வெள்ளி, அக்டோபர் 02, 2009

உலக சந்தைகளும் பொருளாதார அச்சுறுத்தல்களும்

வணக்கம் நண்பர்களே !

இந்த இனிய விடுமுறையிலே உலக விஷயம் பற்றி எழுதலாம் என முடிவு செய்து மேற்கண்ட தலைப்பிலே தொடருகிறேன் . இதில் சந்தை பற்றிய செய்தி சிறிய அளவில் தான் இடம் பெரும் ...............

அக்டோபர் 2008 ஐ அவ்வளவு சீக்கிரம் நாம் யாரும் மறந்திருக்க முடியாது உலகம் முழுவதிலும் பொருளாதார சிக்கல்களின் ஆரம்பம் . ஒருபுறம் அமெரிக்கா பெரும் பொருளாதார ஆபத்தில் சிக்கி திணறிக் கொண்டு இருந்தது .

ஒரு புறம் அமெரிக்கா நிறுவனங்கள் தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்டு வந்தன .மக்கள் வேலையின்றி தவித்து வந்தனர் . இந்த பிரச்சனைகளின் ஆரம்பத்திற்கு முன் சில வருடம் அமெரிக்காவை பின்னோக்கி பார்ப்போம்

அமெரிக்காவை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே சேமிப்பு என்பது அங்கு துளி அளவும் இல்லை . மக்கள் கிடைத்த வரை செலவு செய்து சுக போக வாழ்கை வாழ்வதில் அமெரிக்கர்களுக்கு ஈடு இணை உலகில் யாரும் இல்லை. இவ்வாறு இருக்க அமெரிக்காவில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பல விசயங்களில் அரசு சலுகைகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டே வந்தது . சில முதலீட்டு விசயங்களில் பல சலுகைகளை அரசு கொண்டுவந்தது .

அதன் படி முதலில் இன்சூரன்ஸ் துறையில் அதிக அளவில் முதலீடுகள் இடம் பெற தொடங்கின . அதன் பின்னர் அந்த நிறுவனங்கள் மக்களுக்காக வழங்கப்படும் கடன்களை அதிகரித்தன .அதுவும் வீடுகளின் மேல் அதிக கடன்களாக வழங்க ஆரம்பித்தன .

அந்த நிறுவனங்களும் உள்ள காசை வைத்துக்கொண்டு மக்களிடம் வட்டி அதிகம் பெறலாம் என்ற ஆசையில் மக்களிடம் அளவுக்கு அதிகமாக கடன் தர ஆரம்பித்தன . அந்த கடன்களையும் அரசும் மற்றும் தனியர்நிருவனங்களும் வீடுகளின் மேல் தர ஆரம்பித்தன .

மேலும் அப்பொழுது அமெரிக்காவில் பல நாடுகளை சேர்ந்தவர்களும் பணிக்காக அங்கு சென்று வாழவேண்டிய சூழல் பின்னர் அந்த நிலையில் வீடுகளின் மதிப்பு உயர உயர வங்கிகளும் தனியார் நிறுவனங்களும் வீட்டின் மேல் வழங்கப்பட்ட கடன் தொகையினை அதிகரித்து வழங்க ஆரம்பித்தன .

மக்கள் வாங்கும் கடனும் வளர அவர்களுக்கு வீடுகளின் மதிப்பும் உயர நிறுவங்களும் மற்றும் அதிகாரிகளையும் இவற்றை பற்றி கவனிக்க வில்லை . அவர்களுக்கு ஒரு சூழ் நிலையில் யாரும் கடனை கட்ட வில்லை என்றால் கூட பரவாயில்லை எனும் அளவிற்கு வீடுகளை விலைகள் தாறு மாறாக உயர்ந்தன .

மக்கள் வீடுகளின் மேல் வாங்கும் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே செல்ல நிறுவனங்களும் தொழில் செய்யாமலே வட்டி வரும் என மேலும் மேலும் அள்ளி கொடுத்தது . இந்த விஷயம் ஒரு பிரச்சனையாக மாறும் என எந்த அமெரிக்கா நிறுவனமோ அல்லது மக்களோ நினைக்கவில்லை .

அதன் படியே பிரச்சனை வர ஆரம்பித்தது . அது புஷ் அரசின் கடைசி வருட ஆட்சியின் பொழுது புஷ் அரசு அப்போதைய சூழ்நிலையில் இந்த பிரச்சனைகளையும் மக்களுக்கு காட்டியது . மக்களும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை .

நாம் உலகின் வல்லரசு நாடு நாம் பின்னாளில் ஒரு பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ள போகிறோம் என எச்சரித்தது . ஆனால் நிறுவனங்களோ அல்லது மக்களோ கேட்பதாக தெரிய வில்லை .

