களா ................

நன்றி !!

ரமேஷ்
வணக்கம் நண்பர்களே !!

இன்றைய நமது சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கலாம் என நினைக்கிறேன் காரணம் இன்றைக்கு ஜப்பானிய சந்தைகள் விடுமுறை ஆதலால் ஆசியா சந்தைகள் சில குழப்பமான சூழலில் வர்த்தகம் ஆகி வருகிறது .

இன்றைய ஐரோப்பிய சந்தைகளின் துவக்கத்திற்கு பிறகு தான் நமது சந்தைகள் சற்று சூடு பிடிக்க ஆரம்பமாகும் . அமெரிக்கா பியுச்சர் சந்தைகளும் சற்று சில புள்ளிகள் மட்டுமே அதிகரித்து வர்த்தகம் ஆகி வருகிறது . இது நமது சந்தைகளுக்கு பெரிய தாக்கத்தினை தராது .

அடடா முக்கியமான விஷயம் குறிச்சுக்கோங்க !!!!!!!

அணில் அம்பானி திடீரென முகேஷ் அம்பாநிகிட்ட சமரசமாக போக விருப்பமின்னு ஒரு செய்தி வந்து இருக்கு . அதனால் சந்தைகள் சற்று உயர்வு அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன .

மேலும் நாளை நடக்கவுள்ள மகாராஷ்டிரா தேர்தல் சந்தைகளில் ஒரு கலக்கதினை ஏற்ப்படுத்தலாம் என கருதுகிறேன் .

எதற்கும் சந்தைகளில் ஷாட் நிலைகளில் உள்ளவர்கள் அனைத்து நிலைகளில் இருந்து வெளியேறுதல் நல்லது அல்லது ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் வைத்து வணிகம் செய்தல் நலம் என நினைக்கிறேன் .

தினசரி வணிகம் செய்பவர்கள் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளில் ஷார்ட் செல்ல வேண்டாம் . நிபிட்டி முக்கிய ஆதரவு நிலைகளான 4920 நிலைகள் உடைபடாமல் சந்தைகள் 4950 இக்கு மேல் துவங்கினால் சந்தைகள் 5000 புள்ளிகளை தொடமுயற்சிக்கலாம் . அல்லது 4920 புள்ளிகளை சந்தைகள் இழந்தால் 4860 வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன .

எதற்கும் மேலே சொன்ன இரு விடயங்களை மனதில் கொள்ளவும் . அல்லது சந்தையினை விட்டு விலகி இருங்கள் இப்போதைக்கு இது தான் நல்லது ..

மேலும் நமது சந்தைகள் நாளைய தினம் விடுமுறை மேற்சொணன் இருவிடயங்களை வைத்துப்பார்த்தால் சந்தைகளுக்கு சாதகமாக அந்த செய்திகள் அமைந்தால் சந்தைகளில் ஒரு பெரிய உயர்வுகள் திடீரென நடக்கக் வாய்ப்புகள் அதிகம் உள்ளன

நன்றி !!

ரமேஸ்

ஞாயிறு, அக்டோபர் 11, 2009

விடுமுறை பதிவு - தீபாவளி

வணக்கமுங்கோ !!!

என்ன நண்பர்களே தீபாவளி நெருங்கி வருகிறது . பலகாரங்கள் இனிப்பு மற்றும் பட்டாசு புத்தாடைகள் வாங்கி விட்டீர்களா ,...

ஏதோ நரகசுரன் அழிக்கப்பட்டது என்னவோ ஒரு முறை தான் ... ஆனால் நம் மக்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக கொண்டாடி மகிழுந்து வருகின்றனர் . இருந்தாலும் இவ்வாறு கொண்டாடுவது கூட ஒரு முறையில் ஒரு நல்ல விஷயம் தான் எப்படி என்கிறீர்களா ?

ஒரு குடும்ப தலைவன் மனைவி மக்கள் உற்றார் உறவினர் உடன் சந்தோசமாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒரு அருமையான பண்டிகை தான்தீபாவளி ..

இவ்வாறு முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படும் பொழுது எந்தொரு மனிதனும் சில விசயங்ககளை திருத்தி கொள்ள வாய்ப்புகள் கிடைக்கிறது .உதாரணமாக சொந்த பந்தங்கள் அனைவரையும் சந்திக்க நேரும் பொழுது அனைவரது மனமும் லேசாகும் . சண்டை சச்சரவுகள் குறையும் ..பரஸ்பரம் அனைவர் உள்ளத்திலும் ஒரு அமைதி குடி கொள்ளும் ...

உண்மையாக சொன்னால் எனக்கு தீபாவளி கொண்டாட பிடிக்காது . காரணம் மக்கள் கடிணமாகபல நாட்கள் உழைத்து சம்பாதித்த பணத்தினை சில நாட்களில் செலவு செய்வது .நம் மக்களிடையே இன்னும் சில தவறான பழக்கங்கள் உள்ளன . அவையாவன ஒரு சில செயல்கள் மட்டுமே வெளியில் கூற இயலும்

ஒரு பண்டிகை வந்தால் அடுத்த வீட்டுக்காரன் துணி எடுத்தால் அதன் பின்னர் அவனை விட 10 ரூபாய் சேர்த்து எடுத்தல் தான் திருப்தி அடைவான் ..

அடுத்த வீட்டு ராமசாமி குப்புசாமி எல்லாம் பட்டாசு 500 ரூபாய்க்கு வாங்கினால் இவன் 700 வாங்கினால் தான் திருப்தி

ஆனால் மேற்சொன்ன இரு விடயங்களிலும் நம் ஆட்கள் அவனது தன்மானம் மட்டுமே பார்ப்பானே தவிர மனைவி மக்கள் சந்தோசத்தினை பார்க்க மாட்டன் . (ஆனால் நான் கூறுவது பல ஆண்டுகளுக்கு முந்தய மக்கள் பழக்கத்தினை முந்தய பொருளாதார சூழலுக்கு பின்னர் இப்பொழுது மாறிவிட்டதாக கருதுகிறேன் )

இப்பொழுது மக்களிடையே எதை எவ்வாறு செய்வது என்ற அனுபவமும் மற்றும் சமுதாயத்திலே நன்றாக வர வேண்டும் என்ற எண்ணமும் நன்றாக வந்துள்ளது . நல்ல முறையில் நல்ல செயல்களை செய்து நற் பெயர் பெற்று இருந்தால் நமது சந்ததிகள் நல்ல முறையில் வாழ முடியும் ..

