புதன், செப்டம்பர் 30, 2009

வணக்கம் ,

நேற்றைய சந்தைகள் வழக்கம் போல எதிர் பார்த்ததற்கும் மேலாக சற்று உயர்த்து ஏன் எனில் முந்தய தினம் வர்த்தக விடுமுறைஎன்பதால் முந்தின ஆசியா சந்தைகள் சரிவு மற்றும் நேற்றைய உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சந்தைகள் பிளாட் நிலைகளில் துவங்கலாம் என எதிர் பார்த்தேன் மாறாக சந்தைகள் சற்று உயர்ந்தன .

நேற்றைய ஆசியா சந்தைகள் முடிவில் 1% - 2% அளவிற்கு உயர்வில் முடிந்தன .அதன் பின்னர் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சிறிது சரிவில் துவங்கியது . அதன் பின்னர் நமது சந்தைகள் முடிவில் ஐரோப்பிய சந்தைகள் சற்று சரிவிலேயே வர்த்தகம் ஆகி கொண்டு இருந்தன .

நேற்று நமது சந்தைகள் 30 புள்ளிகள் வரையிலான ஒரு பெரிய கேப் ஐ விட்டு சென்றுள்ளது . அது இவ்வார இறுதிக்குள் புல் செய்யப்படும் என நினைக்கிறேன் நேற்றைய வர்த்தக நேரத்தில் அந்த கேப் புல் செய்யாமல் சந்தை உயர்ந்தது சற்று ஆச்சர்யதினை அளிக்கிறது .

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் பற்றி பெரிசாக சொல்ல எதுவும் இல்லை வழக்கம் போல உயர்வில் தடுமாட்டம் மேலும் இன்று வரவுள்ள சில அறிவிப்புகள் சந்தைகள் எதிர் பார்த்து காத்திருக்கின்றன .

இன்றைய ஆசிய சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் அடுத்த கட்ட போக்கினை எதிர் பார்த்து காத்திருக்கின்றன .நமது சந்தைகளும் அதற்காகவே சற்று பிளாட் அல்லது சில புள்ளிகள் சரிவில் துவங்கலாம் .

இன்றைய சந்தைகளில் நிபிட்டி 5012 புள்ளிகள் தாண்டி வர்த்தகம் நடக்குமானால் சந்தையின் போக்கு சற்று மேல் நோக்கியே இருக்கும் . ஆனால் இடையில் சந்தைகள் 4980 புள்ளிகளை இழக்க கூடாது .

நிலைகள்

ஆதரவு - 4980 , 4950 .

எதிர்ப்பு - 5012 , 5040 .

செவ்வாய், செப்டம்பர் 29, 2009


வணக்கம்
நேற்றைய ஆசியா சந்தைகள் ஒரு பெரிய சரிவில் சந்தைகள் வர்த்தகமாக தொடங்கின . பின்னர் முடிவு வரை சந்தைகள் சரிவுகள் அதிகமாகி 2 % அளவிற்கு சரிவில் முடிந்தன .

மதியம் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் 0.5 % அளவிற்கு சரிவில் துவங்கின .பின்னர் சரிவில் இருந்து மீண்டு உயர துவங்கின

நேற்றைய அமெரிக்கா சந்தைகள் துவக்கம் முதலே ஒரு நல்ல உயர்வில் துவங்கி வர்த்தகம் ஆனது . இறுதியில் அமெரிக்கா சந்தைகள் முக்கிய எதிர் நிலையான 9855 ஐ எட்டி பிடிக்க முயற்சித்தது .ஆனால் முடியவில்லை முடிவில் 9795 - 1.25 % உயர்வில் முடிந்தது .

இன்றைய ஆசியா சந்தைகள் அமெரிக்கா சந்தைகள் போக்கினை ஒட்டி 2 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . மேலும் ஜப்பானிய சந்தை 1% உயர்வில் துவங்கி வர்த்தகம் நடந்து வருகிறது .

நமது சந்தைகள் நேற்றைய தினம் விடுமுறை என்பதால் இன்றைய துவக்கம் பிளாட் நிலைகளில் இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . அதன் பின்னர் சந்தைகள் ஆசியா ஐரோப்பிய சந்தைகளை பின்பற்றும் .

