புதன், பிப்ரவரி 03, 2010

கமாடிட்டி எனும் வணிக சந்தை

திங்கள், 23 மார்ச், 2009
கமாடிட்டி எனும் வணிக சந்தை !!!
கமாடிட்டி வணிகமும் பங்கு வணிகத்தினைபோல ஒரு ஊகவணிகமே .
ஆனால்பங்குகளாவது காரணமில்லாமல் தடால் எனவிழாது .
ஆனால் கமாடிட்டி சந்தையில்பொருட்களின் வரத்து மற்றும்
அதிக தயாரிப்புதரம் குறைவு ஆகியவற்றால் உடனுக்குடன்அதிகப்படியான ஏற்றமும் இறக்கமும் சந்தையில்உருவாக்கப்பட்டு பின்னர் பழைய நிலையையேகூட கொண்டு வருவார்கள் ..


இதில் ஈடுபட கமாடிட்டி டிரேடிங் அக்கௌன்ட்ஓபன் செய்ய வேண்டும் . (பங்கு வணிகத்தில்ஈடுபட அக்கௌன்ட் ஓபன் செய்வது போன்றேஇதற்க்கு பான் கார்டு , வீட்டு முகவரி சான்று ,வங்கி கணக்கு சான்று , ஆகியவை தேவை.)பின்னர் வணிகத்தில் ஈடுபடலாம் .

இதில் நாம் தேசிய பங்கு சந்தையில் பியுச்சர்வணிகத்தில் எப்படி வணிகம் செய்கிறோமோஅதே போல தான் "மார்ஜின் " தொகையை மட்டும்செலுத்தி கமாடிட்டி சந்தையில் வணிகமாகும்எந்த ஒரு பொருளையும் நாம் வணிகம்செய்யலாம் . அதே போல எந்த மாதஒப்பந்தத்தின் அடிப்படையில் பொருள்தேவையோ அந்த மாதத்தில் வாங்கலாம்விற்கலாம்.

மற்ற படி எந்த கட்டு படும் இல்லை . சந்தையில்விலை ஏற்றம் மற்றும் இறக்கம் நம்முடையது.அதற்க்கு உண்டான லாப நஷ்டம் நம்முடையது ..

நாம் எந்த மாத ஒப்பந்தத்தின் அடிப்படையில்பொருள் வாங்குகிறோமோ அந்த மாதம் முடிவுதினம் வரை வைத்து கொள்ளலாம் ( ?) இந்தகேள்விக் குறிக்கு விட கீழே .......

கமாடிட்டி வணிகத்தில் ஒப்பந்த முடிவு தேதிக்குமுன்னர் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும்கட்டாய டெலிவரி எடுக்க வேண்டும் என்றநிபந்தனை விதிக்கிறது .. மேலும் அதன் மார்ஜின்தொகையை அதிகப்படுத்துவர்கள் .

( உதா ; தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைவியாபாரம் செய்யும் பொழுது யாருக்கு டெலிவரிதர வேண்டும் .. என்ற கணக்கிற்காக இந்த முறைகடை பிடிக்க படுகிறது .)

ஏன் எனில் கடைசி வர்த்தக தினத்தன்று உள்ளபொசிசனை வைத்து தான் சந்தையில் யார்யாருக்கு டெலிவரி யார் யார் விற்பனைசெய்யவார்கள் என்ற கணக்கு தெரியும் . ஆதலால்இந்த கட்டு பாடு ..

சரி நண்பர்களே !!!
சந்தை வியாபார முறை மற்றும் எப்படி உள்ளேவருவது போன்ற விபரங்களை பார்த்தோம் .. இனிஇதில் உள்ள வியாபார நுணுக்கங்களை மற்றும்சிக்கல்களை பார்ப்போம் ..

