திங்கள், செப்டம்பர் 28, 2009

பங்கு சந்தையும்தற்போதைய உயர்வும் பயமும்

வணக்கம் நண்பர்களே !!!

நமது சந்தைகள் தற்போது வர்தகமாகி வரும் நல்லதொரு சூழலில் இது போல தலைப்பிட்ட பதிவினை கண்டதும் கலங்க வேண்டாம் நண்பர்களே ..... இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே ,,,,

நமது சந்தைகள் கடந்த அக்டோபர் மாதம் கடந்த குறைந்த பட்ச புள்ளிகள் கிட்டத்தட்ட 2254 ஆகும் , அந்த குறைந்த பட்ச புள்ளிகளில் இருந்து இன்றைக்கு எட்டி உள்ள அளவானது 5047 அதிகபட்சமாகும் .

இந்த அளவிற்கு உயர்த்தப்பட்ட சந்தைகள் எடுத்துக் கொண்ட காலம் வெறும் பதினோரு மாதங்கள் தான் . ஆமாம் ஆச்சர்யப்பட வேண்டாம் . ஆனால் சந்தைகள் உயர்ந்த அளவிற்கு பங்குகளின் விலைகள் உயரவில்லை . இது எல்லோருடைய குழப்பமாகவே உள்ளது . மற்றும் நமது சந்தைகள் உலக சந்தைகளின் போக்கினை கடந்த நன்கு மாதங்களாக கடை பிடிப்பதில்லை என்றே கருதுகிறேன் ..

இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் சந்தைகளில் ஆபரேடிங் என ஒரு வரியில் முடித்து விட்டு போகலாம் அல்லது கண்டிப்பாக பங்குகளும் உயரும் என முடிக்கலாம் .

ஆனால் சந்தைகளின் தற்போதைய உயர்வில் யாரும் மாட்டி கொள்ள கூடாது என்பதற்க்காக குறிப்பிட்டு எழுதுகிறேன் . நம் மக்களில் பலர் திரும்ப சந்தைக்குள் நுழைய தயாராகி வருவதாக உணர்கிறேன் நமது NRI மக்களையும் சேர்த்து தான் ஆனால் இன்றைய சூழலை வைத்து பார்த்தால் சந்தைகள் கூடிய சீக்கிரம் ஒரு கடும் சரிவினை காணப்போவது நிச்சயம் .

உலக பங்கு சந்தைகளும் கிட்டத்தட்ட கடும் பீதியில் தான் உள்ளன . அவற்றிலும் கூடிய சீக்கிரம் ஒரு பெரிய சரிவினை காணலாம் .கிட்ட தட்ட இரண்டு நாட்களாக உலக சந்தைகளின் போக்கினை வைத்து பார்த்தல் விரைவில் அவற்றை காணலாம் என நினைக்கிறேன் .

நமது சந்தைகளுடன் உலக சந்தைகளை வைத்து பார்த்தால் உலக சந்தைகள் பலவற்றின் உயர்வு கிட்டத்தட்ட 50 % - 75 % மட்டுமே ஆனால் நமது சந்தைகள் மட்டும் 125 % அளவிற்கு உயர்ந்துள்ளன ..

போதாக் குறைக்கு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் போன வாரத்தில் கடும் சரிவு அடைந்துள்ள நிலையில் வரும் வாரங்களில் அவற்றில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்கிறேன் .

கச்சா என்னை 71 $ லிருந்து 64 $ ஆக சரிவடைந்துள்ளன . இந்த நிலையில் கச்சா என்னை உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளன . இந்த விலையில் இருந்து கச்சா என்னை உயர துவங்கினால் 80$ நெருங்கும் என கருதுகிறேன் .

நமது சந்தைகளில் நாளும் உயரும் வங்கி பங்குகளுக்கு ஒரு நல்ல செய்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வரும் என எல்லோரது எதிர் பார்ப்பும் உள்ளது . கொடுத்தால் கூட பங்குகள் விலைகளை மேலும் உயர வாய்ப்பு குறைவு .சந்தைகள் உயராது ஆனால் இல்லை என்றால் சரிவில் முதலிடத்தில் வங்கி துறை பங்குகள் தான் இருக்கும் .ஆதலால் வங்கி துறை பங்குகளில் கவனம் கொள்ளவும்

மேற்கூறியவற்றை கவனத்தில் வைத்து தினசரி வர்த்தகர்களும் மற்றும் முதலீட்டாளர்களும் வர்த்தகம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் .