வணக்கம் நணபர்களே !!
இனிய தீபாவளி திரு நாளை கொண்டாடி மகிழ்ந்தீர்களா ....
நான் முந்தய பதிவில் குறிப்பிட்டது போல சரியாக தீபாவளி அன்று சந்தைகளை சற்று இறக்கி பார்த்து சந்தோஷமடைந்துள்ளனர் . இருந்தாலும் இது ஒன்றும் பெரிய சரிவு அல்ல .. பியுச்சர் சந்தைகள் மட்டும் சரிந்து பிரிமியமில் இருந்து டிஸ்கவுன்ட் க்கு வந்துள்ளது அதுவும் 15 புள்ளிகள் வரை .......
வெள்ளியன்று அமெரிக்கா மற்றும்ஆசியா சந்தைகள் பெரிதாக ஒன்றும் நகர்வுகள் இல்லை .. அனைத்து உலக சந்தைகளும் 0.5 % வரை சரிவடைந்து முடிந்தன . திங்களன்று நமது சந்தைகள் விடுமுறை ...
நேற்றைய ஆசியா சந்தைகள் துவக்கம் முதலே நமது சந்தைகள் இல்லாததாலோ என்னவோ ஒரே வர்த்தக புள்ளிகளை வைத்து முடித்துக்கொண்டன . வர்த்தக முடிவில் ஆசியா சந்தைகள் 0.5 % வரை உயர்ந்து முடிந்தன . ஜப்பானிய சந்தைகளும் அதே போல சற்று உயர்வில் முடிந்தன .
நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் சற்று துவக்கம் முதலே நல்லதொரு உயர்வில் வர்த்தகத்தினை தொடங்கி வர்த்தகம் ஆயின பின்னர் சந்தைகள் அந்த உயர்வுகளை தாண்டி சென்று புதிய உயர்வுகளை எட்ட தொடங்கின அதற்க்கு ஏற்றார் போல் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று 0.5 % வரை உயர்வில் வர்த்தகம் ஆனது . அதனை தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகள் சற்று உயர் அளவிலே வர்த்தகம் ஆகி பின்னர் 1.5 % - 2 % வரை உயர்வில் வர்த்தகத்தினை முடித்துக் கொண்டன .
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் மீண்டும் தான் இழந்த 10000 புள்ளிகளை மீட்டது . சந்தைகள் துவக்கம் முதலே உயர்வுகளில் வர்த்தகம் ஆகின . பினர் அமெரிக்கா சந்தைகள் 1 % உயர்வில் முடிந்தன ..
இன்றைய ஆசியா மற்றும்ஜப்பானிய சந்தைகள் அமெரிக்கா சந்தைகளின் போக்கினை தொடர்ந்து ஒரு நல்ல உயர்வில் துவங்கி உள்ளன . ஆனால் சந்தைகளில் அடுத்த கட்ட நகர்வுகள் இனி சற்று குழப்பமாகவே இருக்கலாம் . ஆசியா சந்தைகளில் முடிவுகள் கூட இன்று சற்று குழப்பமாகவே முடியும் என கருத்து கிறேன் .
இன்றைய நமது சந்தைகள் சற்று சிறிய அளவிலான உயர்வுகளில் துவங்கலாம் . மேலும் நமது சந்தைகள் கடின இலக்கான 5250 நிலைகளை எட்டுவது சற்று கடினம் என்றே நினைக்கிறேன் . மேலும் அமெரிக்கா சந்தைகளின் அடுத்த கட்ட நகர்வுகள் தான் உலக சந்தைகளில் பெரிதும் எதிர் பார்க்கப்படலாம் .
நமது சந்தைகளில் இன்று ரிலியான்ஸ் நிறுவனத்தின் கோர்ட் சம்பந்தமான அறிவிப்புகள் உள்ளன .. கவனம் தேவை ....
இன்றைய நமது சந்தைகள் சற்று ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை பின் பற்றலாம் ...
நிபிட்டி நிலைகள் ----
ஆதரவு ---- 5120 , 5080 , 5050 ....
எதிர்ப்பு --- 5150 , 5185 , 5210 ... ....
நன்றி !!!
ரமேஷ்
எதிரியிடமும் அன்பு செலுத்துங்கள் .. அது எதிரியை கூட நல் வழிப்படுத்தும் நம்மையும் நல் வழிப்படுத்தும் ....
நண்பர்களே எனது இந்த பதிவில் கூறப்படும் கருத்துக்கள் மற்றும் அடிப்படை காரணங்கள் மற்றும் நுட்ப காரணிகளின் நிலைகள் அனைத்தும் எனது பார்வையில் கூறப்படுவது . இதைப்பின்பற்றி வரும் லாபம் மற்றும் இழப்பிற்கு நான் பொறுப்பாளி அல்ல ......
செவ்வாய், அக்டோபர் 20, 2009
வெள்ளி, அக்டோபர் 16, 2009
தீபாவளி சிறப்பு விழிப்புணர்வு பதிவு
வணக்கம் !!
என்னடா இது புதுமையா காலையில் தானே பதிவினை படித்தோம் உடன் திரும்பவுமா !!!!
ஆம் நண்பர்களே @@@@@@@@@
இது ஒரு விழிப்புணர்வு பதிவு இந்த பதிவினை எழுத நேற்று முன்தினமே தயாராகி விட்டேன் .இருந்தாலும் இன்றைக்கு எழுதினால் தான் சரிவரும் என முடிவெடுத்து இன்று எழுதுகிறேன் . இது சற்று சந்தைகளின் பலவீனமான போக்கை காட்டலாம் ,
மன்னிக்கவும் ...
கடந்த சில வாரங்களாக சந்தைகள் சற்று ஆண்டு உயர்வுகளில் வர்தகமாகி வருவது தாங்கள் அறிந்ததே . இருந்த போதிலும் சந்தைகளின் தற்காலிக வளர்ச்சி சற்று அதிகப்படியானது என்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .
உலக சந்தைகளும் சற்று அதே நிலைகளில் வர்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது ..இப்பொழுது நான் பேச விரும்பும் விஷயம் என்னவென்றால் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல கடந்தவார வர்த்தக தினங்களில் இருந்தே நான் சந்தையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் .
ஒரு நாளில் முடிவடைந்த புள்ளிகளில் இருந்து அடுத்த நாள் அதிகரித்து முடிந்துள்ளன . அதே போல சந்தைகளில் முதலீட்டாளர்களின் மன போக்கினையும் சற்று மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது .அதாவது அனைவரின் கவனத்தினையும் வாங்குவதன் பக்கமாக திருப்ப முயற்சிக்கப்படுவதாக கருதுகிறேன் .
உதாரணம் : ----
நமது சந்தைகள் கடந்த சில தினங்களாக உயர்நிலைகளில் முடிக்கப்படுவதும் அந்த உயர் நிலைகளை அடுத்த நாள் தாண்டி செல்லவும் செய்கின்றனர் . அவ்வாறு செய்யப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஏற்கனவே நமது சந்தைகள் கடந்து வந்த உயர்வின் அளவிற்கு பங்குகளின் விலைகள் உயரவில்லை என்ற ஆதங்கம் உள்ளது .