கமாடிட்டி சந்தையில் " 200 " க்கு அதிகமானபொருட்கள் வர்த்தகம் ஆகின்றன . நாம் அதிகம்உபயோகப்படுத்தும் பல பொருட்கள் வணிகத்தில்உள்ளன . நாம் கடைகளில் பார்க்கிறோமேஅதுபோல தான் பொருள் வரத்து அதிகரித்தால்எப்படி விலை சரியுமோ அது போல தான் இங்கும். ஆனால் சந்தையில் சரியும் விலையை விடஅதிகமா சரியும் அதேபோல பொருள் வரத்துகுறையும் போதும் கடைகளை விட அதிகமாகஏறும் . இந்த இரு நிலைகளையும் மாற்றி கூடசெய்வார்கள் .. பொருள் கடைகளில் குறையும்பொழுது சந்தையில் செயற்கையாக விலையைஅதிகப்படுத்துவர்கள் . அதே போல கடையில்பொருள் விலை அதிகரிக்கும் பொழுது சந்தையில்செயற்கையாக பொருள் விலை இறங்கும் ..இதுவும் நாம் பங்கு சந்தையில் கூறுவது போலஆபரேடர் கைங்கர்யம் தான் ....

நண்பர்களே கவனமிருக்கட்டும் !!!நாம் செய்வது பியுச்சர் வணிகம் எதிர் காலத்தைகணக்கில் கொண்டு வணிகம் செய்கிறோம் . (பின்னாளில் பொருள் சந்தை வரத்து குறைந்தால்அல்லது அதிகரித்தல் ) . ஆதலால் கவனம் அதிகம்தேவை .

மேலும் சந்தையில் வணிகமாகும் தங்கம்,வெள்ளி , காப்பர் , அலுமினியம் ,கச்சா என்னைபோன்ற முக்கியமான பொருட்களும் வணிகம்ஆகின்றன இந்த பொருட்கள் எல்லாம் உலகசந்தையில் வணிகமாகும் விலையின்அடிப்படையில் இங்கு வணிகம் ஆகின்றன . (உதா ; கச்சா என்னை , தங்கம் , வெள்ளி ,போன்றவை அமெரிக்காசந்தையில்வணிகமாகும் விலையின் அடிப்படையில் தான்இங்கு வணிகமாகும் . அதே போல காப்பர் மற்றும்மெட்டல் சம்பந்தமான பொருட்கள் விலைலண்டன் மற்றும் சீன சந்தை விலைகளைபொறுத்து வணிகமகும் .

ஆகவே நமது கவனம் உலக சந்தைகளைபார்த்தபடியே இருக்க வேண்டும் ..அதுவும்கமாடிட்டி சந்தைகளை ஒவ்வொரு சந்தையின்துவக்க நேரம் தெரிந்து கொண்டு தவறாதுகண்காணிக்க வேண்டும் . அப்படி கவனத்துடன்வணிகம் செய்தல் தான் கமாடிட்டி சந்தையில்லாபத்தினை ஈட்ட முடியும் ..

நமது சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்தினைதடுக்க சர்க்யுட் பில்ட்டர் உள்ளது போல கமாடிட்டிசந்தையிலும் சர்க்யுட் பில்ட்டர் உள்ளது ஆனால்நமது சந்தையில் வணிகம் நிறுத்தப்படுவதுபோல அங்கு வணிகம் நிறுத்த மாட்டார்கள்தொடர்ச்சியாக சர்க்யுட் பில்ட்டர்அதிகப்படுத்துவர்கள் . அதற்க்கு 15 நிமிடம்சம்பந்தப்பட்ட பொருள் வணிகம் ஆகாமல்நிறுத்தப்படும் பின்னர் தொடர்ந்து வணிகம் ஆகும்..

நன்றி நண்பர்களே தங்கள் மேலான கருத்துக்களைஅனுப்பவும் ..

அன்புடன்

ரமேஷ்

செவ்வாய், ஜனவரி 12, 2010

வணக்கம் நண்பர்களே ,

அனேக எனது வலைதள வாசகர்களின் வேண்டுகோளின் படி எனது பழைய வலை தளமான http://rams-niftyfifty.blogspot.com இல் இருந்து சில முக்கிய பதிவுகளை இந்த வலையினுள் தர முடிவு செய்துள்ளேன் ..

