வியாழன், டிசம்பர் 31, 2009

உள்ளூர் சந்தை ( நிப்டி )போக்குகள் 311209

வணக்கம் நண்பர்களே ,

என்ன தான் நடக்கிறது நமது சந்தைகளில் குறைந்த அளவிலான புள்ளிகள் வீழ்வதும் பின்னர் அதை விட இரு மடங்குகள் உயர்வது என்ற போக்கிலேயே நமது சந்தைகளில் வர்த்தகம் நடந்து வருகிறது . அதுவும் குறிப்பிட்டு சொன்னால் மக்களின் கவனம் முழுவதும் சந்தைகளின் போக்கின் படி இருந்தாலும் அதனை மாற்றம் செய்ய சில புல்லுருவிகளின் செயல் பாடுகள் சந்தைகளில் நடந்த வண்ணம் உள்ளன . அவர்கள் சொல்லுக்கு தான் சந்தைகள் கட்டுபடுகின்றன ..

அப்படி என்ன நடக்கிறது :
சந்தைகள் பற்றியும் வர்த்தகம் செய்யும் மற்றும் செய்யாத அனைவருக்கும் தெரியும் சந்தைகள் முன்னொரு காலத்தில் இருபதாயிரம் புள்ளிகளை தாண்டி 21.357 புள்ளிகள் வரை சென்றன . ஆனால் நமது சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் அதிகரித்தது என்னவோ 2004 - 2005 ஆண்டு வாக்கில் தான் .

ஏன் இதை சொல்கிறேன் என்றால் நமது சந்தைகளில் ஒரு காலத்தில் ஒன்றும் இல்லாத பங்குகளின் விலைகள் கூட யானை விலை குதிரை விலைகளில் வர்த்தகம் ஆனது நினைவிருக்கலாம் . பின்னர் அந்த பங்குகள் எல்லாம் அதிக விலை பங்குகளாக மாறி நம் முதலீட்டாளர்களின் கையில் ஒரு சொத்தாக இன்று வரை உள்ளன . நான் கூறும் இந்த் நிகழ்வு போன அதே முன் குறிப்பிட்ட உயர்வுகளில் நம் முதலீட்டளர்கள் செய்த தவறுகள் தான் (பாவம் அவர்களுக்கு மட்டும் என்ன தெரியும் ) இருக்கும் வீட்டிலே நெருப்பு கொளுத்துவார்கள் என்று ?

நமது சந்தைகள் தற்போதைய உயர்வுகள் சற்று கூட நிம்மதி பெருமூச்சு விடமுடியாத சூலில் தான் நாம் உள்ளோம் . ஏன் இந்த சூழ்நிலை நமக்கு மட்டுமா ஆம் நண்பர்களே நமது சந்தைகளை ஒரு காலத்தில் ஆயிரம் ரூபாயில் விற்ற சில பங்குகள் இன்று 175 - 300 - என்ற விலைகளில் வர்த்தகம் ஆகி வருகின்றன . காரணம் அந்நியமுதலீட்டாளர்கள் நமது மக்களை எந்த விலையிலும் வாங்கும் தன்மையினை நமது மக்கள் மத்தியில் உருவாக்கி உள்ளனர் ..

கடந்த சில மாதங்களாக நமது சந்தைகளுக்கு மற்றும் நமது முதலீட்டாளர்களுக்கு கூட சொல் புத்தி இல்லை போல அல்லது நமது சந்தைகளில் முதலீடு செய்யும் நமது முதலீட்டாளர்கள் சரியான முறையில் அல்லவோ என்று கூட சில சமயங்களில் சற்று குழப்பம் வருகிறது நண்பர்களே . நமது சந்தைகளை ஒரு போக பொருளாக வர்த்தகம் செய்பவர்கள் தான் இந்த அந்நிய முதலீட்டளர்கள் ( நான் கூறுவது சந்தைகளில் நகர்வுகள் மற்றும் அவர்கள் நகர்த்தும் நகர்வினை வைத்து )

சரி அவ்வாறு உயர்த்தப்படும் சந்தைகள் தற்பொழுது சரியான உயர்வுகளில் வர்த்தகம் நடந்து வருகிறது . ஆனால் பங்குகளின் விலைகள் சற்றும் உயர்வினை எட்டாமல் வர்த்தகம் ஆகி வருகிறது . என்பதை எத்தனை பேர் கவனித்தீர்கள் நண்பர்களே அவ்வாறு சரியான விலைகளில் வர்த்தகம் ஆகாமல் சந்தைகள் உயர்த்தப்படுவது ஒரு பெரிய சரிவினை உண்டாக்கவே என்றே கருதுகிறேன் .