முடிந்த வரை அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள் . அனைவரையும் நேசியுங்கள் . வாழ்கை வாழ்வதற்கே என்று வீம்புடன் இருக்காதீர்கள் அது உங்களையும் உங்கள் சந்ததிகளையும் வாழ்கையில் சில இழப்புகளை சந்திக்க செய்யும்

முடிந்தால் இயற்கையை நேசியுங்கள் அது உங்களுக்கு பல பாடங்களை சொல்லி தரும் அதை வைத்து வாழ்வில் இனிமை பெறலாம்

நன்றி

இது போல் இன்னும் ஒரு -

நன்றி

ரமேஷ்

புதிய பதிவு - தலைப்பு விடுமுறை பதிவு

வணக்கம் நணபர்களே !
விடுமுறை பதிவு என்ன தலைப்பை பார்த்ததும் முடிவு செய்து இருப்பீர்களே அதே தான் பழைய எனது வலை பதிவில் அளித்த விழிப்புணர்வு இடுகைகள் போல இது முடித்த வரை வரும் வாரம் சந்தைகள் போல தொடர முயற்சிக்கிறேன் ..

இதில் முற்றிலும் சந்தைகள் பற்றிய விஷயம் இருக்காது . மற்ற பல விசயங்கள் நண்பர்களின் உரையாடல்கள் பற்றி செய்திகள் இன்னும் பல

தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

நன்றி

ரமேஷ்

சனி, அக்டோபர் 10, 2009

வரும் வாரம் சந்தைகள் - October 10, 2009

வணக்கம் நண்பர்களே !

கடந்த வாரத்திற்கு முந்தய வாரம் நமது சந்தைகள் சற்று அதிக பட்ச புள்ளிகளை நிலைகளாக வைத்து நமது சந்தைகள் வர்த்தகம் ஆனது நினைவிருக்கிறதா நண்பர்களே .. ஆம் நமது சந்தைகள் அந்த வாரத்தில் சற்று அதிக பட்ச அதாவது இவ்வருட உயர்ந்த புள்ளிகளுக்கு அருகில் வர்த்தகம் ஆகின உலக சந்தைகள் அனைத்தும் அந்த நாட்களில் சற்று அதிக பட்ச சரிவினை அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது .

ஆக இந்தவார உலக சந்தைகளின் நிலைகளை வைத்து பார்த்தால் உலக சந்தைகள் அனைத்தும் இவ்வார வர்த்தகத்தில் கிட்டத்தட்ட அமெரிக்கா சந்தைகள் 3.5 % - 5% வரையிலும் ஐரோப்பிய சந்தைகள் 4% - 5% வரை உயர்ந்துள்ளன . ஆசியா சந்தைகளும் இத்தனை பிரதிபலிக்கும் விதமாக 3 % - 4% வரையிலும் மற்றும் ஜப்பானிய சந்தைகள் 3 % வரையிலும் உயர்வில் முடிந்துள்ளன . ஆனால் நமது சந்தைகள் சற்று சரிவடைந்து அதிக பட்ச சரிவாக 2 % வரை சரிவில் முடிந்துள்ளன ..

வரும் நாட்களிலும் மற்றும் உலக நாடுகளிலும் இது பண்டிகை காலம் என்பதால் தங்கத்தின் விலைகள் சற்று தொடர்ச்சியாக வரும் நாட்களில் உயர வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது . மேலும் தங்கத்தினை விட வெள்ளியில் முதலீடுகள் அதிகரித்து வருவத்தாகவும் தெரிகிறது . இவ்வாறு உலக சந்தைகளில் சற்று முதலீடு முறைகள் மாறும் பொழுது பங்கு சந்தைகளும் மற்றும் அதனை சார்ந்த திட்டங்களிலும் மக்கள் முதலீடுகள் சற்று குறையும் வாய்ப்புகள் சற்று உள்ளன .

ஆகவே உலக சந்தைகளின் போக்கினை சற்று உற்று நோக்கினால் அனைத்து சந்தைகளும் முக்கிய எதிர் நிலைகளை கடக்க இயலாமல் சற்று தடை படுகிறது மேலும் அந்த நிலைகளில் சற்று செல்லிங் அதிகரிக்கிறது . இது கடந்த சில நாட்களாக நமது சந்தைகளில் நடை பெற்று வருவதாக தெரிகிறது . இது நமது சந்தைகளில் மட்டுமல்லாது உலக சந்தைகளிலும் சற்று அதிகரித்து வருகிறது .

மேலும் ஆசியா சந்தைகள் மற்றும் ஜப்பானிய சந்தைகளும் சற்று சரிவினை காண வாய்ப்புகள் அதிகம் உள்ளன . ஏன் எனில் அந்த சந்தைகள் சற்று உயர்வுகளில் வர்த்தகம் ஆகி வருகிறது மேலும் அங்கு அந்த சந்தைகளில் நல்லதொரு உயர்வினை வைத்து வர்தகமாகிறது .

இப்போதைய சூழ்நிலையில் அமெரிக்கா சந்தைகள் முக்கிய எதிர் நிலையான 9858 நிலைகளை கடக்க முயன்றால் சந்தைகள் 10120 வரை செல்லும் வாய்ப்புகளை மறுக்க இயலாது .

அதே போல முன்பு கூறியது போல ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் சற்று அதே போக்கினை கடை பிடிக்கலாம் .

நமது சந்தைகளை பொறுத்த வரை முக்கிய எதிர் நிலைகளாக இருந்த 5088 நிலைகளை கடக்க இயலாம ல்சந்தைகள் சற்று தடுமாறுவது சற்று சரியான விஷயம் தான் . ஆனால் முக்கிய அதரவு நிலைகளான 4950 - 4920 நிலைகள் சற்று உடை பட்டால் சந்தைகளில் சரிவினை தடுக்க இயலாது என்றே கருதுகிறேன் .

மேலும் நமது சந்தைகள் சற்று இப்போதைய உயர் வர்த்தக சூழலில் முக்கிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரவுள்ளதால் சந்தைகள் போக்கினை அவ்வளவு எளிதாக யாரும் கணிக்க இயலாது என்றே கருதுகிறேன் . இருந்தாலும் நமது சந்தைகளில் முக்கிய ஆதரவு நிலையான 4920 நிலைகள் உடை பட்டால் சந்தைகள் 4860 வரை சரிவடையலாம் ..

கவனமாக இருங்கள்


முக்கிய க்ருசியல் நிலைகள்

ஆதரவு -- 4920 , 4850 , 4770 ------------

எதிர்ப்பு --- 4985 , 5020 , 5080 ............

நன்றி

அன்புடன்

ரமேஷ்

வணக்கம்
நேற்றைய நமது சந்தைகள் நல்லதொரு பாடத்தினை நமக்கு கற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம் ஏன் என்றால் நல்ல காலாண்டு அறிக்கை என எதிர் பார்க்கப்பட்ட இன்போசிஸ் பங்குகள் சற்று உயர்வில் துவங்கி சந்தையையும் சற்று உயர்விற்கு கொண்டு சென்றது . பின்னர் சந்தைகள் சற்று சரிய துவங்கின ...