தங்கள் ஆதரவிற்கு நன்றி ..

முக்கிய பதிவுகள் சிறிது சிறிதாக மீண்டும் இந்த தளத்தில் தினசரி வலைப்பூக்கள் ஆரம்பிக்கும் வரை வெளியிடப்படும்

நன்றி

ரமேஷ்

good bye --மிட் கேப்ஸ்

வணக்கம் !!!

ஒரு விழிப்புணர்வு பதிவு !!!!!!!!

முதலீட்டளர்களுக்கு மட்டும் .......

வணக்கம் அன்பு முதலீட்டாளர்களே !தற்போதைய சந்தைகளில் தங்களுக்கு விற்கலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஏற்படும் வகையில் சந்தைகள் தினம் உயர்த்தப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை தான் .ஆனால் சந்தைகள் இது போல தான் உயர்ந்து கொண்டே செல்லும் என சென்செக்ஸ் இன் அதிக பட்ச விலைகளில் நடந்தது நாம் அனைவரும் மறந்திருக்க மாட்டோம் .சரி விசயத்துக்கு வருவோம..

நமது சந்தைகள் வரலார்ருகானாத அளவு உயர்ந்து வருகிறது . சந்தைகளில் இந்த திடீர் உயர்வுகளில் உயர்ந்த மிட் கேப் பங்குகள் சரிவில் என்னவாகும் .தற்சமயம் திடீர் என உயர்த்தப்பட்டு வரும் பங்குகள் அடிக்கடி வாங்குபவர் மட்டும் இருக்கும் நிலைகள் இதே போல சந்தைகள் சரிவடையும் பொழுது செல்லர் மட்டும் இருக்கும் படியான வர்த்தகம் தான் நடைபெறும் .அவ்வாறு நடந்தால் தங்கள் பங்குகளை விற்க சில மாதங்கள் கூட ஆகலாம். அது வரை செல்லர் பிரீஸ் ஆகி கொண்டு இருந்தால் பங்குகளின் விலைகள் பெரிய சரிவுகளை காண நேரிடும் .

ஆகவே நண்பர்களே அது போல பங்குகளை இனம் கண்டு உயர்வில் வெளியேறுங்கள்.

மேலும் உங்கள் முதலீடு சரிவில் மட்டும் இருக்கட்டும் .

நன்றி !!!

சனி, ஜனவரி 02, 2010

உலக நிகழ்வுகள் சிறு பார்வை மறு பதிவு

வணக்கம் நண்பர்களே !

அனைவருக்கும் வணக்கம் .

எனது அறிவிப்பின் படி மின் மடல் செய்த நண்பர்கள் அனைவரும் கேட்டசந்தைகள் மற்றும் நிப்டி போக்குகள் பற்றி ஒரு பெரிய பதிவினை காணலாம் . முடிந்தால் ஒரே பதிவாக தர முயற்சிக்கிறேன் .........

நமது சந்தைகள் பற்றிய பேச்சை எடுத்தாலே என்னமோ அமெரிக்கா பொருளாதார பிரச்சனை சம்பந்தமாக எழுதுவது போல மிகவும் யோசித்து எழுத வேண்டி உள்ளது . கடந்த பல பதிவுகளில் நான் கூறியுள்ள பதிவுகளை சற்று ஆங்காங்கே நினைவு படுத்திக் கொள்ளவும் .

முதலில் இதற்குள் செல்லும் முன் உலக சந்தைகள் பற்றி சிறு விளக்கம் உலக சந்தைகள் பலவும் இழந்த புள்ளிகளை மீட்டு தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டுள்ளன . இதை நல்லதொரு போக்காக வைத்துக் கொண்டாலும் பல சந்தைகளில் போக்குகள் அமெரிக்கா சந்தைகளை வைத்தே செல்வது நாம அறிந்த ஒன்று தன் இருந்த போதிலும் கடந்த 25 நாட்களாக அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுகளை தாண்டி செல்வதும் பின்னர் சில புள்ளிகள முடிவில் சரிவதுமாக உள்ளன ..

