ஞாயிறு, அக்டோபர் 04, 2009

உலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும்

வணக்கம் நண்பர்களே !

உலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும் தொடர்கிறது


முந்தய பதிவினை படித்து விட்டு தொடருங்கள் அன்பு நண்பர்களே !

அமெரிக்கா அதிபர் தேர்தல் தியதி அறிவிக்கப்பட்டதும் மக்களிடமும் மற்ற உலக நாடுகளிடமும் வந்த ஒரே எதிர் பார்ப்பு புதிய அதிபராக திரு ஒபாமா வந்தால் சிறப்பாக இருக்கும் என நம்பினார்கள் . அவர்கள் நினைப்பின் படி புதிய அதிபராக ஒபாமா தேர்ந்து எடுக்கப்பட்டார் . அதிபரான பின்னர் ஒபமாவும் சில நல்ல அறிவிப்புகளை வெளியிட்டார் .

அதன் படி உலக தர வரிசையில் அமெரிக்காவை மேலும் வளமைபடுத்துவது மற்றும் அமெரிக்கா வின் பொருளாதார சிக்கலை சரி செய்வது மற்றும் அங்குள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு பதிலாக அனைத்து பிரிவுகளிலும் அமெரிக்கர்களுக்கு முதலிடம் போன்ற தேர்தல் அறிவிப்புகளால் மக்கள் செல்வாக்கு பெருகி அதிபராக திரு ஒபாமா அதிகார பூர்வமாக தேர்ந்து எடுக்கப்பட்டார் .

அதற்க்கு முன்னரே புஷ் அரசின் செயல் பாடுகள் அவரது ஆதரவாளர் களாலேயே சற்று முடக்கப்பட்டன . அதுவும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்கும் விதத்தில் அறிவிக்கப்பட்ட ஊக்க அறிவிப்புகளான பெயில் அவுட் விஷயம் சற்றும் முனைப்பு காட்டாமல் முடக்கப்பட்டது . முடக்கப்பட்டது என்பதை விட புஷ் அரசு எதிர் கால சிக்கலில் மாட்டி கொள்ள விரும்பவில்லை .

அவ்வாறு அதிபராக திரு ஒபாமா வந்ததும் அரச சபை மற்றும் பிற செயல் பாடுகளில் அவரது அறிவிப்பிர்கேற்ப பல விசயங்கள் நடைமுறை படுத்தப்பட்டன . பின்னர் அங்கு அப்பொழுது இருந்த முக்கிய பிரச்சனையான பெயில் அவுட் பற்றிய விஷயம் எடுக்கப்பட்டதும் . மக்களிடம் அதரவு கேட்கப்பட்டது .

மக்களும் திரு ஒபாமா அவர்களின் மீதுள்ள நம்பிக்கையால் கஜானாவில் இருந்த தொகையினை ஊதாரிதனமாக செலவு செய்த நிறுவனக்களுக்கு வாரி வழங்க நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது . அதில் ஆதரவு பெருகியது மக்களின் அப்போதைய ஒரே நம்பிக்கை பொருளாதார சிக்கல்களை ஒபாமா விரைவாக சரி செய்வார் என நம்பினார்கள் .

அவரும் அதன் பின்னர் மஞ்சள் பத்திரிக்கை தர இருக்கும் நிறுவனங்களை வர சொல்லி பேசினார் . அவர்கள் தொடர்ந்து நிறுவனங்களை நடத்த வேண்டும் என்ற உத்தரவின் பெயரில் கிட்டத்தட்ட ஆறாயிரம் நிறுவனங்கள் கணக்கில் வந்தன . அதில் சில வங்கிகளும் அடக்கம் . இந்த மாதிரியான சூழ்நிலையில் சில நிறுவனங்கள் அந்த நல்ல வாய்ப்பினை தவறாக பயன்படுத்த திட்டமிட்டன .

அது என்னவென்றால் அங்குள்ள சட்ட மசோதாவின் படி மஞ்சள் பத்திரிக்கை தர விரும்புபவர்கள் நேரடியாக அரசிடம் மனு செய்யலாம் . ஒரு முறை மனு நிராகரிக்க பட்டால் அதன் பின்னர் சட்டப்படி அங்குள்ள நீதி மன்றங்களில் மனு செய்யலாம் . அவர்கள் கட்டாயம் அந்த மனுவினை ஏற்றுக்கொள்ள வேண்டும்

அமெரிக்கா
அதிபரின் பெயில் அவுட் தொகை 720 பில்லியன் என அறிவிக்கப்பட்டதும் அந்த தொகையினை பெற ஒட்டு மொத்த அமெரிக்கா மக்களும் மற்ற நிறுவனங்களும் மற்றும் வங்கிகளும் நாள் தோறும் வந்த வண்ணம் இருந்தன . முதலில் வந்த நிறுவனங்கள் சில சொன்னதை செய்ய முயற்சித்தன .

ஆனால் பின்னர் வந்த பல நிறுவனங்கள் பணத்தை பெற்றுக் கொண்டு நிறுவனத்தினை மூட முடிவெடுத்தன .