இந்நிலையில் சந்தைகள் மேலும் மேலும் உயர்வினை அடைவது சற்று எனக்கு சந்தேகத்தினை வலுக்கிறது . காரணம் இவ்வாறு ஏற்ப்படும் உயர்வுகள் சமயத்தில் சந்தைகளில் பெரிய தாக்கத்தினை ( சரிவினை ) உண்டாக்கலாம் . சந்தையின் உயர்வினை உறுதி செய்வது போல் மேலும் மேலும் மீடியாக்களின் மூலமாக நுட்ப வரை படங்களின் படி சந்தைகளின் இலக்குகள் சற்று அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிட தக்கது ..
மேலும் எனது கணிப்பின் படி சந்தைகள் தொடர்ச்சியாக உயர்வுகளில் அதிகரித்து செல்லப்படுவது சற்று ஆச்சர்யத்தை அளிக்கிறது .ஏன் என்றால்சந்தைகளில் கடந்த வார மற்றும் இம்மாத நுட்ப காரணி வரை படங்களை வைத்து பார்த்தால் சந்தைகள் சற்று மிகப் பெரிய ஆபத்தினை எதிர் நோக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன ..
நிப்டி கேப் உயர்வு ---
நமது சந்தைகள் கடந்த வாரம் முதல் இந்த மாதம் முழுவதும் சற்று கேப் அப் வர்த்தகத்தினை மூன்று நாட்கள் நடத்தி உள்ளன .
அவையாவன
1. 5049.22 to 5085.27
2. 4917.04 to 4925.04
3. 4551.41 to 4570.29
இவ்வாறு மூன்று கேப் அப் இந்த மாதத்தில உருவாக்கி
உள்ளது .. மேலும் மக்கள் அனைவரும் இவ்வாண்டு தீபாவளி அன்று சந்தைகள் கட்டாயம் உயர்த்தப்படும் என எதிர் பார்ப்பில் உள்ளனர் , மேலும் நான் முன்பு கூறியது போல சந்தைகள் ஒரு நாள் உயர்வுகள் ஒரு நாள் தாண்டி செல்வது சந்தைகளின் போக்கினை சற்று உயர்வு என்று கூற வைக்கும் படி உள்ளது .
அவ்வாறு 4980 . 5020 , 5040 , 5100 ஆகிய உயரிய புள்ளிகளை கடந்து சந்தைகள் சில நாட்களாக முடிக்கப்பட்டுள்ளன . இன்றைய சந்தைகள் சற்று அதையும் மீறி 5150 புள்ளிகளுக்கு மேல் முடிந்தாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை .
இன்றைய நிலவரப்படி முதலீட்டாளர்கள் நாளை அதிக அளவில் உள்ளே புதிய முதலீட்டாளர்கள் , நமது பழைய முதலீட்டாளர்கள் சந்தையில் வர்த்தகம் செய்ய ஆவலுடன் உள்ளதாக அறிகிறேன் ..
எதற்கும் நாளைய தினம் கவனமாக இருங்கள் .
சந்தைகளின் போக்கில் சென்று உடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் ..
நன்றி !!
ரமேஷ் ..
( இந்த பதிவு முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே )
என்னடா இது புதுமையா காலையில் தானே பதிவினை படித்தோம் உடன் திரும்பவுமா !!!!
ஆம் நண்பர்களே @@@@@@@@@
இது ஒரு விழிப்புணர்வு பதிவு இந்த பதிவினை எழுத நேற்று முன்தினமே தயாராகி விட்டேன் .இருந்தாலும் இன்றைக்கு எழுதினால் தான் சரிவரும் என முடிவெடுத்து இன்று எழுதுகிறேன் . இது சற்று சந்தைகளின் பலவீனமான போக்கை காட்டலாம் ,
மன்னிக்கவும் ...
கடந்த சில வாரங்களாக சந்தைகள் சற்று ஆண்டு உயர்வுகளில் வர்தகமாகி வருவது தாங்கள் அறிந்ததே . இருந்த போதிலும் சந்தைகளின் தற்காலிக வளர்ச்சி சற்று அதிகப்படியானது என்பதினை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் .
உலக சந்தைகளும் சற்று அதே நிலைகளில் வர்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது ..இப்பொழுது நான் பேச விரும்பும் விஷயம் என்னவென்றால் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல கடந்தவார வர்த்தக தினங்களில் இருந்தே நான் சந்தையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன் .
ஒரு நாளில் முடிவடைந்த புள்ளிகளில் இருந்து அடுத்த நாள் அதிகரித்து முடிந்துள்ளன . அதே போல சந்தைகளில் முதலீட்டாளர்களின் மன போக்கினையும் சற்று மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது .அதாவது அனைவரின் கவனத்தினையும் வாங்குவதன் பக்கமாக திருப்ப முயற்சிக்கப்படுவதாக கருதுகிறேன் .
உதாரணம் : ----
நமது சந்தைகள் கடந்த சில தினங்களாக உயர்நிலைகளில் முடிக்கப்படுவதும் அந்த உயர் நிலைகளை அடுத்த நாள் தாண்டி செல்லவும் செய்கின்றனர் . அவ்வாறு செய்யப்படுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே ஏற்கனவே நமது சந்தைகள் கடந்து வந்த உயர்வின் அளவிற்கு பங்குகளின் விலைகள் உயரவில்லை என்ற ஆதங்கம் உள்ளது .
இந்நிலையில் சந்தைகள் மேலும் மேலும் உயர்வினை அடைவது சற்று எனக்கு சந்தேகத்தினை வலுக்கிறது . காரணம் இவ்வாறு ஏற்ப்படும் உயர்வுகள் சமயத்தில் சந்தைகளில் பெரிய தாக்கத்தினை ( சரிவினை ) உண்டாக்கலாம் . சந்தையின் உயர்வினை உறுதி செய்வது போல் மேலும் மேலும் மீடியாக்களின் மூலமாக நுட்ப வரை படங்களின் படி சந்தைகளின் இலக்குகள் சற்று அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிட தக்கது ..
மேலும் எனது கணிப்பின் படி சந்தைகள் தொடர்ச்சியாக உயர்வுகளில் அதிகரித்து செல்லப்படுவது சற்று ஆச்சர்யத்தை அளிக்கிறது .ஏன் என்றால்சந்தைகளில் கடந்த வார மற்றும் இம்மாத நுட்ப காரணி வரை படங்களை வைத்து பார்த்தால் சந்தைகள் சற்று மிகப் பெரிய ஆபத்தினை எதிர் நோக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன ..
நிப்டி கேப் உயர்வு ---
நமது சந்தைகள் கடந்த வாரம் முதல் இந்த மாதம் முழுவதும் சற்று கேப் அப் வர்த்தகத்தினை மூன்று நாட்கள் நடத்தி உள்ளன .