அதே போக்கினை ஆசியா , மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் கடை பிடித்து வந்துள்ள சூழலில் ........


..............அடுத்தது துபாய் பிரச்சனை -துபாய் பிரச்சனை பற்றிய சிறு விளக்கம் பிரச்சனை என்னவென்றால் துபாய் அரசு ஒன்றும் பெரிய அளவிலான கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்திருக்கவில்லை . மேலும் உள்ள கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்து சில வருடங்கள் தான் காலத்தினை ஓட்ட முடியும் என்ற சூழ்நிலை ....

இத்தனை பெரிய சிக்கல் வந்தால் துபாய் மண்ணை கவ்வ வேண்டி வரும் என்பதால் அந்நாட்டு மன்னர் பலே பாண்டிய மாதிரி ஒரு வேலையினை செய்துள்ளார் . துபைக்கு வரும் அந்நிய முதலீடுகளுக்கு குறிப்பாக கட்டுமான துறைக்கு அளவில்லாத சலுகைகள் மற்றும் அந்நிய கரன்சிகள் கள்ளத்தனமாக அதிக அளவில் உள்ளே வர அனுமதி வழங்கியது . அதுவும் வரியில்லாமல் ..

மேலும் துபாய் நாட்டினை ஒரு சுற்றுலா மையமாக கொண்டுவர பல முயற்சிகள் செய்தன . அவை அளவுகடந்த சலுகைகள் ஆகின உலகம் முழுவதிலும் உள்ள பண முதலைகளை துபைக்கு வரவழைத்தது மற்றும் கணக்கற்ற முதலீடுகள் என டாலரை அள்ளி கொட்டி கட்டுமான துறையில் சில வெளிநாட்டு நிறுவனக்கள் வந்து துபையில் கூடாரம் போட்டன .

பின்னர் அரசு தான் செய்து வந்த ஒரு பெரிய முட்டாள் தனமான செயல் உலகிலேயே சிறந்த கட்டிடம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியன பெரும் பொருட் செலவில் கட்டி முடிக்கப்படாத நிலையில் பல கட்டிடங்களுக்கு பணத்தேவைகள் அதிகமயின ..

இதன் பின்னர் தான் துபாய் அரசு அமெரிக்காவிற்கு தர வேண்டிய என்பது பில்லியன் டாலர் கடன் வெளியே தெரிய ஆரம்பித்தது . பின்னர் அதற்க்கு துபாய் அரசு இன்னும் ஆறு மத கால அவகாசம் கேட்பதாக வெளியே தகவல்கள் கசிய ஆரம்பித்தது அவ்வாறு வந்தால் அமெரிக்கா சற்று பொருளாதார நெருக்கடிகள் வரலாம் என்று கருதப்பட்டது..

.உடனடியாக அந்த செய்தி உலக சந்தைகளில் சரிவுகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளில் சரிவுகள் என எல்லாம் ஒரே நாளில் மண்ணை கவ்வ செய்தன . பின்னர் துபாய்க்கு கை கொடுக்க அவன் வரான் இவன் வரான் என ஆறுதல் கூறி எல்லாம் சற்று உயர ஆரம்பித்தன ... தற்போதைய சூழ்நிலை என்னவென்றால் அபுதாபி உதவி செய்ய முன் வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன .. ( இவங்க இப்படித்தான் எசமான் -- சொல்றத கேட்க ஆள் இருக்கு அப்புறம் என்ன கவலை -- அள்ளி விட வேண்டியது தான் )

