புதன், நவம்பர் 04, 2009

குழப்பத்தில் நான் ----

காலை வணக்கம் ....

என்ன தான் சந்தைகள் ஆட்டம் இருந்தாலும் நமது சந்தைகளுக்கு இது சற்று அதிகம் என்று கருதலாமா அல்லது நமக்கு வல்லமை போதவில்லை என என்னலாமா , அல்லது அன்னியமுதலீட்டளர்கள் சதியா ( கிட்டத்தட்ட அதுவாக தான் ) என எனக்கு புரியவில்லை நண்பர்களே ...

விளக்கமாக : -----

இருவாரங்களுக்கு முந்தய பதிவுகளில் நான் குறிப்பிட்டதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் , உலக சந்தைகள் உயர்வு நமது சந்தைகள் சரிவு . உலக சந்தைகள் சரிவு நமது சந்தைகள் உயர்வு . இது போதாதென்று இடையிடையே சந்தைகளுக்கு விடுமுறை ...

இது தான் இன்றைய சந்தையின் நிலைமை காரணம் என்ன .

நமது
சந்தைகளில் உதாரணமாக நேற்றைய தினம் நடந்ததும் மற்றும் எதிர் பார்த்ததும் என்ன ?

நடந்தது உலக சந்தைகள் வெள்ளியன்று மற்றும் திங்கள் சரிவுகளை மீட்ட்டுக்கும் விதமாக துவக்கம் நமது சந்தைகள் அதே போல உயர்வுகளில் துவக்கம் . நாம் எதிர் பார்த்தது சந்தைகள் உயர்வில் செல்லும் என்று ஆனால் நடந்தது நமது சந்தைகள் சற்று அதிகப்படியான சரிவுகளை சந்தித்தன .

கடந்த வாரம் முதலே நானும் எவ்வளவோ நுட்ப அளவிகளை வைத்து தான் . கணக்கிட்டு நிப்டி நிலைகளை வரையருத்தேன் . ஆனால் அந்த நிலைகளில் சந்தைகள் தடுமாட்டம் கூட இல்லாமல் சாதக பாதக செய்திகள் எதுவுமின்றி செல்வது சற்று குழப்பத்தினை ஏற்ப்படுத்தி உள்ளது ,

நான் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல சந்தைகள்சற்று இன்னும் வீரியமாக இறங்கினால் சந்தைகளில் பழைய இடைவெளிகள் கூட புல் செய்யப்படும் என கருதுகிறேன் ..

அதற்காக தான் தினசரி வணிகர்கள் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் உள்ளே நுழைய வேண்டாம் என கூறி வந்தேன் . மேலும் சில விசயங்களை வைத்து பார்த்தோ மானால் நமது சந்தைகளின் பழைய மார்ச் லோ வின் எல்லை கோட்டினை சற்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள்

நன்றி வணக்கத்துடன் !

ரமேஷ்