நமது சந்தைகள் வரும் நாட்களில் உயர வாய்ப்புகள் சற்று குறைவாகவே காணப்படுகின்றன . ஆகவே முடிந்தவரை உயர்நிலைகளில் உள்ளே செல்வதை குறைத்து வெளியேற பழகுங்கள் . லாபத்தினை உறுதி செய்யுங்கள் . நான் ஏற்கனவே கூறியபடி சந்தைகள் உயர்வில் தடுமாறினால் உடனடியாக உங்கள் போக்கினை மாற்றுங்கள் .

தினசரி வணிகர்கள் ஸ்ட்ரிக்ட் ஸ்டாப் லாஸ் உபயோக படுத்துங்கள் . முதலீட்டாளர்கள் சற்று பொறுமை காக்கும் நேரமிது ......

நிலைகள் =
ஆதரவு -4950 , 4910 , 4885 ............... 4850

எதிர்ப்பு - 4980 , 5012, 5040 ..............5088

இன்றைய கொசுறு ############
வரும் நாட்களில் இன்று ஜப்பானிய அரசின் காலாண்டு ஜி டி பி நாளை லண்டன் அரசின் இண்டஸ்ட்ரியல் அறிவிப்பு நாளை மறுதினம் அமெரிக்காவின் ஐ ஐ பி மற்றும் job less அறிவிப்புகள் என எந்த வாரமே ஒரு இக்கட்டான சூழலில் வர்த்தகம் ...................

கவனம் தேவை ----------------------------

நன்றி

திங்கள், செப்டம்பர் 28, 2009

பங்கு சந்தையும்தற்போதைய உயர்வும் பயமும்

வணக்கம் நண்பர்களே !!!

நமது சந்தைகள் தற்போது வர்தகமாகி வரும் நல்லதொரு சூழலில் இது போல தலைப்பிட்ட பதிவினை கண்டதும் கலங்க வேண்டாம் நண்பர்களே ..... இது ஒரு விழிப்புணர்வு பதிவு மட்டுமே ,,,,

நமது சந்தைகள் கடந்த அக்டோபர் மாதம் கடந்த குறைந்த பட்ச புள்ளிகள் கிட்டத்தட்ட 2254 ஆகும் , அந்த குறைந்த பட்ச புள்ளிகளில் இருந்து இன்றைக்கு எட்டி உள்ள அளவானது 5047 அதிகபட்சமாகும் .

இந்த அளவிற்கு உயர்த்தப்பட்ட சந்தைகள் எடுத்துக் கொண்ட காலம் வெறும் பதினோரு மாதங்கள் தான் . ஆமாம் ஆச்சர்யப்பட வேண்டாம் . ஆனால் சந்தைகள் உயர்ந்த அளவிற்கு பங்குகளின் விலைகள் உயரவில்லை . இது எல்லோருடைய குழப்பமாகவே உள்ளது . மற்றும் நமது சந்தைகள் உலக சந்தைகளின் போக்கினை கடந்த நன்கு மாதங்களாக கடை பிடிப்பதில்லை என்றே கருதுகிறேன் ..

இவற்றை எல்லாம் வைத்து பார்த்தால் சந்தைகளில் ஆபரேடிங் என ஒரு வரியில் முடித்து விட்டு போகலாம் அல்லது கண்டிப்பாக பங்குகளும் உயரும் என முடிக்கலாம் .

ஆனால் சந்தைகளின் தற்போதைய உயர்வில் யாரும் மாட்டி கொள்ள கூடாது என்பதற்க்காக குறிப்பிட்டு எழுதுகிறேன் . நம் மக்களில் பலர் திரும்ப சந்தைக்குள் நுழைய தயாராகி வருவதாக உணர்கிறேன் நமது NRI மக்களையும் சேர்த்து தான் ஆனால் இன்றைய சூழலை வைத்து பார்த்தால் சந்தைகள் கூடிய சீக்கிரம் ஒரு கடும் சரிவினை காணப்போவது நிச்சயம் .