அமெரிக்கா பற்றி எழுத எனக்கு இன்னும் அறிவு பத்தலைன்னு தான் நினைக்கிறேன் நண்பர்களே !!!ஏன் என்றால் அங்கு வேலை இல்லாதோர் அறிவிப்பிற்கும் ( தொடர்ந்து வேலையிலந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது )மற்றும் நாட்டின் பொருளாதாரமும் சிறுதுளி கூட சம்பந்த மில்லை என்பது போலவும் நாம் டிபன் சாப்பிடுவது போல அங்கே நோட்டு அதாங்க டாலர் அச்சடிக்கறாங்க போல் தகவல் ...
என்ன மேலே சொன்னது சரி தானாமற்றபடி உலகின் பல நாடுகள் இன்னும் நல்லதொரு பொருளாதார சூழ்நிலைக்கு வரவில்லை என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன என்பதும் ஒரு சிறிய தகவல் ...........

பதிவுகள் தொடரும் ....

வியாழன், டிசம்பர் 31, 2009

உள்ளூர் சந்தை ( நிப்டி )போக்குகள் 311209

வணக்கம் நண்பர்களே ,

என்ன தான் நடக்கிறது நமது சந்தைகளில் குறைந்த அளவிலான புள்ளிகள் வீழ்வதும் பின்னர் அதை விட இரு மடங்குகள் உயர்வது என்ற போக்கிலேயே நமது சந்தைகளில் வர்த்தகம் நடந்து வருகிறது . அதுவும் குறிப்பிட்டு சொன்னால் மக்களின் கவனம் முழுவதும் சந்தைகளின் போக்கின் படி இருந்தாலும் அதனை மாற்றம் செய்ய சில புல்லுருவிகளின் செயல் பாடுகள் சந்தைகளில் நடந்த வண்ணம் உள்ளன . அவர்கள் சொல்லுக்கு தான் சந்தைகள் கட்டுபடுகின்றன ..

அப்படி என்ன நடக்கிறது :
சந்தைகள் பற்றியும் வர்த்தகம் செய்யும் மற்றும் செய்யாத அனைவருக்கும் தெரியும் சந்தைகள் முன்னொரு காலத்தில் இருபதாயிரம் புள்ளிகளை தாண்டி 21.357 புள்ளிகள் வரை சென்றன . ஆனால் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் அதிகரித்தது என்னவோ 2004 - 2005 ஆண்டு வாக்கில் தான் .

ஏன் இதை சொல்கிறேன் என்றால் நமது சந்தைகளில் ஒரு காலத்தில் ஒன்றும் இல்லாத பங்குகளின் விலைகள் கூட யானை விலை குதிரை விலைகளில் வர்த்தகம் ஆனது நினைவிருக்கலாம் . பின்னர் அந்த பங்குகள் எல்லாம் அதிக விலை பங்குகளாக மாறி நம் முதலீட்டாளர்களின் கையில் ஒரு சொத்தாக இன்று வரை உள்ளன . நான் கூறும் இந்த் நிகழ்வு போன அதே முன் குறிப்பிட்ட உயர்வுகளில் நம் முதலீட்டளர்கள் செய்த தவறுகள் தான் (பாவம் அவர்களுக்கு மட்டும் என்ன தெரியும் ) இருக்கும் வீட்டிலே நெருப்பு கொளுத்துவார்கள் என்று ?

நமது சந்தைகள் தற்போதைய உயர்வுகள் சற்று கூட நிம்மதி பெருமூச்சு விடமுடியாத சூலில் தான் நாம் உள்ளோம் . ஏன் இந்த சூழ்நிலை நமக்கு மட்டுமா ஆம் நண்பர்களே நமது சந்தைகளை ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாயில் விற்ற சில பங்குகள் இன்று 175 - 300 - என்ற விலைகளில் வர்த்தகம் ஆகி வருகின்றன . காரணம் அந்நியமுதலீட்டாளர்கள் நமது மக்களை எந்த விலையிலும் வாங்கும் தன்மையினை நமது மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளனர் ..