நேற்றைய ஆசியா சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கி அதே நிலைகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன . நமது சந்தைகள் எதிர் பார்த்ததை போல ஆசியா சந்தைகளின் போக்கினை நேற்று பின்பற்றவில்லை . காரணம் தெரியவில்லை . ஏன் எனில் ஆசியா சந்தைகளை பின்பற்றி இருந்தால் சந்தைகள் சரிவு இருக்காது .

பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகளும் சற்று சரிவில் துவங்கி பிளாட் மற்றும் சிறிய சரிவு போன்ற நிலைகளில் வர்த்தகம் ஆனது . நமது சந்தைகள் ஐரோப்பிய சந்தைகளையும் பின்பற்றவில்லை . அனேகமாக நான் புதன் பதிவில் கூறியது போல சந்தைகள் போன வர உலக சந்தைகளின் இழப்பினை இந்தவாரம் நமது சந்தைகள் ஈடு கட்டி இருக்கலாம் என கருதுகிறேன் ...

மேலும் நமது சந்தைகள் நேற்று முக்கிய ஆதரவு நிலைகளான 4950 மற்றும் முக்கிய குரூசியல் நிலையான 4932 -4920 இதில் 4932 நிலைகள் உடை பட்டுள்ளது சற்று சரிவின் ஆரம்பம் தான் என கருதுகிறேன் . வரும் நாளில் 4920 மட்டுமே முக்கிய க்ருசியல் புள்ளியாக இருக்கும் என கருதுகிறேன் .. முடிவுகளில் கூட நமது சந்தைகளில் மீறிய அளவில் ஒரு ஷார்ட் கவரிங்கோ அல்லது பிரெஷ் பையிங்கோ இல்லாதது சற்று ஆச்சர்யதினை ஏற்பபடுதுக்கிறது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுகளில் வர்த்தகத்தினை துவங்கி சற்று அதே நிலைகளில் வெகு நேரம் சந்தைகள் வர்த்தகம் ஆகின . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 0.80 % - 1 % வரை உயர்வில் முடிந்தன .அமெரிக்கா சந்தைகளும் கடந்த சில நாட்களாக முக்கிய எதிர் நிலையினை கடக்க இயலவில்லை என்பது குறிப்பிடும் படியான விஷயம் ஆகும் ..

நன்றி !!

வெள்ளி, அக்டோபர் 09, 2009

வணக்கம் நண்பர்களே !!

நேற்றைய நமது சந்தைகள் சற்று உயர்வில் துவங்கின .நேற்று முன்தினம் வந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சற்று சந்தைகளுக்கு சாதகமாக வந்தது நல்ல விஷயம் தான் ..

மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் தனது மொத்த லாபத்தில் சற்று சரிந்துள்ளது ஆனால் விற்ப்பனையில் சற்று அதிகரித்துள்ளது .ஆக இந்த செய்தி சற்று ஊக்கம் தரும் விஷயம் தான் மேலும் தனது பங்கு தாரர்களுக்கு ஒரு பங்குக்கு ஒரு பங்கு போனஸ் அறிவித்துள்ளது..

சந்தைகளில் சற்று நல்ல விஷயம் தான் .அதனால் சந்தைகள் சற்று உயர்வில் வர்த்தகம் ஆகின .

நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவில் சற்று குறைவான உயர்வுகளில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன . அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிக உயர்வில் துவங்கின .

ஆனால் நமது சந்தைகள் முடிவில் சற்று குழப்பத்தில் வர்த்தகம் நடைபெற்றது காரணம் இன்று வரவுள்ள இன்போசிஸ் நிறுவன காலாண்டு அறிக்கைதான் ஏன் எனில் ஒவ்வொரு காலாண்டிலும் இன்போசிஸ் நிறுவனம் தான் முதலில் காலாண்டு அறிக்கைகளை வெளியிடும் அதை வைத்து மொத்த நிறுவனங்களும் சற்று அதனை பின் தொடர் வரும் என கருதப்பட்டது .

ஆனால் இம்முறை அதுபோல அல்லாமல் முதலில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது .ஆதலால் நமது சந்தைகள் முடிவில் அனேக நபர்கள் சந்தையில் இருது வெளியேறியதால் சற்று சந்தைகள் கீழிறங்கின .

ஆசியா சந்தைகள் முடிவில் சற்று நல்ல ஒரு உயர்வில் முடிந்துள்ளன .அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று அதிக உயர்வில் துவங்கின .பின்னர் ஐரோப்பிய சந்தைகள் அதே நிலைகளில் நின்று வர்த்தகம் ஆகின .

நமது சந்தைகள் சற்று மேற்கூறிய காரணங்களால் சந்தைகள் சற்று முடிவில் சரிந்தன ..நமது சந்தைகளை பொறுத்த வரை கடந்த சில வர்த்தக தினங்களாக முக்கிய எதிர் நிலை மற்றும் ஆதரவு நிலைகள் தொடர்ச்சியா ஸ்டாப் லாஸ் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிட தக்கது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுஇல் துவங்கி அதே உயர்வுகளில் வர்த்தகம் ஆகின . அங்கு வந்த ஜாப் லாஸ் அறிவிப்புகள் சற்று சந்தைகளுக்கு சாதகமாக வந்துள்ளது .முடிவில் அமெரிக்கா சந்தைகள் இழுபறியான எதிர்நிலைகளை கடக்க இயலாமல் சற்று உயர்வில் சரிந்து முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று குழப்பமான சூழலில் வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . காரணம் நேற்றய அமெரிக்கா சந்தைகள் எதிர் நிலைகளை கடக்க இயலாமல் போனதாக இருக்கலாம் என கருதுகிறேன் .

ஜப்பானிய சந்தைகள் 1% உயர்விலும் மற்றும் சீன சந்தைகள் சற்று அதிக அளவு உயர்ந்துள்ளன . சீன சந்தைகள் அதிக பட்ச தினசரி அடைந்துள்ள சூழலில் சந்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன .

இன்றைய முக்கிய எதிர் பார்ப்பான இன்போசிஸ் காலாண்டு அறிக்கைகள் சற்று நன்றாக வந்துள்ளன . அதனை வைத்து நமது சந்தைகள் வர்த்தகம் இருக்கும் இருந்தாலும் சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் .


நன்றி

வியாழன், அக்டோபர் 08, 2009

வணக்கம் நண்பர்களே ,

நேற்றைய நமது சந்தைகள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிவிப்பிர்க்காக சற்று மதியம் வரை நிலைகள் மாறாமல் வர்த்தகம் ஆனது . பின்னர் ஆசியா சந்தைகள் முடிவுகள் சற்று சாதகமாக இல்லாததால் சந்தைகள் சற்று சரிந்தன .

மேலும் நமது சந்தைகள் கடந்த சில நாட்களாக முக்கிய ஆதரவு மற்றும் எதிர் நிலை புள்ளிகளை கடந்த வகையில் ஒரு குழப்பமான வர்த்தகமே சந்தைகளில் நடை பெறுகிறது .

நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் குறிப்பிடும் படியான ஒரு உயர்வினையோ அல்லது சரிவினையோ காணவில்லை ..

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வில் துவங்கி உள்ளன .நமது சந்தைகள் துவக்கம் சற்று பிளாட் நிலைகளில் இருக்கவே வாய்ப்புகள் அதிகம் . பெரிய அளவிலான சரிவிகள் இருக்காது .

இன்றைய சந்தைகளை பொறுத்த வரை சந்தைகள் துவங்கி ரிலையன்ஸ் இன் போக்கினை வைத்து தான் மொத சந்தையின் போக்கினையும் காண இயலும்

இன்றைய நிலைகள்

ஆதரவு -- - - 5012 , 4980 , 4950 .

எதிர்ப்பு - ---- 5040,5088,5150

நன்றி !!!

புதன், அக்டோபர் 07, 2009

வணக்கம் நண்பர்களே

நேற்றைய சந்தைகளில் நிப்டி கடந்தவார உலக சந்தைகளின் இழப்பினை ஈடு கட்டுவதாக முன்பு கூறியதை போல நேற்றைய சந்தைகள் இருந்தன ஆனால் எனது கணிப்பின் படி அது இந்த வார இறுதியில் இருக்கும் என எதிர் பார்த்தேன் .

ஆனால் சற்று கூற்று தவறாகி நேற்றைய சந்தைகளிலே அது நிகழ்த்தப்பட்டதாக கருதுகிறேன் . மேலும் நேற்றைய சந்தைகளில் நன்றாக வர்த்தகம் நடந்தன வர்த்தகத்தின் அளவும் சற்று அதிகப்படியாகவே நடந்துள்ளன .

நேற்றைய ஆசிய சந்தைகள் நமது சந்தைகளின் வர்த்தகத்திற்கு இடையிலும் மற்றும் வர்த்தகத்தின் முடிவிலும் ஒரே நிலைகளில் நின்று வர்த்தகம் ஆகி முடிந்தன . முடிவில் ஆசியா சந்தைகள் 2% - 2.5% வரை உயர்வில் முடிந்தன ...

நேற்றைய ஐரோப்பிய சந்தைகளும் துவக்கம் சற்று மந்தமாக இருந்தாலும் பின்னர் உயர்ந்த அமெரிக்கா ப்யுச்சர் சந்தைகளின் போக்கினை ஒட்டி சற்று வேகமாக உயர்ந்தன .

முடிவில் நமது சந்தைகள் சற்று சிறிய உயர்வுகளில் முடிந்தன . இருந்தாலும் அதிக அளவு உயர்த்தப்படவில்லை . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 2% - 3% வரை உயந்து முடிந்தன .


நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே சற்று உயர்வில் வர்த்தகம் ஆகி பின்னர் படிப்படியாக அடுத்தடுத்த உயர்வுகளை தொட்டன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 2 % - 3% உயர்வில் முடிந்தன ,,,

இன்றைய ஆசியா சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் போக்கினை ஒட்டி சற்று உயர்வுகளில்வர்த்தகத்தினை துவங்கி உள்ளன . நமது சந்தைகள் சற்று மேற்கூறிய காரணங்களால் துவக்கத்தில் பெரிய அளவு உயர்வினை எதிபர்க்க இயலாது என்றே கருதுகிறேன் .

சந்தைகள் துவங்கிய பின்னரே சந்தையின் போக்குகள் சற்று பிடிபடும் இருந்தாலும் ஷார்ட் நிலைகளில் உள்ளவர்கள் இறுதி ஸ்டாப் லாஸ் ஆக 5088 ஐ வைத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஸ்டாப் லாஸ் இட வேண்டாம் , ஸ்டாப் லாஸ் இலக்கினை தாண்டி சந்தைகள் செல்லும் பட்சத்தில் ஷார்ட் ஐ கவர் செய்து விட்டு புதிய உயர்வுகளில் பிரெஷ் ஷர்ர்ட் செல்லலாம் . ஆனால் சந்தைகளின் உயர்வுகளில் லாங் பொசிசன் எடுக்க வேண்டாம்

இன்றைய சந்தைகள் சற்று அதிக ஏற்ற இறக்கங்களை எதிர் பார்க்கலாம் . முடிந்த வரை தினசரி வர்த்தகர்கள் கவனமாக இருக்க வேண்டும் ...

நிபிட்டி நிலைகள் :

ஆதரவு -- 5012 , 4980 , 4950 ...............

எதிர் --- 5088 , 5120 , 5150 ................

நன்றி

ரமேஷ்

செவ்வாய், அக்டோபர் 06, 2009

வணக்கம் நணபர்களே !

நேற்றைய சந்தைகளில் நமது சந்தைகள் சற்று கடந்த வார உலக சந்தைகளின் சரிவினை குறைந்த அளவில் சரி செய்துள்ளது என்றே கருதுகிறேன் . நேற்றைய நமது சந்தைகள் அந்த உலக வரிசையில் 1.5% மட்டும் சரிவில் துவங்கி வர்த்தகம் ஆகின .

நேற்றய ஆசிய சந்தைகள் சற்று சரிவுகளை நிலை நிறுத்தியே வர்த்தகம் ஆனது காரணம் அந்த சந்தைகள் கடந்த வாரங்களில் இழந்த புள்ளிகள் சற்றே அதிகம் ..
அதன் காரணமாக அந்த சந்தைகள் சில மணிநேரங்கள் துவக்கத்தின் நிலைகளிலேயே வர்த்தகம் நடந்து முடித்துக் கொண்டன .

பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சற்று சரிவில் துவங்கி பின்னர் நமது சந்தைகள் முடிவின் பொழுது அவைகள் முழுவதும் மீண்டு உயர துவங்கின .நமது சந்தைகள் இருந்தாலும் அந்த கடந்த வார உலக சந்தைகளின் இழப்பில் பங்கெடுக்க அதே சரிவுகளில் சந்தைகள் முடிந்தன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே சற்று உயர்வில் வர்த்தகம் ஆகின .பின்னர் அங்கு வந்த ஐ எஸ் எம் எனும் அறிவிப்பு சற்று சந்தைகளுக்கு ஊக்கத்தினை தந்தன . சந்தைகள் தொடர்ந்து உயர்விலேயே இருந்தன . முடிவில் அமெரிக்கா சந்தைகள் 1% - 1.5% வரை உயர்வில் முடிந்தன .

இன்றைய ஆசிய மற்றும் ஜப்பானிய சந்தைகள் சற்று தடுமாட்டமான நிலைகளில் சற்று உயர்வில் துவங்கி உள்ளன .அனேகமாக இன்றைய அமெரிக்கா சந்தைகள் அல்லது அமெரிக்கா பியுச்சர் சந்தைகளின் போக்கினை வைத்தும் மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை வைத்து ஆசியா மற்றும் நமது சந்தைகளின் போக்கு இருக்கலாம் ...

