புதன், செப்டம்பர் 30, 2009

வணக்கம் ,

நேற்றைய சந்தைகள் வழக்கம் போல எதிர் பார்த்ததற்கும் மேலாக சற்று உயர்த்து ஏன் எனில் முந்தய தினம் வர்த்தக விடுமுறைஎன்பதால் முந்தின ஆசியா சந்தைகள் சரிவு மற்றும் நேற்றைய உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கலாம் என எதிர் பார்த்தேன் மாறாக சந்தைகள் சற்று உயர்ந்தன .

நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவில் 1% - 2% அளவிற்கு உயர்வில் முடிந்தன .அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சிறிது சரிவில் துவங்கியது . அதன் பின்னர் நமது சந்தைகள் முடிவில் ஐரோப்பிய சந்தைகள் சற்று சரிவிலேயே வர்த்தகம் ஆகி கொண்டு இருந்தன .

நேற்று நமது சந்தைகள் 30 புள்ளிகள் வரையிலான ஒரு பெரிய கேப் ஐ விட்டு சென்றுள்ளது . அது இவ்வார இறுதிக்குள் புல் செய்யப்படும் என நினைக்கிறேன் நேற்றைய வர்த்தக நேரத்தில் அந்த கேப் புல் செய்யாமல் சந்தை உயர்ந்தது சற்று ஆச்சர்யதினை அளிக்கிறது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பற்றி பெரிசாக சொல்ல எதுவும் இல்லை வழக்கம் போல உயர்வில் தடுமாட்டம் மேலும் இன்று வரவுள்ள சில அறிவிப்புகள் சந்தைகள் எதிர் பார்த்து காத்திருக்கின்றன .

இன்றைய ஆசிய சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் அடுத்த கட்ட போக்கினை எதிர் பார்த்து காத்திருக்கின்றன .நமது சந்தைகளும் அதற்காகவே சற்று பிளாட் அல்லது சில புள்ளிகள் சரிவில் துவங்கலாம் .

இன்றைய சந்தைகளில் நிபிட்டி 5012 புள்ளிகள் தாண்டி வர்த்தகம் நடக்குமானால் சந்தையின் போக்கு சற்று மேல் நோக்கியே இருக்கும் . ஆனால் இடையில் சந்தைகள் 4980 புள்ளிகளை இழக்க கூடாது .

நிலைகள்

ஆதரவு - 4980 , 4950 .

எதிர்ப்பு - 5012 , 5040 .