கடந்த சில மாதங்களாக நமது சந்தைகளுக்கு மற்றும் நமது முதலீட்டாளர்களுக்கு கூட சொல் புத்தி இல்லை போல அல்லது நமது சந்தைகளில் முதலீடு செய்யும் நமது முதலீட்டாளர்கள் சரியான முறையில் அல்லவோ என்று கூட சில சமயங்களில் சற்று குழப்பம் வருகிறது நண்பர்களே . நமது சந்தைகளை ஒரு போக பொருளாக வர்த்தகம் செய்பவர்கள் தான் இந்த அந்நிய முதலீட்டளர்கள் ( நான் கூறுவது சந்தைகளில் நகர்வுகள் மற்றும் அவர்கள் நகர்த்தும் நகர்வினை வைத்து )

சரி அவ்வாறு உயர்த்தப்படும் சந்தைகள் தற்பொழுது சரியான உயர்வுகளில் வர்த்தகம் நடந்து வருகிறது . ஆனால் பங்குகளின் விலைகள் சற்றும் உயர்வினை எட்டாமல் வர்த்தகம் ஆகி வருகிறது . என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள் நண்பர்களே அவ்வாறு சரியான விலைகளில் வர்த்தகம் ஆகாமல் சந்தைகள் உயர்த்தப்படுவது ஒரு பெரிய சரிவினை உண்டாக்கவே என்றே கருதுகிறேன் .

மேலும் நான் கடந்த மாத மற்றும் கடந்த மூன்று மாத வர்த்தக நுட்ப வரை படங்களின் படி பார்த்தால் சந்தைகளில் போக்கில் இன்னும் சில நாடக வேலைகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்றே கருதுகிறேன் . . இன்று வரை நமது சந்தைகள் வர்த்தகம் ஆகி வருவது ஆண்டு உயர்வு வர்த்தக புள்ளிகளின் அருகாமையில் என்பதும் குறிப்பிடதக்கது ..

அவ்வாறு வர்த்தகம் ஆகி வருவது மற்றும் அந்த நிலைகளில் சந்தைகளை நிலை நிறுத்தம் செய்வது கூட நமது ஆபரேட்டர்கள் தாம் போல அந்த புண்ணியவான்களின் கையில் சிக்குண்டுள்ள நமது சந்தைகள் சற்றும் நிலை குலையாமல் இருக்க சில யுக்திகளை கையாண்டு கொண்டுள்ளனர் .. நமது ஆப்றேட்டகள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் இதற்க்கு பலியாடுகள் நம் முதலீட்டளர்கள் ...........

சரி முக்கியமா ஒரு விஷத்தை பற்றி பேசுவோமா ???

அதென்னையா நம்ம கவர்மென்ட் இன்பிலேசன் அதிகமானாலும் தப்பு இல்லைன்னு சொல்லுது குறைந்தாலும் தப்பிலைன்னு சொல்லுது .. மேலும் நம்ப பெரியண்ணன் வந்தால் போதும் எதுக்குன்னே தெரியல மார்க்கெட் மேலேயே போகுது .. காரணம் ஒன்னே ஒன்னு தான் சொல்ல தெரியும் போல் சார்ட் கவரிங் இன் மார்க்கெட் ..

இல்ல தெரியாம தான் கேட்கிறேன் நீ என்ன மார்க்கெட் நடத்துறைய இல்ல அந்நிய முதலீட்டளர்கள் கூட கூத்து நடதுறைய எவ்வளவு பங்கு வாங்குற சந்தைகளை நகவை அதிகமாக்க யாரு வாங்குறா . சந்தைகளில் இன்னும் சில கம்பெனிகளை தினமும் இன்சைதர் வர்த்தகம் செய்ய விடு சீக்கிரம் சந்தை முடிந்து விடும் அம்புட்டு தான் நிம்மதியா வீட்டிலே இருக்கலாம் ..