நமது சந்தைகள் இன்றைய நிலைகள்

ஆதரவு ---- 4980,4950,4910

எதிர்ப்பு ---- 5012,5040,5088

நன்றி !

திங்கள், அக்டோபர் 05, 2009

அனைத்து நண்பர்களுக்கும் காலை வணக்கம் ..

இன்றைக்கு பலமான எதிர் பார்ப்பில் துவங்கி உள்ளன ஆசியா சந்தைகள் அமெரிக்கா சந்தைகளின் வீழ்ச்சியும் மற்றும் வரும் வார சந்தைகளின் போக்கும் இன்றைய உலக சந்தைகளின் நிலையினை பொறுத்தே அமையும் என எதிர் பார்க்கிறேன் .

அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் தற்பொழுது + 30 புள்ளிகளில் வர்தகமாகி வருகிறது ஆதலால் ஆசியா மற்றும் ஜப்பானிய சந்தைகள் சற்று சரிவில் இருந்து மீள்வதை இன்று காணலாம் என கருதுகிறேன் . மேலும் ஆசியா சந்தைகள் சற்று அதிகமாகவே சரிவடைந்துள்ளன .

கடந்த வெள்ளியன்று நமது சந்தைகளுக்கு விடுமுறை ஆதலால் நமது சந்தைகள் கிட்டத்தட்ட உலக வரிசைகளின் படி 3 % வீழ்ச்சி ஐ இன்று கட்டாயம் சந்தித்தாக வேண்டும் . மேலும் உலக சந்தைகள் பிளாட் நிலைகளில் வர்த்தகம் நடப்பதால் நமது சந்தைகள் அந்தளவுக்கு வீழ்ச்சியை காணுவது சற்று கடினம் என்றே கருதுகிறேன் ..

மேலும் ஆசியா சந்தைகள் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று சரிவடையாத வரை சரிவடைவது சற்று கடினமே . எது எப்படியாகினும் நமது சந்தைகள் மற்றும் ஆசியா சந்தைகளின் முடிவும் போக்கும் ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்தினை எதிர் பார்த்து இருக்கலாம் ..

இன்றைய சந்தைகளில் முக்கிய செய்தியாக வங்கிகள் இணைப்பு பற்றிய செய்திகள் வந்தால் சற்று வங்கி துறை பங்குகள் சற்று உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளன . கவனம் தேவை வங்கி துறை பங்குகளில் ஷார்ட் செல்ல வேண்டாம் . வங்கி துறை இன்டெக்ஸ் இல் சற்று கவனமாக வர்த்தகம் செய்யுங்கள் இருபுறமும் நகர்வுகள் சற்று அதிகமாக இருக்கலாம் .

நமது சந்தைகள் இன்று முக்கிய அதரவு நிலைகள் இரண்டினை உடைக்க வாய்ப்புகள் சற்று அதிகம் உள்ளன . 4950 , 4932 , ஆகவே அந்த நிலைகளில் சற்று லாங் பொசிசன் உள்ள நண்பர்கள் கவனமாக இருங்கள் .

எதிர் நிலைகளாக 5040 , 5088 உள்ளன . ஆகா சார்ட் நிலைகளில் உள்ள நண்பர்கள் சந்தைகள் GAP DOWN ஆக துவங்கும் பட்சத்தில் 5040 ஸ்டாப் லாஸ் இடவும் பின்னர் சந்தைகள் 5080 புள்ளிகளை தாண்டும் பட்சத்தில் அந்த நிலைகளில் பிரெஷ் ஷார்ட் செல்லலாம் ஆனால் அதற்க்கு ஸ்டாப் லாஸ் இட தேவை இல்லை .

ஏன் எனில் சந்தைகள் அந்த நிலைகளை தாண்ட சற்று வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன .. என்று கருதுகிறேன் ........

நன்றி @!!!!!!!!!!!!!

அன்புடன்
ரமேஷ்

ஞாயிறு, அக்டோபர் 04, 2009

வரும் வாரம் உலக சந்தைகள் - October 04, 2009

வணக்கம் நண்பர்களே @!
போன வாரம் கடுமையான சரிவுகள் அடைந்து முடிந்த உலக சந்தைகளை பார்த்தும் உங்களின் தூக்கம் சற்று பறி போய் தான் இருக்கும் . அனைத்து உலக சந்தைகளும் கடந்த வாரத்தில் கிட்ட தட்ட 3.5 % - 6 % வரை சரிவடைந்து முடிந்தன .

நமது சந்தைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை ஆதலால் திங்கள் ஒரு gap down எதிர் பார்க்கலாம் , ஆனால் அந்த சந்தைகளின் வரிசைப் படி பார்த்தால் நமது சந்தைகள் கிட்டத்தட்ட 4 % வரை சரிவடைத்து துவங்க வேண்டும் . ஆனால் அதற்க்கு சாத்திய கூறுகள் சற்று குறைவாகவே இருக்கும் என கருத்து கிறேன் .

மேலும் நமது சந்தைகளை பொறுத்த வரை ஹாங்க்செங் சந்தையையே முழுவதுமாக பின் தொடர்கிறது , பின்னர் ஐரோப்பிய சந்தைகளை பின் தொடர்கிறது . மேலும் கடந்த வார சரிவுகளில் மாட்டிய இந்த சந்தைகள் சற்று உயரவே செய்யும் , ஆக நமது சந்தைகள் சற்று நாடகத்தினை நடத்தலாம் .

உலக சந்தைகளை பொறுத்த வரை இந்த வாரம் பல தெளிவுகள் கிடைக்கலாம் இது பண்டிகை கால சீசன் என்பதால் தங்கம் சற்று விலை மேலும் உயரும் என கருதுகிறேன் . மேலும் இதே சீசன் காலங்களில் பல உற்ப்பத்தி பொருட்களின் நிறுவனங்கள் விடுமுறை என்பதால் கமாடிட்டி சம்பந்தமான பொருட்கள்விலைகள் சற்று அதிகரிக்க வாய்ப்புகள் சற்று அதிகம் உள்ளன .

சந்தைகளை பொறுத்த வரை உலக வரிசை படி நமது சந்தைகள் கிட்ட தட்ட 4 % சரிவினைகட்டயம் கட்டியாக வேண்டிய சூழலில் உள்ளது . மேலும் அதே பண்டிகை கால விடுமுறை செலவினங்களை ஒட்டி சந்தைகள் சற்று லாபத்தினை முதலீட்டாளர்கள் உறுதி செய்வார்கள் என்று கருதுகிறேன் .