அவையாவன
1. 5049.22 to 5085.27
2. 4917.04 to 4925.04
3. 4551.41 to 4570.29
இவ்வாறு மூன்று கேப் அப் இந்த மாதத்தில உருவாக்கி
உள்ளது .. மேலும் மக்கள் அனைவரும் இவ்வாண்டு தீபாவளி அன்று சந்தைகள் கட்டாயம் உயர்த்தப்படும் என எதிர் பார்ப்பில் உள்ளனர் , மேலும் நான் முன்பு கூறியது போல சந்தைகள் ஒரு நாள் உயர்வுகள் ஒரு நாள் தாண்டி செல்வது சந்தைகளின் போக்கினை சற்று உயர்வு என்று கூற வைக்கும் படி உள்ளது .
அவ்வாறு 4980 . 5020 , 5040 , 5100 ஆகிய உயரிய புள்ளிகளை கடந்து சந்தைகள் சில நாட்களாக முடிக்கப்பட்டுள்ளன . இன்றைய சந்தைகள் சற்று அதையும் மீறி 5150 புள்ளிகளுக்கு மேல் முடிந்தாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை .
இன்றைய நிலவரப்படி முதலீட்டாளர்கள் நாளை அதிக அளவில் உள்ளே புதிய முதலீட்டாளர்கள் , நமது பழைய முதலீட்டாளர்கள் சந்தையில் வர்த்தகம் செய்ய ஆவலுடன் உள்ளதாக அறிகிறேன் ..
எதற்கும் நாளைய தினம் கவனமாக இருங்கள் .
சந்தைகளின் போக்கில் சென்று உடன் லாபத்தினை உறுதி செய்யுங்கள் ..
நன்றி !!
ரமேஷ் ..
( இந்த பதிவு முதலீட்டாளர்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே )
தீபாவளி வாழ்த்துக்கள் !!!
என் இனிய நண்பர்கள் மற்றும் வலைதள வாசகர்கள் ,அருமை வலைதள நிர்வாகிகள், நண்பர்கள் அனைவர் & அவர் குடும்பத்தார் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!
நன்றி
ரமேஷ்
வணக்கம் நண்பர்களே ,
என்ன நேற்றைய சந்தைகள் எதிர் பார்த்ததை போல குழப்பமான வர்த்தகம் ஆனதா . ஆம் நண்பர்களே எனது கணிப்பின் படி உலக சந்தைகள் ஆண்டு உயர்வுகளில் சற்று திணறுவதாக கருதுகிறேன் ..
நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் முதலே சற்று சிறிய அளவிலான GAP UP இல் துவங்கி பின்னர் சற்று உயராமல் சரியதுவங்கின . பின்னர் ஆசியா சந்தைகளும் சற்று உயர்வில் இருந்து சரியதுவங்கியதும் நமது சந்தைகள் ஐரோப்பிய சந்தைகளை எதிர் நோக்கி காத்திருந்தன . ஆனால் ஐரோப்பிய சந்தைகளும் பெரிதாக உயர்வுகள் இன்றி சற்று சரிவிலேயே வர்த்தகத்தினை தொடங்கின ..
அதன் பின்னர் நமது சந்தைகள் சரிவினை காண ஆரம்பித்தன . பின்னர் நமது சந்தைகள் முடிவில் பிளாட் ( 5109 ) நிலைகளில் முடிந்தன .
ஐரோப்பிய சந்தைகள் நேற்றைய சந்தையில் சற்று பலமிலந்ததாக கருதுகிறேன் அதற்க்கு முந்தின உயர்வுகள் காரணமாக இருக்கலாம் .நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 0.5 % அளவிற்கு சரிவில் முடிந்தன .
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே முக்கிய எதிர் நிலையான 10000 புள்ளிகளை கடக்க மிகுந்த சிரமம் ஏற்ப்பட்டது . ஆனால் இடையில் சந்தைகள் அந்த புள்ளிகளை கடந்து உயர்நிலைகளில் வர்த்தகம் நடந்தன ஆனால் தொடர்ச்சியான செல்லிங் காரணமாக சந்தைகள் சற்று உயர்வுகள் தடை பட்டன .. முடிவில் அமெரிக்கா சந்தைகள் 47 புள்ளிகள் மட்டும் அதிகரித்து முடிந்தன ..
இன்றைய ஆசியா சந்தைகள் நேற்று முன்தினம் போலவே சற்று உலக சந்தைகளின் போக்கினை எதிர் நோக்கி காத்துள்ளன . ஆக நமது சந்தைகளும் பிளாட் நிலைகளில் துவங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . இருந்தாலும் நாளைய தீபாவளி சிறப்பு வர்த்தகம் முதலீட்டாளர்களிடையே ஒரு ஈர்ப்பினை உருவாக்கி உள்ளது .
ஆக இன்றைய சந்தைகள் சற்று அதிக ஏற்ற இறக்கங்களை காண இயலாது என்றே கருதுகிறேன் . ஆனால் திங்களன்று சந்தைகள் விடுமுறை ஆதலால் அதிக ஷார்ர்ட் சந்தைகளில் வர வாய்ப்புகள் உள்ளன . அதே சமயம் தீபாவளி வர்த்தகம் அன்று சந்தைகள் ஒரு அதீத உயர்வினை காண போகின்றன என்று ஒரு சாரரும் அல்லது போன வருடத்திற்கு முந்தய வருடம்போல ஒரு பெரிய சரிவும் உள்ளது என்று சாராரும் எதிர் பார்த்துள்ளனர் ..
கவனம் தேவை ...
நன்றி !!!
நிப்டி நிலைகள் --
ஆதரவு ---- 5085, 5050 , 4980 ..
எதிர்ப்பு ---- 5120 , 5150 ,5185
என்ன நேற்றைய சந்தைகள் எதிர் பார்த்ததை போல குழப்பமான வர்த்தகம் ஆனதா . ஆம் நண்பர்களே எனது கணிப்பின் படி உலக சந்தைகள் ஆண்டு உயர்வுகளில் சற்று திணறுவதாக கருதுகிறேன் ..
நேற்றைய நமது சந்தைகள் துவக்கம் முதலே சற்று சிறிய அளவிலான GAP UP இல் துவங்கி பின்னர் சற்று உயராமல் சரியதுவங்கின . பின்னர் ஆசியா சந்தைகளும் சற்று உயர்வில் இருந்து சரியதுவங்கியதும் நமது சந்தைகள் ஐரோப்பிய சந்தைகளை எதிர் நோக்கி காத்திருந்தன . ஆனால் ஐரோப்பிய சந்தைகளும் பெரிதாக உயர்வுகள் இன்றி சற்று சரிவிலேயே வர்த்தகத்தினை தொடங்கின ..