உலக பங்கு சந்தைகளும் கிட்டத்தட்ட கடும் பீதியில் தான் உள்ளன . அவற்றிலும் கூடிய சீக்கிரம் ஒரு பெரிய சரிவினை காணலாம் .கிட்ட தட்ட இரண்டு நாட்களாக உலக சந்தைகளின் போக்கினை வைத்து பார்த்தல் விரைவில் அவற்றை காணலாம் என நினைக்கிறேன் .

நமது சந்தைகளுடன் உலக சந்தைகளை வைத்து பார்த்தால் உலக சந்தைகள் பலவற்றின் உயர்வு கிட்டத்தட்ட 50 % - 75 % மட்டுமே ஆனால் நமது சந்தைகள் மட்டும் 125 % அளவிற்கு உயர்ந்துள்ளன ..

போதாக் குறைக்கு தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் போன வாரத்தில் கடும் சரிவு அடைந்துள்ள நிலையில் வரும் வாரங்களில் அவற்றில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்கிறேன் .

கச்சா என்னை 71 $ லிருந்து 64 $ ஆக சரிவடைந்துள்ளன . இந்த நிலையில் கச்சா என்னை உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளன . இந்த விலையில் இருந்து கச்சா என்னை உயர துவங்கினால் 80$ நெருங்கும் என கருதுகிறேன் .

நமது சந்தைகளில் நாளும் உயரும் வங்கி பங்குகளுக்கு ஒரு நல்ல செய்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வரும் என எல்லோரது எதிர் பார்ப்பும் உள்ளது . கொடுத்தால் கூட பங்குகள் விலைகளை மேலும் உயர வாய்ப்பு குறைவு .சந்தைகள் உயராது ஆனால் இல்லை என்றால் சரிவில் முதலிடத்தில் வங்கி துறை பங்குகள் தான் இருக்கும் .ஆதலால் வங்கி துறை பங்குகளில் கவனம் கொள்ளவும்

மேற்கூறியவற்றை கவனத்தில் வைத்து தினசரி வர்த்தகர்களும் மற்றும் முதலீட்டாளர்களும் வர்த்தகம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் .

அந்நிய முதலீட்டாளர்களின் ஆதிக்கம் ஏன் ?

வணக்கம் நண்பர்களே

நமது சந்தைகளை பொறுத்த வரை அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் ஆப்ரேட்டகளின் ஆதிக்கம் தொடர்ந்து சந்தைகளை வழி நடத்தி செல்கிறார்கள் . இது பிற்காலத்தில் நமது சந்தைகளை பலமில்லாமல் ஆக்கி விடும் என கருதுகிறேன்

அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து நமது சந்தைகளில் முதலீடு செய்துவருவது கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துக் கொண்டே வருகிறது . ஏன் அவர்களுக்கு வேறு முதலீடு வாய்ப்புகள் இல்லையா .

இன்னும் நமது சந்தைகளின் உயர்வில அவர்கள் முதலீடு செய்து கொண்டே வர காரணம் என்ன ?
உலக சந்தைகளை மிஞ்சிய சந்தைகள் என்றால் அது நமது சந்தைகள் தான் . மற்ற சந்தைகள் உயர்வின் பொழுதும் மற்றசந்தைகள் சரிவின் பொழுதும் நமது சந்தைகள் உயர்ந்து வருவதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் . மேலும் நாட்டின் எதிர் கால வளர்ச்சி என்று என்று அரசு மார்தட்டி கொள்கிறது .

அப்படி ஒன்றும் எதிர் காலத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்ப்பட போவதாக தெரியவில்லை . துறை வரியாக எடுத்துக் கொண்டாலும் கட்டுமானம் மற்றும் கச்சா என்னை சம்பந்தமான் துறைகள் சற்று வளர்ச்சி குறையவே வாய்ப்புகள் உள்ளன .

மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அவர்கள் இந்தாண்டு மார்ச்க்குள் இன்பிலேசன் + 6% ஐ எட்டும் என்று கூறுகிறார் . அவ்வாறு வரும் பட்சத்தில் மேற சொன்ன இரண்டு துறைகளும் கடுமையாக பதிக்கப்படும் அபயம் உள்ளது .

