சனி, செப்டம்பர் 19, 2009

நிபிட்டி எட்டியது ஐந்தாயிரத்தை !!

சென்ற இரு வாரங்களாக சந்தைகள் தொடர்ச்சியாக ஏறுமுகமாகவே இருந்து வந்துள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் . மேலும் தற்போதய சந்தையின் உயர்வுகள் எந்த விதத்திலும் முதலீட்டளர்களுக்கு மகிழ்ச்சியை தராத ஒரு உயர்வு தான் . ஏன் என்றால் தற்பொழுது சந்தைகள் ஐந்தாயிரம் என்ற இலக்கினை தொட்டு விட்டு வந்துள்ளது .

மேலும் சந்தைகளின் முந்தய எழுச்சியின் பொழுது பங்குகளின் விலைகள் அபாரமானதாக இருந்தது முதலீட்டாளர்கள் அனைவரும் அறிந்ததே ஆனால் தற்பொழுதைய உயர்வில் பல பங்குகளின் விலைகள் அந்த உயர்வில் பாதி அளவினை கூட எட்ட வில்லை .

மேலும் சந்தைகளில் வங்கி துறை மற்றும் கட்டுமான துறை பங்குகளின் உயர்வால் சந்தைகளில் பல துறை வாரியான பங்குகளின் விலைகள் ஏற்றம் பாதிக்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன் .

நன்றி .