அன்பான முதலீட்டலர்களுக்கு :

இன்றைய தியதியில் வர்த்தகம் ஆகி கொண்டுள்ள நிபிட்டி தற்போதைய நிலைகளில் வாங்குவது நல்லதல்ல சற்று தங்களது முதலீடுகளை மற்றும் முதலீட்டு தொகையினை பத்திரமாக வையுங்கள் சந்தைகள் கீழே செல்லும் பொழுது முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் ..

அன்பான வாசகர்களுக்கு : -

நுட்ப குறிகளின் படி நானும் பதிவு எழுத சில முக்கிய குறிப்புகளுடன் தான் அமர்ந்தேன் ஆனால் அதன் படி செல்லாத சந்தைகளின் போக்கினை என் எழுத்து மூலமாக திருப்பிவிடவ முடியும் அல்லது நிபிட்டி இந்த நிலைகளில் வாங்க வேண்டும் என துடிக்கும் மக்களின் போக்கினை மற்ற முடியுமா என்ன . .....

யோசிக்கிறேன் ... பின்பு சந்திக்கலாம்

அன்புடன்

ரமேஷ்

வருக வருக 2010

எனது வலைதள வாசக , வாசகியர் மற்றும் அருமை நண்பர்கள் மற்றும் பதிவுலக நண்பர்கள் பதிவர்களுக்கு நல்லதொரு அங்கிகாரம் வழங்கும் தமிழிஸ் , நம் குரல் , நியூஸ் பானை , திரட்டி , தமிழ் மனம் ஆகிய ஆனைவருக்கும் எனது அன்பான ஆங்கில புது வருட நாள் வாழ்த்துக்கள் ..






இந்த புத்தாண்டில் அனைவரும் எல்லா வளங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் ....

நன்றி

அன்புடன்
ரமேஷ்

உலக நிகழ்வுகள் சிறு பார்வை

வணக்கம் நண்பர்களே !

அனைவருக்கும் வணக்கம் .

எனது அறிவிப்பின் படி மின் மடல் செய்த நண்பர்கள் அனைவரும் கேட்டசந்தைகள் மற்றும் நிப்டி போக்குகள் பற்றி ஒரு பெரிய பதிவினை காணலாம் . முடிந்தால் ஒரே பதிவாக தர முயற்சிக்கிறேன் .........

நமது சந்தைகள் பற்றிய பேச்சை எடுத்தாலே என்னமோ அமெரிக்கா பொருளாதார பிரச்சனை சம்பந்தமாக எழுதுவது போல மிகவும் யோசித்து எழுத வேண்டி உள்ளது . கடந்த பல பதிவுகளில் நான் கூறியுள்ள பதிவுகளை சற்று ஆங்காங்கே நினைவு படுத்திக் கொள்ளவும் .

முதலில் இதற்குள் செல்லும் முன் உலக சந்தைகள் பற்றி சிறு விளக்கம் உலக சந்தைகள் பலவும் இழந்த புள்ளிகளை மீட்டு தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டுள்ளன . இதை நல்லதொரு கருத்தாக வைத்துக் கொண்டாலும் பல சந்தைகளில் போக்குகள் அமெரிக்கா சந்தைகளை வைத்தே செல்வது நாம அறிந்த ஒன்று தன் இருந்த போதிலும் கடந்த 25 நாட்களாக அமெரிக்கா சந்தைகள் சற்று உயர்வுகளை தாண்டி செல்வதும் பின்னர் சில புள்ளிகள முடிவில் சரிவதுமாக உள்ளன ..

அதே போக்கினை ஆசியா , மற்றும் ஐரோப்பிய சந்தைகளும் கடை பிடித்து வந்துள்ள சூழலில் ..............................................

அடுத்தது துபாய் பிரச்சனை -

துபாய் பிரச்சனை பற்றிய சிறு விளக்கம் பிரச்சனை என்னவென்றால் துபாய் அரசு ஒன்றும் பெரிய அளவிலான கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்திருக்கவில்லை . மேலும் உள்ள கச்சா எண்ணெய் கிணறுகளை வைத்து சில வருடங்கள் தான் காலத்தினை ஓட்ட முடியும் என்ற சூழ்நிலை ....