மேலும் ரிசர்வ் வங்கி கடன் தொகைக்கான வட்டி குறைக்கவும் நமது வங்கிகள் கடனுக்கான வட்டியை அதிகரிக்க மற்றும் டெபாசிட் இக்கான வட்டியை குறைக்கவும் வாய்ப்புகள் உள்ளன .

அவ்வாறு நிகழும் பட்சத்தில் மேலும் தொழில் வளர்ச்சி பதிக்கப்படும் அபாயம் உள்ளது .மற்றும் இப்பொழுது சரிவர நடந்து வரும் தொழில்களும் பாதிக்கும் .

ஆக அந்நிய முதலீடு தொடர இது காரணமல்ல ////

மேலும் அவர்கள் முதலீடு செய்யும் அளவினை செபி அதிகரித்து வர காரணம் என்ன ?
அரசின் முக்கிய ஆவணமான அந்நிய முதலீட்டாளர்களின் ( P NOTES ) பங்கேற்ப்பு ஆவணத்தில் சில கவன சிதறல்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் மற்றும் வெளியே கூற முடியாத சிற்சில விசயங்கள் காரணமாக இவ்விசயங்கள் தொடர்ந்து மூடி மறைக்க படுகின்றன .

மேலும் போன முறை ' p notes ' ஐ காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு வேறு நாட்டுக்கு செல்ல உள்ளதாக கூறி சந்தைகள் பெரும் சரிவினை கண்டது .அதையாரு மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் . அவ்வாறு செய்யப்படுவது எல்லாம் சில சித்து விளையாட்டுகள் தான் என நினைக்கிறேன்

ஆனால் அரசு இந்த விசயத்தில் சற்று அதிககவனம் எடுத்து அந்நிய முதலீட்டாளர்களின் போக்கினை சற்று கட்டு படுத்தினால் சந்தைகளில் அதிக பாதிப்பின்றி ஒரே சீராக செல்லும் ......

சந்தைகள் மேல் நோக்கி செலுத்தப்பட வேண்டிய கட்டாயம் என்ன ?

நமது சந்தைகளை பொறுத்த வரையில் நமது மக்களும் இன்னும் சற்று அறிய பருவத்திலேயே உள்ளனர் காரணம் என்று பார்த்தால் சந்தைகள் உயர்வின் பொழுது அதிக விலை கொடுத்து வாங்கி வைத்து விட்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை போன இரண்டாயிரத்து எட்டில் வந்தது ஆனால் அந்த சூழ்நிலைகளில் மக்களின் போக்கினை அந்நிய முதலீட்டாளர்கள் மாற்றி விட்டு ஒவ்வொரு உயர்விலும் நம் முதலீட்டாளர்களை வாங்கும் முறைக்கு திருப்பி சந்தைகளின் உயர்வினை உறுதி செய்கிறார்கள் .

ஆனால் அவ்வாறு சந்தைகள் உயர்த்தப்படுவது அவர்களின் ஆதயத்திர்க்காக என்று நமது முதலீட்டாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் . சற்று பொறுமையாக சந்தைக்குள் முதலீடு செய்ய வேண்டும் .

மீளும் சந்தைகள் அதிகமாக உயர்ந்ததும் சந்தைகளில் இருந்து வெளியேற வேண்டும் . அல்லது லாபத்தினை உறுதி செய்ய வேண்டும் . அங்கு அந்த நிலையில் உள்ளே செல்ல கூடாது .அங்கு நமது முதலீட்டாளர்களை உள்ளே வர வைக்க சில தற்காலிக உயர்வுகள் சந்தையில் திடீரென கொண்டு வரப்படுகிறது அதை அறிந்து முதலீடு செய்ய வேண்டும் .

பங்குகளின் விலைகள் சற்றும் அதிகரிக்காமல் சந்தைகளை மட்டும் உயர்த்துவது ஏன் ?
இது தான் முக்கியமான ஒரு விஷயம் ஆனால் இந்த விசயத்தினை முதலீட்டாளர்களும் ஏன் அரசும் செபியும் கண்டு கொண்டதாக தெரியவில்லை அல்லது கண்டு கொள்ளாதது சற்று எனக்கு வியப்பினை அளிக்கிறது .