அமெரிக்காவில் சில மேல் மட்ட புள்ளிகள் மற்றும் பெரிய முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த வர்களுக்கு தெரிய ஆரம்பித்தது . அதன் பின்னர் சிக்கலில் உள்ள பெரிய நிறுவனக்கள் சில உடனடியாக செயலில் இறங்கி கடனை கட்ட சொல்ல கடன் தொகைகள் வரவில்லை .

அதன் பின்னர் தகவல் தொழில் நுட்ப துறைகளுக்கான பணிகள் குறைய ஆரம்பித்தன .அதன் பின்னர் அமெரிக்காவில் மட்டுமலல் உலகின் பல நாடுகளில் வீடுகளில் விலைகள் தாறு மாறாக குறைய ஆரம்பித்தன . பின்னர் விழித்துக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து அரசிடம் வழி கேட்டது .

எங்களால் நிறுவனங்களை தொடர்ந்து நடத்த இயலாது அல்லது அரசு அந்த கடன் பெற்ற நபர்களின் கணக்கில் இருந்து கடன் தொகைகளை திருப பெற வழிவகை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டது .

ஆனால் அன்றைய சூழலில் மக்கள் யாரும் தாமாக முன்வந்து கடனை செலுத்த வில்லை . அவர்கள் கூறியது வீட்டினை வைத்து வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் கடன் பெற்றோம் . ஆனால் தற்போதைய சூழலில் கடன் செலுத்த இயலவில்லை அந்தந்த நிறுவனங்களே வீடுகளை விற்று அந்தந்த நிறுவனங்களே கடனை சரி செய்து கொள்ள வேண்டியது தான் என மக்களிடம் இருந்து ஒரு சேர குரல்கள் ஒலித்தது ...

பின்னர் அரசும் இந்த விசயத்தில் தனி கவனம் எடுத்து தனி நபர்களின் பிரச்சனைகளாக கருதாமல் நாட்டின் பிரச்சனையாக கருதி சில நடவடிக்கைகள் எடுத்தது . ஆனால் எதுவும் சரிவரவில்லை . பின்னர் அரசிடம் நிறுவனங்கள் முறையிட்டன ..


நலிவடைந்த நிறுவனங்கள் பல அரசிடம் பணம் கேட்டது . ஆனால் முதலில் அரசு அதை மறுத்து விட்டது .. ஆனால் புஷ் அரசு கஜானாவில் இருந்து பணத்தை எடுத்து தர மறுத்து பின்னர் பலரது வேண்டுகோளுக்கிணங்க திரும்ப எல்லா நஷ்டமடைந்த நிறுவனங்களுக்கு திரும்ப நிறுவனங்கள் நடக்க அரசு பணம் தந்தாள் தான் முடியும் என கூறியதோடு நிற்காமல் பல நிறுவனங்கள் மஞ்சள் பத்திரிக்கை தர ஆரம்பித்தன ..

ஆனால் புஷ் அரசு அதை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாம திரும்ப அதற்கு நடவடிக்கை எடுப்பது போல சில நடவடிக்கை எடுத்தது ஆனால் அமெரிக்காவை பொறுத்த வரை ஒரு பெரிய முடிவுகள் எடுப்பதாக முடிவெடுத்தால் அதற்க்கு அங்குள்ள் மூத்த குடிமக்கள் இதை செய்யலாம் என வாக்களிக்க வேண்டும் ..

ஆனால் மூன்று முறை நடந்த அந்த வாக்களிப்பில் ஆதரவாக வாக்குகள் கிடைக்க வில்லை . ஆனால் இது ஒரு புறம் நடக்க அப்பொழுது தான் புஷ் அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது , மக்களும் அதிபராக ஒபாமாவை தேர்ந்து எடுத்தால் நன்றாக இந்த பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வருவார் என உலக அளவிலும் எதிர் பார்க்கப்பட்டது .

எதிர் பார்த்து போலவே திரு ஒபாமா அவர்கள் அதிபராக பதவி ஏற்றதும் மக்கள் அவர் இந்த பிரச்சனை யை முடிப்பார் என எதிர் பார்த்தனர் . அவர் வந்ததும் அந்த பிரச்சனைகளையும் மிக சீக்கிரம் முடித்தார் ..

ஆனால் அதன் பின்னர் தான் அமெரிக்காவில் பிரச்சனைகள் தலை தூக்கின .....

தொடரும் ,,,

இதே தலைப்பில் அடுத்த பதிவாக ...........

நன்றி

அன்புடன்