திங்கள், அக்டோபர் 12, 2009

வணக்கம் நண்பர்களே !!

இன்றைய நமது சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கலாம் என நினைக்கிறேன் காரணம் இன்றைக்கு ஜப்பானிய சந்தைகள் விடுமுறை ஆதலால் ஆசியா சந்தைகள் சில குழப்பமான சூழலில் வர்த்தகம் ஆகி வருகிறது .

இன்றைய ஐரோப்பிய சந்தைகளின் துவக்கத்திற்கு பிறகு தான் நமது சந்தைகள் சற்று சூடு பிடிக்க ஆரம்பமாகும் . அமெரிக்கா பியுச்சர் சந்தைகளும் சற்று சில புள்ளிகள் மட்டுமே அதிகரித்து வர்த்தகம் ஆகி வருகிறது . இது நமது சந்தைகளுக்கு பெரிய தாக்கத்தினை தராது .

அடடா முக்கியமான விஷயம் குறிச்சுக்கோங்க !!!!!!!

அணில் அம்பானி திடீரென முகேஷ் அம்பாநிகிட்ட சமரசமாக போக விருப்பமின்னு ஒரு செய்தி வந்து இருக்கு . அதனால் சந்தைகள் சற்று உயர்வு அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன .

மேலும் நாளை நடக்கவுள்ள மகாராஷ்டிரா தேர்தல் சந்தைகளில் ஒரு கலக்கதினை ஏற்ப்படுத்தலாம் என கருதுகிறேன் .

எதற்கும் சந்தைகளில் ஷாட் நிலைகளில் உள்ளவர்கள் அனைத்து நிலைகளில் இருந்து வெளியேறுதல் நல்லது அல்லது ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் வைத்து வணிகம் செய்தல் நலம் என நினைக்கிறேன் .

தினசரி வணிகம் செய்பவர்கள் ரிலையன்ஸ் நிறுவன பங்குகளில் ஷார்ட் செல்ல வேண்டாம் . நிபிட்டி முக்கிய ஆதரவு நிலைகளான 4920 நிலைகள் உடைபடாமல் சந்தைகள் 4950 இக்கு மேல் துவங்கினால் சந்தைகள் 5000 புள்ளிகளை தொடமுயற்சிக்கலாம் . அல்லது 4920 புள்ளிகளை சந்தைகள் இழந்தால் 4860 வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன .

எதற்கும் மேலே சொன்ன இரு விடயங்களை மனதில் கொள்ளவும் . அல்லது சந்தையினை விட்டு விலகி இருங்கள் இப்போதைக்கு இது தான் நல்லது ..

மேலும் நமது சந்தைகள் நாளைய தினம் விடுமுறை மேற்சொணன் இருவிடயங்களை வைத்துப்பார்த்தால் சந்தைகளுக்கு சாதகமாக அந்த செய்திகள் அமைந்தால் சந்தைகளில் ஒரு பெரிய உயர்வுகள் திடீரென நடக்கக் வாய்ப்புகள் அதிகம் உள்ளன

நன்றி !!

ரமேஸ்