அவ்வாறு நடக்கும் பட்சத்தில் நமது சந்தைகள் மட்டுமல்ல உடன் உலக சந்தைகள் பலவும் சரிவினை நோக்கலாம் .. மேலும் உலக மற்றும் நமது சந்தைகள் வர்த்தகம் ஆவது ஆண்டு உயர்வில் என்பதினை மறந்து விட வேண்டாம் ......

நமது சந்தைகள் இவ்வார வர்த்தகத்தில் அதரவு நிலைகளாக 4950 , 4932 4880. ஆகிய நிலைகளும் எதிர்ப்பு நிலைகளாக 4980 ,5012 , 5040 , 5088 ஆகியன இருக்கும் .முடிந்த வரை சந்தையின் போக்கில் செல்லுங்கள் ..

உயர்வில் செல்லிங் செய்யலாம் ஸ்டாப் லாஸ் மேற்கோரிய எதிர் நிலைகளின் அருகாமையில் செல் செய்து அடுத்த எதிர் நிலையில் ஸ்டாப் லாஸ் போடலாம்
கீழ் நிலைகளில் லாங் செல்ல விரும்புபவர்கள் ஆதரவு நிலைகளுக்கு அருகாமையில் வாங்கி அடுத்த ஆதரவு நிலைகளில் ஸ்டாப் லாஸ் போடவும் .

ஒரு வேலை நமது சந்தைகள் உலக சந்தைகள் சரிவின் பொழுது சரியாமல் நின்றால் அடுத்த உலக சந்தைகளின் உயர்வில் கவனமாக இருங்கள் . நமக்கு பெரிய சரிவு காத்திருக்கலாம் ........

நன்றி

அன்புடன்
ரமேஷ்

உலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும்

வணக்கம் நண்பர்களே !

உலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் தொடர்கிறது


முந்தய பதிவினை படித்து விட்டு தொடருங்கள் அன்பு நண்பர்களே !

அமெரிக்கா அதிபர் தேர்தல் தியதி அறிவிக்கப்பட்டதும் மக்களிடமும் மற்ற உலக நாடுகளிடமும் வந்த ஒரே எதிர் பார்ப்பு புதிய அதிபராக திரு ஒபாமா வந்தால் சிறப்பாக இருக்கும் என நம்பினார்கள் . அவர்கள் நினைப்பின் படி புதிய அதிபராக ஒபாமா தேர்ந்து எடுக்கப்பட்டார் . அதிபரான பின்னர் ஒபமாவும் சில நல்ல அறிவிப்புகளை வெளியிட்டார் .

அதன் படி உலக தர வரிசையில் அமெரிக்காவை மேலும் வளமைபடுத்துவது மற்றும் அமெரிக்கா வின் பொருளாதார சிக்கலை சரி செய்வது மற்றும் அங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு பதிலாக அனைத்து பிரிவுகளிலும் அமெரிக்கர்களுக்கு முதலிடம் போன்ற தேர்தல் அறிவிப்புகளால் மக்கள் செல்வாக்கு பெருகி அதிபராக திரு ஒபாமா அதிகார பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டார் .

அதற்க்கு முன்னரே புஷ் அரசின் செயல் பாடுகள் அவரது ஆதரவாளர் களாலேயே சற்று முடக்கப்பட்டன . அதுவும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்கும் விதத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்க அறிவிப்புகளான பெயில் அவுட் விஷயம் சற்றும் முனைப்பு காட்டாமல் முடக்கப்பட்டது . முடக்கப்பட்டது என்பதை விட புஷ் அரசு எதிர் கால சிக்கலில் மாட்டி கொள்ள விரும்பவில்லை .

அவ்வாறு அதிபராக திரு ஒபாமா வந்ததும் அரச சபை மற்றும் பிற செயல் பாடுகளில் அவரது அறிவிப்பிர்கேற்ப பல விசயங்கள் நடைமுறை படுத்தப்பட்டன . பின்னர் அங்கு அப்பொழுது இருந்த முக்கிய பிரச்சனையான பெயில் அவுட் பற்றிய விஷயம் எடுக்கப்பட்டதும் . மக்களிடம் அதரவு கேட்கப்பட்டது .

மக்களும் திரு ஒபாமா அவர்களின் மீதுள்ள நம்பிக்கையால் கஜானாவில் இருந்த தொகையினை ஊதாரிதனமாக செலவு செய்த நிறுவனக்களுக்கு வாரி வழங்க நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது . அதில் ஆதரவு பெருகியது மக்களின் அப்போதைய ஒரே நம்பிக்கை பொருளாதார சிக்கல்களை ஒபாமா விரைவாக சரி செய்வார் என நம்பினார்கள் .

அவரும் அதன் பின்னர் மஞ்சள் பத்திரிக்கை தர இருக்கும் நிறுவனங்களை வர சொல்லி பேசினார் . அவர்கள் தொடர்ந்து நிறுவனங்களை நடத்த வேண்டும் என்ற உத்தரவின் பெயரில் கிட்டத்தட்ட ஆறாயிரம் நிறுவனங்கள் கணக்கில் வந்தன . அதில் சில வங்கிகளும் அடக்கம் . இந்த மாதிரியான சூழ்நிலையில் சில நிறுவனங்கள் அந்த நல்ல வாய்ப்பினை தவறாக பயன்படுத்த திட்டமிட்டன .

அது என்னவென்றால் அங்குள்ள சட்ட மசோதாவின் படி மஞ்சள் பத்திரிக்கை தர விரும்புபவர்கள் நேரடியாக அரசிடம் மனு செய்யலாம் . ஒரு முறை மனு நிராகரிக்க பட்டால் அதன் பின்னர் சட்டப்படி அங்குள்ள நீதி மன்றங்களில் மனு செய்யலாம் . அவர்கள் கட்டாயம் அந்த மனுவினை ஏற்றுக்கொள்ள வேண்டும்

அமெரிக்கா
அதிபரின் பெயில் அவுட் தொகை 720 பில்லியன் என அறிவிக்கப்பட்டதும் அந்த தொகையினை பெற ஒட்டு மொத்த அமெரிக்கா மக்களும் மற்ற நிறுவனங்களும் மற்றும் வங்கிகளும் நாள் தோறும் வந்த வண்ணம் இருந்தன . முதலில் வந்த நிறுவனங்கள் சில சொன்னதை செய்ய முயற்சித்தன .

ஆனால் பின்னர் வந்த பல நிறுவனங்கள் பணத்தை பெற்றுக் கொண்டு நிறுவனத்தினை மூட முடிவெடுத்தன .

அதே போல மூடவும் செய்தன சில நிறுவனங்கள் இதை அறிந்த அரசு அவ்வாறு ஊக்க தொகை பெற்றால் நிறுவனத்தினை மூட மாட்டோம் என்ற உறுதி மொழியினை பெற்றுக் கொண்டு பணத்தினை வழங்கியது . அதையும் பெற்றுக் கொண்டு மக்கள் அரசிடம் செல்லாமல் நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்து மஞ்சள் பத்திரிக்கை கொடுத்தனர் . முன்பே கூறியது போல தவிர்க்க முடியாத அரசும் அவற்றை பெற்றுக் கொண்டது .