அதன் பின்னர் நமது சந்தைகள் சரிவினை காண ஆரம்பித்தன . பின்னர் நமது சந்தைகள் முடிவில் பிளாட் ( 5109 ) நிலைகளில் முடிந்தன .
ஐரோப்பிய சந்தைகள் நேற்றைய சந்தையில் சற்று பலமிலந்ததாக கருதுகிறேன் அதற்க்கு முந்தின உயர்வுகள் காரணமாக இருக்கலாம் .நேற்றைய ஐரோப்பிய சந்தைகள் முடிவில் 0.5 % அளவிற்கு சரிவில் முடிந்தன .
நேற்றைய அமெரிக்கா சந்தைகள் சற்று துவக்கம் முதலே முக்கிய எதிர் நிலையான 10000 புள்ளிகளை கடக்க மிகுந்த சிரமம் ஏற்ப்பட்டது . ஆனால் இடையில் சந்தைகள் அந்த புள்ளிகளை கடந்து உயர்நிலைகளில் வர்த்தகம் நடந்தன ஆனால் தொடர்ச்சியான செல்லிங் காரணமாக சந்தைகள் சற்று உயர்வுகள் தடை பட்டன .. முடிவில் அமெரிக்கா சந்தைகள் 47 புள்ளிகள் மட்டும் அதிகரித்து முடிந்தன ..
இன்றைய ஆசியா சந்தைகள் நேற்று முன்தினம் போலவே சற்று உலக சந்தைகளின் போக்கினை எதிர் நோக்கி காத்துள்ளன . ஆக நமது சந்தைகளும் பிளாட் நிலைகளில் துவங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . இருந்தாலும் நாளைய தீபாவளி சிறப்பு வர்த்தகம் முதலீட்டாளர்களிடையே ஒரு ஈர்ப்பினை உருவாக்கி உள்ளது .
ஆக இன்றைய சந்தைகள் சற்று அதிக ஏற்ற இறக்கங்களை காண இயலாது என்றே கருதுகிறேன் . ஆனால் திங்களன்று சந்தைகள் விடுமுறை ஆதலால் அதிக ஷார்ர்ட் சந்தைகளில் வர வாய்ப்புகள் உள்ளன . அதே சமயம் தீபாவளி வர்த்தகம் அன்று சந்தைகள் ஒரு அதீத உயர்வினை காண போகின்றன என்று ஒரு சாரரும் அல்லது போன வருடத்திற்கு முந்தய வருடம்போல ஒரு பெரிய சரிவும் உள்ளது என்று சாராரும் எதிர் பார்த்துள்ளனர் ..
கவனம் தேவை ...
நன்றி !!!
நிப்டி நிலைகள் --
ஆதரவு ---- 5085, 5050 , 4980 ..
எதிர்ப்பு ---- 5120 , 5150 ,5185
வியாழன், அக்டோபர் 15, 2009
ஹாய் நண்பர்களே !!!
நேற்றைய நமதுசந்தைகள் எதிர் பார்த்ததை போல ஒரு திடீர் உயர்வினை அடைந்ததா @@@ இன்னும் பாக்கி உள்ளது . இன்றும் உயர்வு தான் . நேற்றைய நமது சந்தைகள் முக்கிய எதிர் நிலையினை கடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் நமது சந்தைகளில் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல அதிக ஷார்ட் கவரிங் காரணமாக சந்தைகள் தொடர்து உயர்ந்து வருகிறது .
நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று அதிகப்படியா உயர்வினில் முடிந்துள்ளன . அதிகபட்சமாக் 2 % வரையில் உயர்வினில் முடிந்தன . அதனை தொடர்ந்து துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் துவக்கமே GAP UP ஆக இருந்தன .
ஐரோப்பிய சந்தைகள் 1 % வரை உயர்வில் துவங்கி வர்த்தகம் ஆனது . அதன் பின்னர் அமெரிக்கா பியுச்சர் சந்தைகளின் போக்கினை பின் தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகளும் 2 % - 2.5% வரை உயர்வில் முடிந்தன .
டவ் எட்டியது 10000 ------------------------------------
நேற்றைய அமெரிக்கா சந்தையான டவ் ஜோன்ஸ் 10000 புள்ளிகளை கடந்து புதிய இவ்வாண்டு உயர்வினை கடந்தது குறிப்பிட தக்கது . மேலும் நேற்றைய அமெரிக்கா சந்தைகளில் முக்கிய எதிர் நிலைகள் உடைபடுமா என்ற இரு வார சந்தேகங்கள் நேற்று முடிவுக்கு வந்தன ..
நேற்று வந்த ஹச் டி எப் சி காலாண்டு அறிக்கைகள் சற்று நன்றாக வந்துள்ள நிலையில் சந்தைகளில் அதன் தாக்கத்தினை இன்று எதிர் பார்க்கலாம் . மேலும் இன்று இன்பிலேசன் அறிவிப்புகள் உள்ளன . குறைந்து வரும் இன்பிலேசன் ஆதலால் அதை பற்றி குறிப்பிட எதுவும் இல்லை .
நமது சந்தைகள் நேற்றைய சந்தைகளில் 5100 புள்ளிகளை கடந்த 17 மாதங்களுக்கு பிறகு கடந்து புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது . கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் .................
உலக சந்தைகள் கூட அதே போல தான் ஒவ்வொரு சந்தைகளும் அதிக பட்ச உயர்வுகளில் வர்தகமாகி வருகின்றன என்பது குறி ---------- பிட தக்ககது .. ..
புரிகிறதா ...............
இன்றையஆசியா சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் உயர்வினைபிரதிபளிப்பதாக துவக்கம் உள்ளது . ஆசிய சந்தைகள் 1.5 % - 2.5 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதனை பின் தொடர்ந்து உயர்வில் துவங்கலாம் .. நமது சந்தைகளின் இன்றைய போக்கு சற்று குழப்பமாகவே இருக்கும் ...
நிபிட்டி நிலைகள்
ஆதரவு -- 5120 , 5085 , 5050 ...
எதிர்ப்பு -- 5120 , 5150 , 5185 ...
நேற்றைய நமதுசந்தைகள் எதிர் பார்த்ததை போல ஒரு திடீர் உயர்வினை அடைந்ததா @@@ இன்னும் பாக்கி உள்ளது . இன்றும் உயர்வு தான் . நேற்றைய நமது சந்தைகள் முக்கிய எதிர் நிலையினை கடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் நமது சந்தைகளில் முந்தய பதிவுகளில் குறிப்பிட்டது போல அதிக ஷார்ட் கவரிங் காரணமாக சந்தைகள் தொடர்து உயர்ந்து வருகிறது .
நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று அதிகப்படியா உயர்வினில் முடிந்துள்ளன . அதிகபட்சமாக் 2 % வரையில் உயர்வினில் முடிந்தன . அதனை தொடர்ந்து துவங்கிய ஐரோப்பிய சந்தைகள் துவக்கமே GAP UP ஆக இருந்தன .
