ஞாயிறு, அக்டோபர் 11, 2009

விடுமுறை பதிவு - தீபாவளி

வணக்கமுங்கோ !!!

என்ன நண்பர்களே தீபாவளி நெருங்கி வருகிறது . பலகாரங்கள் இனிப்பு மற்றும் பட்டாசு புத்தாடைகள் வாங்கி விட்டீர்களா ,...

ஏதோ நரகசுரன் அழிக்கப்பட்டது என்னவோ ஒரு முறை தான் ... ஆனால் நம் மக்கள் எல்லோரும் பல ஆண்டுகளாக கொண்டாடி மகிழுந்து வருகின்றனர் . இருந்தாலும் இவ்வாறு கொண்டாடுவது கூட ஒரு முறையில் ஒரு நல்ல விஷயம் தான் எப்படி என்கிறீர்களா ?

ஒரு குடும்ப தலைவன் மனைவி மக்கள் உற்றார் உறவினர் உடன் சந்தோசமாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒரு அருமையான பண்டிகை தான்தீபாவளி ..

இவ்வாறு முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படும் பொழுது எந்தொரு மனிதனும் சில விசயங்ககளை திருத்தி கொள்ள வாய்ப்புகள் கிடைக்கிறது .உதாரணமாக சொந்த பந்தங்கள் அனைவரையும் சந்திக்க நேரும் பொழுது அனைவரது மனமும் லேசாகும் . சண்டை சச்சரவுகள் குறையும் ..பரஸ்பரம் அனைவர் உள்ளத்திலும் ஒரு அமைதி குடி கொள்ளும் ...

உண்மையாக சொன்னால் எனக்கு தீபாவளி கொண்டாட பிடிக்காது . காரணம் மக்கள் கடிணமாகபல நாட்கள் உழைத்து சம்பாதித்த பணத்தினை சில நாட்களில் செலவு செய்வது .நம் மக்களிடையே இன்னும் சில தவறான பழக்கங்கள் உள்ளன . அவையாவன ஒரு சில செயல்கள் மட்டுமே வெளியில் கூற இயலும்

ஒரு பண்டிகை வந்தால் அடுத்த வீட்டுக்காரன் துணி எடுத்தால் அதன் பின்னர் அவனை விட 10 ரூபாய் சேர்த்து எடுத்தல் தான் திருப்தி அடைவான் ..

அடுத்த வீட்டு ராமசாமி குப்புசாமி எல்லாம் பட்டாசு 500 ரூபாய்க்கு வாங்கினால் இவன் 700 வாங்கினால் தான் திருப்தி

ஆனால் மேற்சொன்ன இரு விடயங்களிலும் நம் ஆட்கள் அவனது தன்மானம் மட்டுமே பார்ப்பானே தவிர மனைவி மக்கள் சந்தோசத்தினை பார்க்க மாட்டன் . (ஆனால் நான் கூறுவது பல ஆண்டுகளுக்கு முந்தய மக்கள் பழக்கத்தினை முந்தய பொருளாதார சூழலுக்கு பின்னர் இப்பொழுது மாறிவிட்டதாக கருதுகிறேன் )

இப்பொழுது மக்களிடையே எதை எவ்வாறு செய்வது என்ற அனுபவமும் மற்றும் சமுதாயத்திலே நன்றாக வர வேண்டும் என்ற எண்ணமும் நன்றாக வந்துள்ளது . நல்ல முறையில் நல்ல செயல்களை செய்து நற் பெயர் பெற்று இருந்தால் நமது சந்ததிகள் நல்ல முறையில் வாழ முடியும் ..

முடிந்த வரை அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள் . அனைவரையும் நேசியுங்கள் . வாழ்கை வாழ்வதற்கே என்று வீம்புடன் இருக்காதீர்கள் அது உங்களையும் உங்கள் சந்ததிகளையும் வாழ்கையில் சில இழப்புகளை சந்திக்க செய்யும்

முடிந்தால் இயற்கையை நேசியுங்கள் அது உங்களுக்கு பல பாடங்களை சொல்லி தரும் அதை வைத்து வாழ்வில் இனிமை பெறலாம்

நன்றி

இது போல் இன்னும் ஒரு -

நன்றி

ரமேஷ்