பல் வேறு நிறுவனங்கள் மூடப்பட்டதும் பலர் வேலை யின்றி தவித்தனர் , இதில் சில அப்பாவி மக்களும் நிறுவனங்களும் மாட்டி கொண்டன சரியாக செயல் பட விரும்பும் நிறுவனங்களுக்கு கூட ஊக்க தொகை கிடைக்க வில்லை ..

அதன் பின்னர் அதிருப்தியை அடைந்த ஒபாமா அரசு தான் செய்த பெயில் அவுட் தவறினை அறிந்து இனி ஊக்க தொகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது .. மேலும் நான் எதிர் பார்த்து போல பொருளாதார சவால்களை உடனடியாக தீர்க்க முடியாது ஆக அனைவரும் சேர்ந்து படு பட்டு அமெரிக்கா பொருளாதார சிக்கல்களை சரி செய்து உலக நாடுகளுக்கு நல்ல வழி காட்டுவோம் என இறுதி யாக ஒபமாவின் அறிவிப்பு வந்த்து .

அதன் பின்னர் தான் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மூடல் வேலை இழப்பு அதிகரித்து கொண்டே வந்தது , அதிலும் குறிப்பாக வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டு வந்தன . அதனை அறிந்த ஒபாமா அரசு வேலை வாய்ப்புக்களை புதிதாக உருவாக்கியது . வேலை இழந்தோர் அறிவிப்பை குறைக்க முயற்சித்தது அது சற்று சில மாதங்களுக்கு வேலை இல்லாதோர் அதிகரிப்பது சற்று குறைந்து வந்தது .

தற்போதைய நிலவர படி அங்கு கிட்டத்தட்ட 100 வங்கிகள் மூடல் மேலும் பல ஆயிரம் பேர்கள் வேலை இழந்தவர்களாக மற்றும் பல நிறுவனங்கள் மேலும் நஷ்டமடைந்து வருகின்றது . ஆனால் அரசு இவை அனைத்தையும் பெரிய விசயமாக கருதாமல் ஆறப்போட்டு வருகிறது . இந்த சூழ்நிலையில் நல்ல விசயங்களை மட்டும் வைத்து சந்தைகளும் உயர்த்தப்படுகின்றன . இது என்றைக்கு இருந்தாலும் ஒரு பெரிய ஆபத்தினை கொண்டு வரும் ......

அது உலக சந்தைகளையும் சற்று உயர்த்து கிறது ஆனால் நிபுணர்களின் கணிப்பின் படி இன்னும் அங்கு பொருளாதார சிக்கல்கள் சரியாக வில்லை ..

ஒரு வேலை வரும் காலங்களில் இன்னும் சில வங்கிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது .அவ்வாறு மூடப்பட்டால் அமெரிக்க கதி கலங்கி விடும் என்பது மட்டும் உண்மை ..........

தற்போதைய சூழ் நிலை நிலவரங்களின் படி இன்னும் அடுத்த ஆறு மாதங்களில்
150 வங்கிகள் வரை திவாலாகும் என தெரிகிறது ,, தற்போதைய நிலவர படி 400 இக்கும் அதிகமான வங்கிகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் தகவல்கள் வருக்கின்றன .

அதனை ஒட்டி இதே பொருளாதார சிக்கல் கொண்ட நாடுகள் வரிசையில் ஐரோப்பிய மற்றும் ஆசியா நாடுகள் உள்ளன மற்றபடி அந்தந்த நாடுகளில் அமெரிக்காவில் உள்ளது போல பெரிய அளவில் பொருளாதார சிக்கல்கள் இல்லை ..

அந்த நாடுகளிலும் பொருளாதார சிக்கல்கள் உள்ளன ஆனால் அதனை அந்த நாடுகள் சமாளிக்கும் விதத்தில் சில ஏற்ப்பாடுகளை செய்து வருக்கின்றன . எது எப்படியாகினும் அமெரிகாவில் பிரச்சனை என்றால் அது கட்டாயம் உலக நாடுகள் பலவற்றையும் பாதிக்கும் என்பதில் ஐய்யமில்லை ..........

நன்றி

வழக்கம் போல தங்களது ஓட்டினை வழங்குங்கள் கடந்த சில நாட்களா ஒட்டு வழங்காத நண்பர்களுக்கும் மற்ற இணைய தள ங்களுக்கும் நன்றி !!!!

அன்புடன்

ரமேஷ்

வெள்ளி, அக்டோபர் 02, 2009

உலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும்

வணக்கம் நண்பர்களே !

இந்த இனிய விடுமுறையிலே உலக விஷயம் பற்றி எழுதலாம் என முடிவு செய்து மேற்கண்ட தலைப்பிலே தொடருகிறேன் . இதில் சந்தை பற்றிய செய்தி சிறிய அளவில் தான் இடம் பெரும் ...............

அக்டோபர் 2008 ஐ அவ்வளவு சீக்கிரம் நாம் யாரும் மறந்திருக்க முடியாது உலகம் முழுவதிலும் பொருளாதார சிக்கல்களின் ஆரம்பம் . ஒருபுறம் அமெரிக்கா பெரும் பொருளாதார ஆபத்தில் சிக்கி திணறிக் கொண்டு இருந்தது .

ஒரு புறம் அமெரிக்கா நிறுவனங்கள் தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்டு வந்தன .மக்கள் வேலையின்றி தவித்து வந்தனர் . இந்த பிரச்சனைகளின் ஆரம்பத்திற்கு முன் சில வருடம் அமெரிக்காவை பின்னோக்கி பார்ப்போம்

அமெரிக்காவை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சேமிப்பு என்பது அங்கு துளி அளவும் இல்லை . மக்கள் கிடைத்த வரை செலவு செய்து சுக போக வாழ்கை வாழ்வதில் அமெரிக்கர்களுக்கு ஈடு இணை உலகில் யாரும் இல்லை. இவ்வாறு இருக்க அமெரிக்காவில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பல விசயங்களில் அரசு சலுகைகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டே வந்தது . சில முதலீட்டு விசயங்களில் பல சலுகைகளை அரசு கொண்டுவந்தது .

அதன் படி முதலில் இன்சூரன்ஸ் துறையில் அதிக அளவில் முதலீடுகள் இடம் பெற தொடங்கின . அதன் பின்னர் அந்த நிறுவனங்கள் மக்களுக்காக வழங்கப்படும் கடன்களை அதிகரித்தன .அதுவும் வீடுகளின் மேல் அதிக கடன்களாக வழங்க ஆரம்பித்தன .