ஐரோப்பிய சந்தைகள் 1 % வரை உயர்வில் துவங்கி வர்த்தகம் ஆனது . அதன் பின்னர் அமெரிக்கா பியுச்சர் சந்தைகளின் போக்கினை பின் தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகளும் 2 % - 2.5% வரை உயர்வில் முடிந்தன .
டவ் எட்டியது 10000 ------------------------------------
நேற்றைய அமெரிக்கா சந்தையான டவ் ஜோன்ஸ் 10000 புள்ளிகளை கடந்து புதிய இவ்வாண்டு உயர்வினை கடந்தது குறிப்பிட தக்கது . மேலும் நேற்றைய அமெரிக்கா சந்தைகளில் முக்கிய எதிர் நிலைகள் உடைபடுமா என்ற இரு வார சந்தேகங்கள் நேற்று முடிவுக்கு வந்தன ..
நேற்று வந்த ஹச் டி எப் சி காலாண்டு அறிக்கைகள் சற்று நன்றாக வந்துள்ள நிலையில் சந்தைகளில் அதன் தாக்கத்தினை இன்று எதிர் பார்க்கலாம் . மேலும் இன்று இன்பிலேசன் அறிவிப்புகள் உள்ளன . குறைந்து வரும் இன்பிலேசன் ஆதலால் அதை பற்றி குறிப்பிட எதுவும் இல்லை .
நமது சந்தைகள் நேற்றைய சந்தைகளில் 5100 புள்ளிகளை கடந்த 17 மாதங்களுக்கு பிறகு கடந்து புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது . கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் .................
உலக சந்தைகள் கூட அதே போல தான் ஒவ்வொரு சந்தைகளும் அதிக பட்ச உயர்வுகளில் வர்தகமாகி வருகின்றன என்பது குறி ---------- பிட தக்ககது .. ..
புரிகிறதா ...............
இன்றையஆசியா சந்தைகள் சற்று அமெரிக்கா சந்தைகளின் உயர்வினைபிரதிபளிப்பதாக துவக்கம் உள்ளது . ஆசிய சந்தைகள் 1.5 % - 2.5 % வரை உயர்வில் துவங்கி உள்ளன . நமது சந்தைகளும் அதனை பின் தொடர்ந்து உயர்வில் துவங்கலாம் .. நமது சந்தைகளின் இன்றைய போக்கு சற்று குழப்பமாகவே இருக்கும் ...
நிபிட்டி நிலைகள்
ஆதரவு -- 5120 , 5085 , 5050 ...
எதிர்ப்பு -- 5120 , 5150 , 5185 ...
புதன், அக்டோபர் 14, 2009
வணக்கம் நண்பர்களே .
ஒரு வர்த்தக தின விடுமுறைக்கு பின் துவங்கப்போகும் சந்தைகளுக்காக மிகுந்த எதிர் பார்ப்புடன் இருப்பீர்கள் என நினைக்கிறேன் . ஒன்றும் கவலை வேண்டாம் சந்தைகள் சற்று உயரத்தான் போகிறது அதை பற்றி பின்பு ..
செவ்வாய் யன்று ஐரோப்பிய சந்தைகள் நமது சந்தைகள் முடிந்ததும் சற்று அதிகமாக உயர்ந்து முடிந்தன . அமெரிக்கா சந்தைகள் சற்று பிளாட் நிலைகளில் வர்த்தகம் ஆகி பின்னர் முடிவிலும் பிளாட் நிலைகளிலே முடிந்தன .
நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வினை கண்டன ஆசியா சந்தைகள் 1 % - 2% வரை உயர்வினில் வர்தகமாகி முடிந்தன . நமது சந்தைகள் நேற்று வர்த்தக விடுமுறை ..
இன்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வினை துவக்கமாக வைத்து துவங்கி உள்ளன . அனைத்தும் 1 % - 2 % வரை உயர்வில் வர்தகமாகி வருகிறது .. மேலும் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று அதிக உயர்வினை கொண்டு துவங்கி உள்ளன . அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் தற்சமயம் 61 புள்ளிகள் உயர்வில் வர்தகமாகி வருவது குறிப்பிட தக்கது ..
நமது சந்தைகள் துவக்கம் கிட்டத்தட்ட 30 - 45 புள்ளிகள் வரை உயர்வில் துவங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . அவ்வாறு துவங்குமானால் சந்தைகள் GAP UP ஐ பில் செய்ய முயற்சித்தால் சந்தைகளில் பிரெஷ் லாங் செல்லலாம் . ஆனால் ஷார்ட் வேண்டாம் . நமது சந்தைகளில் இன்றைய வர்த்தகம் முழுவதும் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை தொடர்ந்தே இருக்கும் . மேலும் திங்களன்று வந்த ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தைகளுக்கு சாதகமாகவே வந்துள்ளன .
அதனை தொடர்ந்தே அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது ஷாட் பொசிசனை கவரிங் செய்துள்ளார்கள் . அதனால் திங்களன்று சந்தைகள் ஒரு திடீர் உயர்வினை கண்டுள்ளன . இன்றைய சந்தைகளும் வரும் நாட்களிலும் ஒரு திடீர் உயர்வுகள் வரலாம் .
மேலும் திங்களன்று அந்நிய முதலீட்டாளர்களும் மற்றும் நமது உள்நாட்டு பரஸ்பர நிதியகங்களும் புதிய வாங்குதல் படலத்தில் இறங்கி உள்ளன . ஆகவே நிபிட்டி புதிதாக வர்த்தகம் செய்பவர்களுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் இது ஏற்ற தருணம் அல்ல . தயவு செய்து சந்தையில் இருந்து விலகி இருங்கள் ..
இன்றைய நமது சந்தைகளில் வர்த்தகத்தினை மேற்க்கொள்ளும் முன் மேற்சொன்ன அனைத்து காரணங்களையும் மனதில் வைத்து வர்த்தகம் செய்ய்யுங்கள் . ( நிபிட்டி இன் ஆண்டு உயர்வு , relainace சமரசம் , அற்புதமான் ஐ ஐ பி அறிவிப்பு , குறைந்து வரும் இன்பிலேசன் , அந்நிய முதலீட்டாளர்களின் தொடர் வாங்கும் படலம் )
நிபிட்டி நிலைகள்;
அதரவு --- 5012 , 4980 , 4950 ---- 4880 .
எதிர்ப்பு ---- 5040 , 5088 , 5120 ---- 5150 .
நன்றி @
ரமேஷ்
ஒரு வர்த்தக தின விடுமுறைக்கு பின் துவங்கப்போகும் சந்தைகளுக்காக மிகுந்த எதிர் பார்ப்புடன் இருப்பீர்கள் என நினைக்கிறேன் . ஒன்றும் கவலை வேண்டாம் சந்தைகள் சற்று உயரத்தான் போகிறது அதை பற்றி பின்பு ..