இத்தனை பெரிய சிக்கல் வந்தால் துபாய் மண்ணை கவ்வ வேண்டி வரும் என்பதால் அந்நாட்டு மன்னர் பலே பாண்டிய மாதிரி ஒரு வேலையினை செய்துள்ளார் . துபைக்கு வரும் அந்நிய முதலீடுகளுக்கு குறிப்பாக கட்டுமான துறைக்கு அளவில்லாத சலுகைகள் மற்றும் அந்நிய கரன்சிகள் கள்ளத்தனமாக அதிக அளவில் உள்ளே வர அனுமதி வழங்கியது . அதுவும் வரியில்லாமல் ..

மேலும் துபாய் நாட்டினை ஒரு சுற்றுலா மையமாக கொண்டுவர பல முயற்சிகள் செய்தன . அவை அளவுகடந்த சலுகைகள் ஆகின உலகம் முழுவதிலும் உள்ள பண முதலைகளை துபைக்கு வரவழைத்தது மற்றும் கணக்கற்ற முதலீடுகள் என டாலரை அள்ளி கொட்டி கட்டுமான துறையில் சில வெளிநாட்டு நிறுவனக்கள் வந்து துபையில் கூடாரம் போட்டன .

பின்னர் அரசு தான் செய்து வந்த ஒரு பெரிய முட்டாள் தனமான செயல் உலகிலேயே சிறந்த கட்டிடம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியன பெரும் பொருட் செலவில் கட்டி முடிக்கப்படாத நிலையில் பல கட்டிடங்களுக்கு பணத்தேவைகள் அதிகமயின ..

இதன் பின்னர் தான் துபாய் அரசு அமெரிக்காவிற்கு தர வேண்டிய என்பது பில்லியன் டாலர் கடன் வெளியே தெரிய ஆரம்பித்தது . பின்னர் அதற்க்கு துபாய் அரசு இன்னும் ஆறு மத கால அவகாசம் கேட்பதாக வெளியே தகவல்கள் கசிய ஆரம்பித்தது அவ்வாறு வந்தால் அமெரிக்கா சற்று பொருளாதார நெருக்கடிகள் வரலாம் என்று கருதப்பட்டது...

உடனடியாக அந்த செய்தி உலக சந்தைகளில் சரிவுகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளில் சரிவுகள் என எல்லாம் ஒரே நாளில் மண்ணை கவ்வ செய்தன . பின்னர் துபாய்க்கு கை கொடுக்க அவன் வரான் இவன் வரான் என ஆறுதல் கூறி எல்லாம் சற்று உயர ஆரம்பித்தன ... தற்போதைய சூழ்நிலை என்னவென்றால் அபுதாபி உதவி செய்ய முன் வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன .. ( இவங்க இப்படித்தான் எசமான் -- சொல்றத கேட்க ஆள் இருக்கு அப்புறம் என்ன கவலை -- அள்ளி விட வேண்டியது தான் )

அமெரிக்கா பற்றி எழுத எனக்கு இன்னும் அறிவு பத்தலைன்னு தான் நினைக்கிறேன் நண்பர்களே !!!

ஏன் என்றால் அங்கு வேலை இல்லாதோர் அறிவிப்பிற்கும் ( தொடர்ந்து வேலையிலந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது )மற்றும் நாட்டின் பொருளாதாரமும் சிறுதுளி கூட சம்பந்த மில்லை என்பது போலவும் நாம் டிபன் சாப்பிடுவது போல அங்கே நோட்டு அதாங்க டாலர் அச்சடிக்கறாங்க போல் தகவல் ... என்ன மேலே சொன்னது சரி தானா

மற்றபடி உலகின் பல நாடுகள் இன்னும் நல்லதொரு பொருளாதார சூழ்நிலைக்கு வரவில்லை என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன என்பதும் ஒரு சிறிய தகவல் ...........

பதிவுகள் தொடரும் ....

நன்றி