மேலும் நான் கடந்த மாத மற்றும் கடந்த மூன்று மாத வர்த்தக நுட்ப வரை படங்களின் படி பார்த்தால் சந்தைகளில் போக்கில் இன்னும் சில நாடக வேலைகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன என்றே கருதுகிறேன் . . இன்று வரை நமது சந்தைகள் வர்த்தகம் ஆகி வருவது ஆண்டு உயர்வு வர்த்தக புள்ளிகளின் அருகாமையில் என்பதும் குறிப்பிடதக்கது ..

அவ்வாறு வர்த்தகம் ஆகி வருவது மற்றும் அந்த நிலைகளில் சந்தைகளை நிலை நிறுத்தம் செய்வது கூட நமது ஆபரேட்டர்கள் தாம் போல அந்த புண்ணியவான்களின் கையில் சிக்குண்டுள்ள நமது சந்தைகள் சற்றும் நிலை குலையாமல் இருக்க சில யுக்திகளை கையாண்டு கொண்டுள்ளனர் .. நமது ஆப்றேட்டகள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் இதற்க்கு பலியாடுகள் நம் முதலீட்டளர்கள் ...........

சரி முக்கியமா ஒரு விஷத்தை பற்றி பேசுவோமா ???

அதென்னையா நம்ம கவர்மென்ட் இன்பிலேசன் அதிகமானாலும் தப்பு இல்லைன்னு சொல்லுது குறைந்தாலும் தப்பிலைன்னு சொல்லுது .. மேலும் நம்ப பெரியண்ணன் வந்தால் போதும் எதுக்குன்னே தெரியல மார்க்கெட் மேலேயே போகுது .. காரணம் ஒன்னே ஒன்னு தான் சொல்ல தெரியும் போல் சார்ட் கவரிங் இன் மார்க்கெட் ..

இல்ல தெரியாம தான் கேட்கிறேன் நீ என்ன மார்க்கெட் நடத்துறைய இல்ல அந்நிய முதலீட்டளர்கள் கூட கூத்து நடதுறைய எவ்வளவு பங்கு வாங்குற சந்தைகளை நகவை அதிகமாக்க யாரு வாங்குறா . சந்தைகளில் இன்னும் சில கம்பெனிகளை தினமும் இன்சைதர் வர்த்தகம் செய்ய விடு சீக்கிரம் சந்தை முடிந்து விடும் அம்புட்டு தான் நிம்மதியா வீட்டிலே இருக்கலாம் ..

அன்பான முதலீட்டலர்களுக்கு :

இன்றைய தியதியில் வர்த்தகம் ஆகி கொண்டுள்ள நிபிட்டி தற்போதைய நிலைகளில் வாங்குவது நல்லதல்ல சற்று தங்களது முதலீடுகளை மற்றும் முதலீட்டு தொகையினை பத்திரமாக வையுங்கள் சந்தைகள் கீழே செல்லும் பொழுது முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் ..

அன்பான வாசகர்களுக்கு : -

நுட்ப குறிகளின் படி நானும் பதிவு எழுத சில முக்கிய குறிப்புகளுடன் தான் அமர்ந்தேன் ஆனால் அதன் படி செல்லாத சந்தைகளின் போக்கினை என் எழுத்து மூலமாக திருப்பிவிடவ முடியும் அல்லது நிபிட்டி இந்த நிலைகளில் வாங்க வேண்டும் என துடிக்கும் மக்களின் போக்கினை மற்ற முடியுமா என்ன . .....

யோசிக்கிறேன் ... பின்பு சந்திக்கலாம்

அன்புடன்

ரமேஷ்