செவ்வாய் யன்று ஐரோப்பிய சந்தைகள் நமது சந்தைகள் முடிந்ததும் சற்று அதிகமாக உயர்ந்து முடிந்தன . அமெரிக்கா சந்தைகள் சற்று பிளாட் நிலைகளில் வர்த்தகம் ஆகி பின்னர் முடிவிலும் பிளாட் நிலைகளிலே முடிந்தன .
நேற்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வினை கண்டன ஆசியா சந்தைகள் 1 % - 2% வரை உயர்வினில் வர்தகமாகி முடிந்தன . நமது சந்தைகள் நேற்று வர்த்தக விடுமுறை ..
இன்றைய ஆசியா சந்தைகள் சற்று உயர்வினை துவக்கமாக வைத்து துவங்கி உள்ளன . அனைத்தும் 1 % - 2 % வரை உயர்வில் வர்தகமாகி வருகிறது .. மேலும் அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் சற்று அதிக உயர்வினை கொண்டு துவங்கி உள்ளன . அமெரிக்கா பியுச்சர் சந்தைகள் தற்சமயம் 61 புள்ளிகள் உயர்வில் வர்தகமாகி வருவது குறிப்பிட தக்கது ..
நமது சந்தைகள் துவக்கம் கிட்டத்தட்ட 30 - 45 புள்ளிகள் வரை உயர்வில் துவங்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன . அவ்வாறு துவங்குமானால் சந்தைகள் GAP UP ஐ பில் செய்ய முயற்சித்தால் சந்தைகளில் பிரெஷ் லாங் செல்லலாம் . ஆனால் ஷார்ட் வேண்டாம் . நமது சந்தைகளில் இன்றைய வர்த்தகம் முழுவதும் ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் போக்கினை தொடர்ந்தே இருக்கும் . மேலும் திங்களன்று வந்த ஐ ஐ பி அறிவிப்புகள் சந்தைகளுக்கு சாதகமாகவே வந்துள்ளன .
அதனை தொடர்ந்தே அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது ஷாட் பொசிசனை கவரிங் செய்துள்ளார்கள் . அதனால் திங்களன்று சந்தைகள் ஒரு திடீர் உயர்வினை கண்டுள்ளன . இன்றைய சந்தைகளும் வரும் நாட்களிலும் ஒரு திடீர் உயர்வுகள் வரலாம் .
மேலும் திங்களன்று அந்நிய முதலீட்டாளர்களும் மற்றும் நமது உள்நாட்டு பரஸ்பர நிதியகங்களும் புதிய வாங்குதல் படலத்தில் இறங்கி உள்ளன . ஆகவே நிபிட்டி புதிதாக வர்த்தகம் செய்பவர்களுக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கும் இது ஏற்ற தருணம் அல்ல . தயவு செய்து சந்தையில் இருந்து விலகி இருங்கள் ..
இன்றைய நமது சந்தைகளில் வர்த்தகத்தினை மேற்க்கொள்ளும் முன் மேற்சொன்ன அனைத்து காரணங்களையும் மனதில் வைத்து வர்த்தகம் செய்ய்யுங்கள் . ( நிபிட்டி இன் ஆண்டு உயர்வு , relainace சமரசம் , அற்புதமான் ஐ ஐ பி அறிவிப்பு , குறைந்து வரும் இன்பிலேசன் , அந்நிய முதலீட்டாளர்களின் தொடர் வாங்கும் படலம் )
நிபிட்டி நிலைகள்;
அதரவு --- 5012 , 4980 , 4950 ---- 4880 .
எதிர்ப்பு ---- 5040 , 5088 , 5120 ---- 5150 .
நன்றி @
ரமேஷ்
திங்கள், அக்டோபர் 12, 2009
என் அன்பு முதலீட்டாளர்களே
நமது சந்தைகள் பற்றிய வழக்கம் போல ஒரு காரமான பதிவு பல முக்கிய செய்தியினை பேசலாம் என முடிவெடுத்துள்ளேன் . உங்கள் கருத்துக்களை கூறுங்கள் ...
நமது சந்தைகள் பொறுத்தவரை நல்லவர்களுக்கு காலமில்லை , ஆமாம் நண்பர்களே நானும் கடந்த சில ஆண்டுகால வர்த்தகத்திலும் சில பண்டமண்டல் ஆய்வுகளிலும் பல விசயங்கள் யோசித்து பார்த்துள்ளேன் ,
நமது சந்தைகள் என்ன தான் செபியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சந்தைகளில் பல சமயங்கள் ஆப்ரட்டிங் செயல்கள் சிறப்பாக நடக்கின்றன . அதுவும் முதலீட்டாளர்களை பங்குகளை அதிகவிலைக்கு பங்குகளை வாங்க வைத்து முடிப்பது அவர்கள் விற்கவே முடியாது ...
தினசரி முதலீட்டளர்களுக்கு அந்த தொல்லை இல்லை அதிக பட்சம் ஒரு சில வாரங்கள் தான் அதற்குள் சந்தையினை விட்டே அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் . அந்நிய முதலீட்டாளர்களை வைத்து சந்தையினை தொடர்ச்சியாக நடத்த முயற்சிக்கிறதா இந்த அரசு ??
ஒரு பதிவு போட தெரிந்த எனக்கு மற்றும் மக்களுக்கு தெரிந்த இந்த ஆபரேட்டிங் விசயங்கள் அரசுக்கும் மற்றும் செபிக்கு தெரியாதா அல்லது தெரியாதது போல செபி நடந்து கொள்கிறதா ..........
இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் அந்நிய முதலீட்டளர்களுக்கு செபி மற்றும் அரசும் அடிபணிந்து விட்டதா ? நான் கேட்கிறேன் அந்நிய முதலீட்டாளர்களை உள்ளங்கையில் வைத்து பார்க்கும் நீங்கள் ஒரு நிமிடம் மக்கள் நமது மக்கள் ஏமாளி முதலீட்டாளர்களையும் பாருங்கள் அவ்வாறு பார்க்கும் வாய்ப்புகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .
அவர்கள் நமது மக்களை சந்தைகளை விட்டே ஒழிக்கும் முன்னாவது மக்களின் நியாயமான கேள்விகளை ஏற்று பதிலளிக்கும் நிதி அமைச்சகம் ? ...
நமது சந்தைகள் ஒரேஅடியாக சரிந்த பொழுது நமது நிதியமைச்சர் கூறியது இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளது பயம் வேண்டாம் என்றார் . அதன் பின்னர் தான் சந்தைகள் அதிகமாக சரிந்து உயரதுவங்கின . சரி அப்படி தான் சரிந்தாலும் என்ன பங்குகள் விலைகள் 80 % - 90 % வரை சரிவடையுமா ?
மக்கள் சந்தைக்குள் வர பயப்படும் 2008 இல் வெளியான பி நோட்ஸ் விவகாரத்தில் அரசு இன்றும் பல விசயங்களை பகிரங்கப்படுத்த மறுப்பது ஏன் ?