சந்தைகளில் உயர்வு என்பது நாம் சராசரி அனைவர்க்கும் தெரிந்து இருப்பது பங்குகள் விலைகள் உயர்ந்து இருக்கும் என்பதே . ஆனால் தற்போதைய நமது சந்தைகள் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை .

காரணம் அந்நிய முதலீட்டலர்களுடன் சில தனியார் மற்றும் சில இன்சுரன்ஸ் முதலீடு நிறுவங்களும் கை கோர்த்துள்ளன ,அவர்கள் சந்தைகளில் சில பங்குகளின் விலைகளை மட்டும் செயற்கையாக உயர்த்தி சந்தையினை மேலே கொண்டு செல்கின்றனர் .

அதுவும் குறிப்பாக ப்ளூ சிப் கம்பெனி பங்குகள் மட்டும் உயந்து பல பங்குகளை உயர் செய்யாமல் செய்கின்றர்னர் பின்னர் சந்தையில் இன்டெக்ஸ் மட்டும் உயராமல் என்ன செய்யும் இப்படியே போனால் அந்நிய முதலீட்டாளர்களும் ஆபரேட்டர்களும் தான் சந்தையில் இருப்பார்கள் ..

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவர் ஒரு நாளில் வாங்குதல் மற்றொருவர் விற்றல் என திடர்ந்து இவர்கள் விளையாட்டினை தொடர்ந்து வருகிறார்கள் . மேலும் இந்த இருவருக்கிடையில் சந்தையில் ஆபரேட்டர் மற்றும் ச்பெகுலேட்டார் களும் சேர்ந்து நம் முதலீட்டாளர்கள் அனைவரையும் சந்தையில் இருந்தே வெளியேற்றி விடுகிறார்கள் .

நமது மக்களும் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என போட்டு வைத்த பங்குகள் பல கோடி இருக்கலாம் .

சரி முதலீட்டாளர்கள் பாடு இப்படி தினசரி வர்த்தகர்கலாவது கொஞ்சம் சம்பாதிக்கிறார்கள் என்றால்அதுவும் கிடையாது .அவர்களையும் வர்த்தகத்தின் இடையில் அதிக பட்ச விலைகளை தாண்டி வர்த்தகம் ஆகியும் குறைந்த பட்ச விலைகளை உடைத்து வர்த்தகம் ஆகியும் அவர்களையும் குழப்பி அவர்கள் சம்பாதிக்க மட்டுமல்லாது உள்ளதையும் விட்டு விட்டு சந்தையை விட்டே வெளியேற்று கின்றனர் .

இது தான் தற்சமயம் அக்டோபர் மாதத்திற்கு பிறகு சந்தையில் நடந்து வரும் வர்த்தகம் . சரி சந்தையில் சம்பதிதவர்களே இல்லை யா என்ற பார்த்தால் இருக்கிறார்கள் பக்குவம் அடைந்த சந்தை பற்றிய முழு அறிவு பெற்றவர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள் ..

கடைசியாக ஒன்று செபி இந்த விசயத்தினை மேலும் கண்டு கொள்ளாமல் விட்டால் நமது சந்தைகள் அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று நமது முதலீட்டலர்களையும் சந்தையில் இருந்தே வெளியேற்றி விடுவார்கள் அன்பான அந்நிய முதலீட்டாளர்கள் . ( கேவலமாக எழுதினால் படிக்க நன்றாக இருக்காது )

கவனிக்குமா அரசு ???

அன்புடன்
ரமேஷ்

சனி, செப்டம்பர் 26, 2009

வணக்கம் நண்பர்களே

வெள்ளியன்று முடிவடைந்த சந்தைகள் முந்தய தலைப்பிற்கேற்ப சற்று சரிவடைந்தன .வெள்ளியன்று நமது சந்தைகள் முக்கிய எதிர் நிலைகள் உடைத்து மேலே சென்ற பின்னர் முந்தய பதிவில் கூறியது போல ஐந்தாயிரம் புள்ளிகளில் செல்லிங் அதிகரித்து சந்தைகள் சரிவடைந்தன .