அந்த நிறுவனங்களும் உள்ள காசை வைத்துக்கொண்டு மக்களிடம் வட்டி அதிகம் பெறலாம் என்ற ஆசையில் மக்களிடம் அளவுக்கு அதிகமாக கடன் தர ஆரம்பித்தன . அந்த கடன்களையும் அரசும் மற்றும் தனியர்நிருவனங்களும் வீடுகளின் மேல் தர ஆரம்பித்தன .

மேலும் அப்பொழுது அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்தவர்களும் பணிக்காக அங்கு சென்று வாழவேண்டிய சூழல் பின்னர் அந்த நிலையில் வீடுகளின் மதிப்பு உயர உயர வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் வீட்டின் மேல் வழங்கப்பட்ட கடன் தொகையினை அதிகரித்து வழங்க ஆரம்பித்தன .

மக்கள் வாங்கும் கடனும் வளர அவர்களுக்கு வீடுகளின் மதிப்பும் உயர நிறுவங்களும் மற்றும் அதிகாரிகளையும் இவற்றை பற்றி கவனிக்க வில்லை . அவர்களுக்கு ஒரு சூழ் நிலையில் யாரும் கடனை கட்ட வில்லை என்றால் கூட பரவாயில்லை எனும் அளவிற்கு வீடுகளை விலைகள் தாறு மாறாக உயர்ந்தன .

மக்கள் வீடுகளின் மேல் வாங்கும் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே செல்ல நிறுவனங்களும் தொழில் செய்யாமலே வட்டி வரும் என மேலும் மேலும் அள்ளி கொடுத்தது . இந்த விஷயம் ஒரு பிரச்சனையாக மாறும் என எந்த அமெரிக்கா நிறுவனமோ அல்லது மக்களோ நினைக்கவில்லை .

அதன் படியே பிரச்சனை வர ஆரம்பித்தது . அது புஷ் அரசின் கடைசி வருட ஆட்சியின் பொழுது புஷ் அரசு அப்போதைய சூழ்நிலையில் இந்த பிரச்சனைகளையும் மக்களுக்கு காட்டியது . மக்களும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை .

நாம் உலகின் வல்லரசு நாடு நாம் பின்னாளில் ஒரு பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ள போகிறோம் என எச்சரித்தது . ஆனால் நிறுவனங்களோ அல்லது மக்களோ கேட்பதாக தெரிய வில்லை .

அமெரிக்காவில் சில மேல் மட்ட புள்ளிகள் மற்றும் பெரிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த வர்களுக்கு தெரிய ஆரம்பித்தது . அதன் பின்னர் சிக்கலில் உள்ள பெரிய நிறுவனக்கள் சில உடனடியாக செயலில் இறங்கி கடனை கட்ட சொல்ல கடன் தொகைகள் வரவில்லை .

அதன் பின்னர் தகவல் தொழில் நுட்ப துறைகளுக்கான பணிகள் குறைய ஆரம்பித்தன .அதன் பின்னர் அமெரிக்காவில் மட்டுமலல் உலகின் பல நாடுகளில் வீடுகளில் விலைகள் தாறு மாறாக குறைய ஆரம்பித்தன . பின்னர் விழித்துக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து அரசிடம் வழி கேட்டது .

எங்களால் நிறுவனங்களை தொடர்ந்து நடத்த இயலாது அல்லது அரசு அந்த கடன் பெற்ற நபர்களின் கணக்கில் இருந்து கடன் தொகைகளை திருப பெற வழிவகை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டது .

ஆனால் அன்றைய சூழலில் மக்கள் யாரும் தாமாக முன்வந்து கடனை செலுத்த வில்லை . அவர்கள் கூறியது வீட்டினை வைத்து வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றோம் . ஆனால் தற்போதைய சூழலில் கடன் செலுத்த இயலவில்லை அந்தந்த நிறுவனங்களே வீடுகளை விற்று அந்தந்த நிறுவனங்களே கடனை சரி செய்து கொள்ள வேண்டியது தான் என மக்களிடம் இருந்து ஒரு சேர குரல்கள் ஒலித்தது ...

பின்னர் அரசும் இந்த விசயத்தில் தனி கவனம் எடுத்து தனி நபர்களின் பிரச்சனைகளாக கருதாமல் நாட்டின் பிரச்சனையாக கருதி சில நடவடிக்கைகள் எடுத்தது . ஆனால் எதுவும் சரிவரவில்லை . பின்னர் அரசிடம் நிறுவனங்கள் முறையிட்டன ..


நலிவடைந்த நிறுவனங்கள் பல அரசிடம் பணம் கேட்டது . ஆனால் முதலில் அரசு அதை மறுத்து விட்டது .. ஆனால் புஷ் அரசு கஜானாவில் இருந்து பணத்தை எடுத்து தர மறுத்து பின்னர் பலரது வேண்டுகோளுக்கிணங்க திரும்ப எல்லா நஷ்டமடைந்த நிறுவனங்களுக்கு திரும்ப நிறுவனங்கள் நடக்க அரசு பணம் தந்தாள் தான் முடியும் என கூறியதோடு நிற்காமல் பல நிறுவனங்கள் மஞ்சள் பத்திரிக்கை தர ஆரம்பித்தன ..

ஆனால் புஷ் அரசு அதை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாம திரும்ப அதற்கு நடவடிக்கை எடுப்பது போல சில நடவடிக்கை எடுத்தது ஆனால் அமெரிக்காவை பொறுத்த வரை ஒரு பெரிய முடிவுகள் எடுப்பதாக முடிவெடுத்தால் அதற்க்கு அங்குள்ள் மூத்த குடிமக்கள் இதை செய்யலாம் என வாக்களிக்க வேண்டும் ..

ஆனால் மூன்று முறை நடந்த அந்த வாக்களிப்பில் ஆதரவாக வாக்குகள் கிடைக்க வில்லை . ஆனால் இது ஒரு புறம் நடக்க அப்பொழுது தான் புஷ் அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது , மக்களும் அதிபராக ஒபாமாவை தேர்ந்து எடுத்தால் நன்றாக இந்த பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வருவார் என உலக அளவிலும் எதிர் பார்க்கப்பட்டது .

எதிர் பார்த்து போலவே திரு ஒபாமா அவர்கள் அதிபராக பதவி ஏற்றதும் மக்கள் அவர் இந்த பிரச்சனை யை முடிப்பார் என எதிர் பார்த்தனர் . அவர் வந்ததும் அந்த பிரச்சனைகளையும் மிக சீக்கிரம் முடித்தார் ..

ஆனால் அதன் பின்னர் தான் அமெரிக்காவில் பிரச்சனைகள் தலை தூக்கின .....

தொடரும் ,,,

இதே தலைப்பில் அடுத்த பதிவாக ...........

நன்றி

அன்புடன்

வியாழன், அக்டோபர் 01, 2009

வணக்கம் நண்பர்களே !


முக்கிய அலுவல் காரணமாக இன்றைய பதிவினை எழுத இயலவில்லை ..

நாளை சந்திக்கலாம்

நன்றி