அதே போல மூடவும் செய்தன சில நிறுவனங்கள் இதை அறிந்த அரசு அவ்வாறு ஊக்க தொகை பெற்றால் நிறுவனத்தினை மூட மாட்டோம் என்ற உறுதி மொழியினை பெற்றுக் கொண்டு பணத்தினை வழங்கியது . அதையும் பெற்றுக் கொண்டு மக்கள் அரசிடம் செல்லாமல் நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்து மஞ்சள் பத்திரிக்கை கொடுத்தனர் . முன்பே கூறியது போல தவிர்க்க முடியாத அரசும் அவற்றை பெற்றுக் கொண்டது .

பல் வேறு நிறுவனங்கள் மூடப்பட்டதும் பலர் வேலை யின்றி தவித்தனர் , இதில் சில அப்பாவி மக்களும் நிறுவனங்களும் மாட்டி கொண்டன சரியாக செயல் பட விரும்பும் நிறுவனங்களுக்கு கூட ஊக்க தொகை கிடைக்க வில்லை ..

அதன் பின்னர் அதிருப்தியை அடைந்த ஒபாமா அரசு தான் செய்த பெயில் அவுட் தவறினை அறிந்து இனி ஊக்க தொகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது .. மேலும் நான் எதிர் பார்த்து போல பொருளாதார சவால்களை உடனடியாக தீர்க்க முடியாது ஆக அனைவரும் சேர்ந்து படு பட்டு அமெரிக்கா பொருளாதார சிக்கல்களை சரி செய்து உலக நாடுகளுக்கு நல்ல வழி காட்டுவோம் என இறுதி யாக ஒபமாவின் அறிவிப்பு வந்த்து .

அதன் பின்னர் தான் அமெரிக்காவில் பல நிறுவனங்கள் மூடல் வேலை இழப்பு அதிகரித்து கொண்டே வந்தது , அதிலும் குறிப்பாக வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டு வந்தன . அதனை அறிந்த ஒபாமா அரசு வேலை வாய்ப்புக்களை புதிதாக உருவாக்கியது . வேலை இழந்தோர் அறிவிப்பை குறைக்க முயற்சித்தது அது சற்று சில மாதங்களுக்கு வேலை இல்லாதோர் அதிகரிப்பது சற்று குறைந்து வந்தது .

தற்போதைய நிலவர படி அங்கு கிட்டத்தட்ட 100 வங்கிகள் மூடல் மேலும் பல ஆயிரம் பேர்கள் வேலை இழந்தவர்களாக மற்றும் பல நிறுவனங்கள் மேலும் நஷ்டமடைந்து வருகின்றது . ஆனால் அரசு இவை அனைத்தையும் பெரிய விசயமாக கருதாமல் ஆறப்போட்டு வருகிறது . இந்த சூழ்நிலையில் நல்ல விசயங்களை மட்டும் வைத்து சந்தைகளும் உயர்த்தப்படுகின்றன . இது என்றைக்கு இருந்தாலும் ஒரு பெரிய ஆபத்தினை கொண்டு வரும் ......

அது உலக சந்தைகளையும் சற்று உயர்த்து கிறது ஆனால் நிபுணர்களின் கணிப்பின் படி இன்னும் அங்கு பொருளாதார சிக்கல்கள் சரியாக வில்லை ..

ஒரு வேலை வரும் காலங்களில் இன்னும் சில வங்கிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது .அவ்வாறு மூடப்பட்டால் அமெரிக்க கதி கலங்கி விடும் என்பது மட்டும் உண்மை ..........

தற்போதைய சூழ் நிலை நிலவரங்களின் படி இன்னும் அடுத்த ஆறு மாதங்களில்
150 வங்கிகள் வரை திவாலாகும் என தெரிகிறது ,, தற்போதைய நிலவர படி 400 இக்கும் அதிகமான வங்கிகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் தகவல்கள் வருக்கின்றன .

அதனை ஒட்டி இதே பொருளாதார சிக்கல் கொண்ட நாடுகள் வரிசையில் ஐரோப்பிய மற்றும் ஆசியா நாடுகள் உள்ளன மற்றபடி அந்தந்த நாடுகளில் அமெரிக்காவில் உள்ளது போல பெரிய அளவில் பொருளாதார சிக்கல்கள் இல்லை ..

அந்த நாடுகளிலும் பொருளாதார சிக்கல்கள் உள்ளன ஆனால் அதனை அந்த நாடுகள் சமாளிக்கும் விதத்தில் சில ஏற்ப்பாடுகளை செய்து வருக்கின்றன . எது எப்படியாகினும் அமெரிகாவில் பிரச்சனை என்றால் அது கட்டாயம் உலக நாடுகள் பலவற்றையும் பாதிக்கும் என்பதில் ஐய்யமில்லை ..........

நன்றி

வழக்கம் போல தங்களது ஓட்டினை வழங்குங்கள் கடந்த சில நாட்களா ஒட்டு வழங்காத நண்பர்களுக்கும் மற்ற இணைய தள ங்களுக்கும் நன்றி !!!!

அன்புடன்

ரமேஷ்