ஆனால் நமது சந்தைகளில் வெள்ளியன்று இன்னும் கடுமையான சரிவினை எதிர் பார்த்தேன் . சந்தைகள் முக்கிய ஆதரவு நிலையான 4910 புள்ளிகள் உடை படும் என எதிர் பார்த்தேன் . இடையில் 20 நாள் சராசரி வர்த்தக புள்ளியான 4932 உடை படாததால் சந்தைகள் சற்று உயர தொடங்கின .

மேலும் அன்றைய தினம் சரிவில் துவங்கிய ஆசியா சந்தைகள் பின்னர் படிப்படியாக உயர ஆரம்பித்தன

ஆதலால் நமது சந்தைகளும் உயர்ந்தன ஆனால் சந்தைகளில் செல்லிங் அதிகரித்ததால் சந்தைகள் இரு புறமும் வேகமாக வர்த்தகம் ஆகின . பின்னர் சந்தைகள் ஐரோப்பிய சந்தைகள் துவக்கத்திற்கு பின்னர் அந்த சந்தைகளின் போக்கில் சென்று வர்த்தகம் ஆகின .

ஐரோப்பிய சந்தைகளும் துவக்கத்தில் சற்று சரிவில் துவங்கின . பின்னர் நமது சந்தைகளின் முடிவில் ஐரோப்பிய சந்தைகள் சற்று சரிவில் இருந்து உயரத் தொடங்கின . நமது சந்தைகளும் ஐரோப்பிய சந்தைகள் மற்றும் விடுமுறை தினங்களை கொண்டு சந்தைகளில் ஷார்ட் கவரிங் வந்ததால் சந்தைகள் சற்று உயர்வில் முடிந்தன .

அமெரிக்கா சந்தைகள் இரண்டவது வாரமாக உயர்வில் தடுமாறி வருகிறது என்பது குறிப்பிட தக்க விஷயமாகும் . சந்தைகள் சற்று வர்த்தக நிலைகள் மாறி வருகிறது . நேற்றைய சந்தைகள் முடிவில் சந்தைகள் சற்று குழப்பமானதாகவே முடிந்தன . பெரிதாக் சரிவுகள் இல்லை . ஐரோப்பிய சந்தைகள் முடிவில் பாசிடிவ் ஆக முடிந்தன .

நன்றி

குறிப்பு :

நண்பர்களே இன்றைய பதிவை காலையிலேயே எதிர் பார்த்து ஏமார்ந்த நண்பர்களிடம் ஒரு சிறிய மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் .

மேலும் இந்த விடு முறை தினங்களில் சில முக்கிய பதிவுகள் எழுதலாம் என தீர்மானித்துள்ளேன் ,

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

நன்றி

அன்புடன்
ரமேஷ்

வெள்ளி, செப்டம்பர் 25, 2009

அறிவிப்பு ...

நண்பர் திரு ராஜ் குமார் அவர்களுக்கு ,,

நான் ஒன்றும் காலம் காலமாக வலை பதிவு எழுதுவதில்லை . வலை உலகிற்கு நான் ஒரு சிறு பிள்ளை , ஆதலால் தாங்கள் கூறிய ( தமிழகத்தில் ராஜ்குமார் அவர்களின் நண்பர் பாமரன் என்ற புனை பெயரில் பிரபல கட்டுரையாளர் என்ற செய்தியை தெரிவித்துள்ளார் . மேலும் பின்னாளில் தவறுகள் எதுவும் நடவாதிருக்க ) படி பின்னாளில் எதுவும் தவறுகள் நடக்க்காதிருக்க புனை பெயரில் எழுதும் எண்ணத்தினை விட்டு விட்டு எனது நிஜ பெயரில் தொடர்கிறேன் ..