மக்களுக்கு தெரிய தா ? சந்தைகளில் நடப்பது ? ஏன் வெளியிடவில்லை ? இல்லை வெளியிட முடியாத வாறு செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அந்நிய முதலீட்டளர்களுக்கு வழங்க்கப்பட்டுவிட்டதா ?
மேலும் நான் பார்த்தவரை இந்த " buy back " அறிவிப்புகள் சந்தைகள் மிக குறைந்த புள்ளிகளில் அறிவிப்புகள் வெளியிடப்படும் . அதுவும் போனால் போகட்டும் என்பது போல நிறுவனங்கள் செபியிடம் அனுமதி கேட்டுள்ளதாக் செய்திகள் வரும் ஏன் உயர்வில் அந்த வேலையினை செய்யவேண்டியது தானே ?
அதுவும் அப்பொழுது தான் நிறுவனம் காலாண்டு முடிவுகள் போட்டு முதலீட்டாளர்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியும் . அப்பொழுது தான் நிறுவன ப்ரமொட்டர்கள் தங்களிடம் உள்ள பங்குகளின் எண்ணிகையை அதிகரிப்பார்கள் இதை கவனித்ததா அரசு ? திருப்பி யாரேனும் கேட்டால் அந்த பங்கு 0 கே சென்று விடும் என்பது போல செபி அறிவிப்பு வெளியிடும் ....
இதே போல அதிக பட்ச புள்ளிகளில் தான் போனஸ் மற்றும் நிறுவனங்களை இணைத்தல் போன்ற செயல்களுக்கு நிறுவனங்கள் ஈடு படும் . செபியும் அனுமதி அளிக்கும் ஏன் செபி இதை தடுக்க கூடாதா ? அல்லது செபிக்கு இதிலும் சம்பந்தம் உள்ளதா ? ( எனக்கு விளங்கவில்லை )
சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் செல்லிங் அதிகரித்து விட்டது அதனால் அண்ட் நிறுவனம் buy back செய்கிறது என்று பதில் வரும் ஏன் தெரியாதா அரசுக்கு அந்நிய முதலீட்டளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் பங்குகள் வாங்கி விற்க அனுமதி உண்டு என்று ........
மேலும் அவ்வாறு அந்நிய முதலீட்டளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது மேலும் சில பல விசயங்களில் அதிகரித்துக் கொண்டே வருவது ஏன் ?
இப்பொழுது உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட அந்நிய முதலீட்டலர்களுடன் கை கோர்க்கிறது ... ஏன் இந்த அநாகரீகமற்ற செயல்கள் உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனதினர்களே ??
மேலும் சந்தைகளின் வர்த்தக நேரத்தில் செபி பங்குகளின் தாறுமாறாக உயர்வது கண்டும் அதனுக்குரிய உடனடி நடவடிக்கை எடுக்காமல் பங்குகளின் வர்த்தகத்தில் ------------------------------------------
மாற்றங்களை உடனடியா செய்தி வெளியிட்டு லோ பரீஸ் ஆகி விடும் மக்கள் அந்த பங்கினை விற்க படாதபாடு பட வேண்டும் . உதாரணம் பிரமிட் , ஆஸ்த்ரால் கோக் சத்யம் எக்ஸ்ல் டேலேகோம் நிசான் காப்பர் , -- இந்த மாதிரியான பிரச்சனைகளையும் உடன் வெளியிடாமல் மக்களுக்கு சாதகமாக நல்லதொரு முடிவினை நிறுவனத்திடம் பேசி முடிவு கண்டவுடன் தவறான செய்திகளை வெளியிட வேண்டும் .
அவ்வாறு செய்வதில்லை உடன் தவறான செய்திகளை பரப்பி எல்லாம் ....................
ஒரு நிறுவனம் புதிதாக பங்கு வெளிஎட்டில் இறங்கும் பொழுது செபி தானே அவர்களது ஆவங்களை பார்த்து அனுமதி வழங்குகிறது . அவர்களுக்கு தெரியாத மேற்சொன்ன பிரச்சனைகள் ..............
இவ்வளவும் இருக்க நமது மக்களை இன்னும் சூடேற்ற நலல் செய்திகளை பரப்பும் மீடியாக்கள் ( அவனுகளை உயிரோட கொளுத்தனும் மன்னித்து விடுங்கள் கோபத்தினை கட்டுப்படுத்த முடியவில்லை , பரதேசிகள் என்னமோ சந்தைகள் அவங்கப்பன் சொத்து மாதிரி தான் எல்லா பரபரப்பையும் வெளியிட்டு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் ..... என் மக்கள் காப்பற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கதிலே சற்று கோபம் .........
மீடிய நிறுவனங்கள் பல இதே போல தான் செய்திகளை தவறாக வெளியிடுவது மற்றும் மேற்சொன்ன பரபரப்புகளை வெளியிட்டு சந்தைகளில் சில குளறுபடிகளை உண்டாக்குகிறார்கள் . அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் மறுக்கிறதா அல்லது புகார்கள் எதுவும் இல்லையா ?
மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் தாங்கள் அறிந்ததே அனைவரும் சேர்ந்து இதை அரசுக்கு புகார் இட வேண்டும் அப்பொழுது தான் நான் எதிர் பார்த்து மாதிரி நம் மண்ணின் மணிகள் காப்பாற்ற படுவார்கள் ....
செய்வீர்களா ................
நன்றி !!
ரமேஷ்
நமது சந்தைகள் பொறுத்தவரை நல்லவர்களுக்கு காலமில்லை , ஆமாம் நண்பர்களே நானும் கடந்த சில ஆண்டுகால வர்த்தகத்திலும் சில பண்டமண்டல் ஆய்வுகளிலும் பல விசயங்கள் யோசித்து பார்த்துள்ளேன் ,
நமது சந்தைகள் என்ன தான் செபியின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் சந்தைகளில் பல சமயங்கள் ஆப்ரட்டிங் செயல்கள் சிறப்பாக நடக்கின்றன . அதுவும் முதலீட்டாளர்களை பங்குகளை அதிகவிலைக்கு பங்குகளை வாங்க வைத்து முடிப்பது அவர்கள் விற்கவே முடியாது ...
தினசரி முதலீட்டளர்களுக்கு அந்த தொல்லை இல்லை அதிக பட்சம் ஒரு சில வாரங்கள் தான் அதற்குள் சந்தையினை விட்டே அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் . அந்நிய முதலீட்டாளர்களை வைத்து சந்தையினை தொடர்ச்சியாக நடத்த முயற்சிக்கிறதா இந்த அரசு ??
ஒரு பதிவு போட தெரிந்த எனக்கு மற்றும் மக்களுக்கு தெரிந்த இந்த ஆபரேட்டிங் விசயங்கள் அரசுக்கும் மற்றும் செபிக்கு தெரியாதா அல்லது தெரியாதது போல செபி நடந்து கொள்கிறதா ..........
இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன் அந்நிய முதலீட்டளர்களுக்கு செபி மற்றும் அரசும் அடிபணிந்து விட்டதா ? நான் கேட்கிறேன் அந்நிய முதலீட்டாளர்களை உள்ளங்கையில் வைத்து பார்க்கும் நீங்கள் ஒரு நிமிடம் மக்கள் நமது மக்கள் ஏமாளி முதலீட்டாளர்களையும் பாருங்கள் அவ்வாறு பார்க்கும் வாய்ப்புகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .
அவர்கள் நமது மக்களை சந்தைகளை விட்டே ஒழிக்கும் முன்னாவது மக்களின் நியாயமான கேள்விகளை ஏற்று பதிலளிக்கும் நிதி அமைச்சகம் ? ...
நமது சந்தைகள் ஒரேஅடியாக சரிந்த பொழுது நமது நிதியமைச்சர் கூறியது இந்திய பொருளாதாரம் நன்றாக உள்ளது பயம் வேண்டாம் என்றார் . அதன் பின்னர் தான் சந்தைகள் அதிகமாக சரிந்து உயரதுவங்கின . சரி அப்படி தான் சரிந்தாலும் என்ன பங்குகள் விலைகள் 80 % - 90 % வரை சரிவடையுமா ?
மக்கள் சந்தைக்குள் வர பயப்படும் 2008 இல் வெளியான பி நோட்ஸ் விவகாரத்தில் அரசு இன்றும் பல விசயங்களை பகிரங்கப்படுத்த மறுப்பது ஏன் ?
மக்களுக்கு தெரிய தா ? சந்தைகளில் நடப்பது ? ஏன் வெளியிடவில்லை ? இல்லை வெளியிட முடியாத வாறு செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் அந்நிய முதலீட்டளர்களுக்கு வழங்க்கப்பட்டுவிட்டதா ?
மேலும் நான் பார்த்தவரை இந்த " buy back " அறிவிப்புகள் சந்தைகள் மிக குறைந்த புள்ளிகளில் அறிவிப்புகள் வெளியிடப்படும் . அதுவும் போனால் போகட்டும் என்பது போல நிறுவனங்கள் செபியிடம் அனுமதி கேட்டுள்ளதாக் செய்திகள் வரும் ஏன் உயர்வில் அந்த வேலையினை செய்யவேண்டியது தானே ?
அதுவும் அப்பொழுது தான் நிறுவனம் காலாண்டு முடிவுகள் போட்டு முதலீட்டாளர்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியும் . அப்பொழுது தான் நிறுவன ப்ரமொட்டர்கள் தங்களிடம் உள்ள பங்குகளின் எண்ணிகையை அதிகரிப்பார்கள் இதை கவனித்ததா அரசு ? திருப்பி யாரேனும் கேட்டால் அந்த பங்கு 0 கே சென்று விடும் என்பது போல செபி அறிவிப்பு வெளியிடும் ....
இதே போல அதிக பட்ச புள்ளிகளில் தான் போனஸ் மற்றும் நிறுவனங்களை இணைத்தல் போன்ற செயல்களுக்கு நிறுவனங்கள் ஈடு படும் . செபியும் அனுமதி அளிக்கும் ஏன் செபி இதை தடுக்க கூடாதா ? அல்லது செபிக்கு இதிலும் சம்பந்தம் உள்ளதா ? ( எனக்கு விளங்கவில்லை )
சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் செல்லிங் அதிகரித்து விட்டது அதனால் அண்ட் நிறுவனம் buy back செய்கிறது என்று பதில் வரும் ஏன் தெரியாதா அரசுக்கு அந்நிய முதலீட்டளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் பங்குகள் வாங்கி விற்க அனுமதி உண்டு என்று ........
மேலும் அவ்வாறு அந்நிய முதலீட்டளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது மேலும் சில பல விசயங்களில் அதிகரித்துக் கொண்டே வருவது ஏன் ?
இப்பொழுது உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட அந்நிய முதலீட்டலர்களுடன் கை கோர்க்கிறது ... ஏன் இந்த அநாகரீகமற்ற செயல்கள் உள்நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனதினர்களே ??
மேலும் சந்தைகளின் வர்த்தக நேரத்தில் செபி பங்குகளின் தாறுமாறாக உயர்வது கண்டும் அதனுக்குரிய உடனடி நடவடிக்கை எடுக்காமல் பங்குகளின் வர்த்தகத்தில் ------------------------------------------
மாற்றங்களை உடனடியா செய்தி வெளியிட்டு லோ பரீஸ் ஆகி விடும் மக்கள் அந்த பங்கினை விற்க படாதபாடு பட வேண்டும் . உதாரணம் பிரமிட் , ஆஸ்த்ரால் கோக் சத்யம் எக்ஸ்ல் டேலேகோம் நிசான் காப்பர் , -- இந்த மாதிரியான பிரச்சனைகளையும் உடன் வெளியிடாமல் மக்களுக்கு சாதகமாக நல்லதொரு முடிவினை நிறுவனத்திடம் பேசி முடிவு கண்டவுடன் தவறான செய்திகளை வெளியிட வேண்டும் .
அவ்வாறு செய்வதில்லை உடன் தவறான செய்திகளை பரப்பி எல்லாம் ....................
ஒரு நிறுவனம் புதிதாக பங்கு வெளிஎட்டில் இறங்கும் பொழுது செபி தானே அவர்களது ஆவங்களை பார்த்து அனுமதி வழங்குகிறது . அவர்களுக்கு தெரியாத மேற்சொன்ன பிரச்சனைகள் ..............
இவ்வளவும் இருக்க நமது மக்களை இன்னும் சூடேற்ற நலல் செய்திகளை பரப்பும் மீடியாக்கள் ( அவனுகளை உயிரோட கொளுத்தனும் மன்னித்து விடுங்கள் கோபத்தினை கட்டுப்படுத்த முடியவில்லை , பரதேசிகள் என்னமோ சந்தைகள் அவங்கப்பன் சொத்து மாதிரி தான் எல்லா பரபரப்பையும் வெளியிட்டு மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் ..... என் மக்கள் காப்பற்றப்பட வேண்டும் என்ற ஆதங்கதிலே சற்று கோபம் .........
மீடிய நிறுவனங்கள் பல இதே போல தான் செய்திகளை தவறாக வெளியிடுவது மற்றும் மேற்சொன்ன பரபரப்புகளை வெளியிட்டு சந்தைகளில் சில குளறுபடிகளை உண்டாக்குகிறார்கள் . அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் மறுக்கிறதா அல்லது புகார்கள் எதுவும் இல்லையா ?
மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் தாங்கள் அறிந்ததே அனைவரும் சேர்ந்து இதை அரசுக்கு புகார் இட வேண்டும் அப்பொழுது தான் நான் எதிர் பார்த்து மாதிரி நம் மண்ணின் மணிகள் காப்பாற்ற படுவார்கள் ....
செய்வீர்களா ................
நன்றி !!
ரமேஷ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)