தங்கள் அறிவுரைக்கு நன்றி

நன்றி

அன்புடன்
ரமேஷ்

இனி தான் ஆரம்பம்

நேற்றைய சந்தையில் நிபிட்டி காலை துவக்கத்தில் இருந்தே தினசரி வர்த்தகர்களை குழப்பும் நோக்கில் துவக்கம் மேலும் ஆசியா சந்தைகளை தொடர்ந்து GAP DOWN இல் துவக்கம் , பின்னர் கீழே முக்கிய ஆதரவு நிலையான 4910 ஸ்டாப் லாஸ் எடுக்கப்பட்டு பின்னர் சந்தைகள் வேகமாக உயர்த்தப்பட்டன .

மத்திய இடைவேளையின் பொழுது ஜப்பானிய சந்தைகள் 1.5 % உயர்வில் இருந்தது முடிவின் பொழுது பிளாட் நிலைக்கு வந்தது . ஆசியா சந்தைகள் முடிவில் சிறிய அளவிலான சரிவினை கண்டது .

நமது சந்தைகள் காலை துவங்கிய GAP DOWN மற்றும் நேற்றைய முடிவு புள்ளிகளான 4963 நிலைகளை எட்டிய பின்னர் ஒரு சரிவு வந்து பின்னர் அங்கிருந்து சென்று சந்தைகள் உயர்வினை எட்ட தொடங்கின .

மதியம் சரிவில் துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் சரிவில் இருந்து வந்தன . அதன் பின்னர் ஐரோப்பிய சந்தைகளும் உயர தொடங்கின சரிவில் இருந்து முழுவதும் மீண்டும் ஏற்றத்திற்கு வந்தன . உடன் நமது சந்தைகளும் உயர்வினை எட்ட தொடங்கி f& o வர்த்தக கடைசி தினம் ஆதலால் சந்தையில் பெருமளவு ஷாட் கவரிங் இருந்ததாலும் சந்தைகள் எதிர் நிலையான 4980 புள்ளிகளை தாண்டி சென்றன .

நேற்றைய அமெரிக்கா சந்தைகளை பொறுத்த வரை வழக்கம் போல உயர்வில் தடுமாட்டம் துவக்கத்தில் வலு இல்லாமல் சரிவில் துவங்கிய சந்தைகள் பின்னர் சரிவில் இருந்து மீண்டன . பின்னர் அதே நிலைகளில் 1 % சரிவில் முடிந்தன .

இன்றைய ஆசியா சந்தைகள் அமெரிக்கா சந்தைகளின் பிரதிபலிப்பானாக சிறிதளவு சரிவில் துவங்கி உள்ளன . ஜப்பானிய அரசின் முக்கிய அறிவிப்புகள் சந்தைகளுக்கு பாதகமாக இருப்பதாக தெரிகிறது ஆதலால் ஜப்பானிய சந்தை 2 % அளவிற்கு சரிவில் துவங்கி உள்ளன .

நமது சந்தைகளை பொறுத்த வரை F& o வர்த்தகம் முடிந்தன . இந்த மாதத்தில் முதல் நாள் அதுவும் நிப்டி 5000 புள்ளிகளுக்கு அருகாமையில் உள்ளது .ஆதலால் சந்தைகளை பொறுத்த வரை செல்லிங் அதிகரிக்கும் என்றே கருதுகிறேன் . மேலும் சந்தைகள் GAP DOWN ஆக இருக்கும் பட்சத்தில் உயர்வுகள் வரும் பொழுது செல்லிங் செல்லலாம் .

லாங் நிலைகளை வைத்துள்ளவர்கள் உயர்வில் அல்லது வெளியேறி விடுவது தான் சால சிறந்தது .

இன்றைய நிலைகள் --

4980 , 4965 , 4950 -------------- 4905

5012 , 5040 , 5088 --------------- 5100

குறிப்பு
நமது சந்தைகள் தற்சமயம் சில ஆபரேட்டர்கள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் கைவசம் சிக்கியுள்ளதாக கருதுகிறேன் . தினசரி வர்த்தகர்களை குழப்பம் செய்து ஸ்டாப் லாஸ் எடுத்து பின்னர் இலக்கை எட்டுவது போன்ற செயல்கள் அடிக்கடி சந்தையில் நடந்து வருகிறது .

கவனமாக இருங்கள்

நாளைய விடுமுறை பதிவுகளில் சில காரசார விவாதங்களுடன் சந்திக்கிறேன்